மக்கள் நலனுக்காக 11 நாட்கள் கடினமான விரதம் இருக்கும் பவன் கல்யாண்

June 28, 2024 at 9:44 am
pc

ஆந்திர மாநில துணை முதலமைச்சரான பவன் கல்யாண் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 11 நாட்கள் விரதம் இருக்கிறார்.

11 நாட்கள் விரதம்

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அம்மாநில துணை முதலமைச்சராக பதவியேற்றார். 

இந்நிலையில், தனது ஆந்திர மாநில மக்களின் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நலன் கருதி நேற்று முதல் 11 நாட்கள் வரை வாராஹி தீக்ஷை விரதத்தை பவன் கல்யாண் மேற்கொள்கிறார்.

வாராஹி அம்மனை வழிபடும் இவர் 11 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இந்த வாராஹி தீக்ஷை விரதத்தை கடைபிடிப்பது கடினமானது என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே போல வாராஹி தேவியை பவன் கல்யாண் வழிபட்டார். அப்போது வாராஹி விஜய யாத்திரையைத் தொடங்கி தீட்சை எடுத்தது குறிப்பிடத்தக்கது.   

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website