விஜய்சேதுபதியை உதைத்தால் பரிசு.. அறிவித்த அரசியல்வாதிக்கு நீதிமன்றம் தண்டனை..!

August 9, 2024 at 12:53 pm
pc

விஜய் சேதுபதியை உதைத்தால் 1001 ரூபாய் பரிசு தருவேன் என அரசியல்வாதி ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் இது குறித்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசி விட்டதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தனது சமூக வலைதள பக்கத்தில் ’தேவர் ஐயாவை இழிவுபடுத்திய நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு 1001 ரூபாய் பரிசு வழங்கப்படும்’ என்று பதிவு செய்திருந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு செய்த இந்த பதிவு குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளில் அர்ஜுன் சம்பத் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நேற்று இந்த வழக்கின் விசாரணையில் அர்ஜூன் சம்பத் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு ரூபாய் 4000 ரூபாய் அபராதம் என நீதிபதி தண்டனை விதித்தார். இந்த தண்டனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website