வளைகாப்பு நிகழ்ச்சிக்கு கள்ளக்காதலியுடன் வந்த கணவன்…! மனைவியும் மகனும் கொலை செய்த சம்பவம்.

March 7, 2022 at 6:24 pm
pc

கோவை  மாவட்டம் ஒண்டிப்புதூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் நாராயணசாமி(வயது55). தச்சுதொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி(50). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நாராயணசாமிக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் மனைவி ராஜேஸ்வரிக்கும், நாராயணசாமிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று  மூத்த மகன் ராஜ்குமாரின் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கோவில் மண்டபத்தில் நடைபெற்று உள்ளது. அங்கு தனது கள்ளக்காதலியுடன் நாராயணசாமி வந்துள்ளார். இதனை கண்டு மனைவி ராஜேஸ்வரியும் மகன் ராஜ்குமாரும் கடும் ஆத்திரம் அடைந்தனர்.
இதனால் கோவிலில் இருந்து நாராயணசாமி வீட்டுக்கு சென்று உள்ளார்.  அப்போது மனைவி ராஜேஸ்வரி, மகன் ராஜ்குமாரும் வீட்டுக்கு சென்றனர்.
வீட்டில் தனியாக இருந்த நாராயணசாமியை மகனும் மனைவியும் கண்டித்து உள்ளனர். இதனை நாராயணசாமி கேட்பதாக தெரியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மனைவியும் மகனும் அருகில் இருந்த அரிவாளை எடுத்து நாராயணசாமியை சரிமாரியாக வெட்டியும் குத்தியும் உள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேயே நாராயணசாமி உயிரிழந்து உள்ளார். 
பின்னர் இது குறித்து அறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது உயிரிழந்த நாராயணசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கணவனை கொலை செய்த மனைவி மற்றும் மகனை கைது செய்தனர்.
கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவனை மனைவியும் மகனும் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website