மனைவிக்கு முதல் பிரசவம்..! ஊரடங்கால் மறுக்கப்பட்ட இ பாஸ்..!! மருத்துவமனைக்கு செல்லமுடியாத விரக்தியில் கணவன் செய்த விபரீத செயல்..!!

July 2, 2020 at 4:15 pm
pc

காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த ரோஜா என்பவரை திருமணம் கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில் மனைவி கர்ப்பமானதை அடுத்து பிரசவத்திற்காக அவரது தாய் வீடு இருக்கும் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கிடையே குழந்தை விரைவில் பிறந்துவிடும் என மருத்துவர்கள் சொன்னதை அடுத்து இந்த சந்தோஷமான விஷயத்தை கணவரிடம் தெரிவித்துள்ளார் ரோஜா. மேலும் பிரசவத்தின்போது கணவர் அருகில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்ட ரோஜா கணவரை சென்னைக்கு அழைத்துள்ளார்.

தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் விக்னேஸ்வரன் சென்னைக்கு வரமுடியவில்லை. பலமுறை இபாஸ் பெற விண்ணப்பித்தபோதும் அது கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த விக்னேஸ்வரன் விரக்தியில் இருந்துள்ளார்.

இதற்கிடையே நேற்று இரவு மனமுடைந்த விக்னேஸ்வரன் தனது வீட்டில் தூ க்கிட் டு த ற்கொ லை செய்து கொண்டார். இவரை பார்க்க நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்தபோதுதான் விக்னேஸ்வரன் தூக்கில் தொங்கியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சிவகாஞ்சி போலீசுக்கு அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விக்னேஸ்வரனின் ச டலத் தை கைப்பற்றி பி ரேத ப ரிசோ தனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் அரசாங்கம் அறிவுரையை ஏற்று சிறிது நாட்கள் வீட்டிலேயே விக்னேஸ்வரன் இருந்திருந்தால் அடுத்த மாதம் குழந்தையை பார்த்து சந்தோஷப்பட்டிருப்பார். குழந்தையும் தந்தையை பார்த்து சந்தோஷத்தில் சிரித்திருக்கும். இவர் எடுத்த அவசர முடிவால் கணவனை பெண் இழந்துள்ளார். தந்தையை குழந்தை இழந்துள்ளது

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website