வெறும் ஒரு ரூபாயில் கழுத்து வலியை போக்கலாம்! இனி வலி நிவாரணி தேவை இல்லை!!

November 28, 2022 at 6:57 am
pc

தொடர்ந்து கணினி மற்றும் செல்போன் உபயோகிக்கும் நபர்களுக்கு கழுத்து வலி ஏற்படும். அவ்வாறு இருப்பவர்கள் வலியை போக்குவதற்கு அதிகளவு பெயின் கில்லர் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வர். அல்லது வலி நிவாரணி போன்றவற்றை எடுப்பது வழக்கமாக வைத்திருப்பர். ஆனால் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் கழுத்து வலிக்கு தேவை இல்லாமல் செலவு செய்ய தேவையில்லை.


இதற்கு ஒரே தீர்வு வெற்றிலை வைத்தியம். ஒன்று அல்லது இரண்டு வெற்றிலைகளை எடுத்து அதனை பன்னீரில் நனைத்து கொள்ள வேண்டும். வெற்றிலையின் நரம்பு பகுதியானது கழுத்தின் மேல் இருக்கும் படி போட்டுக் கொள்ள வேண்டும். பின்பு விளக்கெண்ணை சிறிதளவு ஊற்றி சூடு படுத்தி கொள்ள வேண்டும். பின்பு அவ்வாறு சூடு உள்ள எண்ணையில் இந்த வெற்றிலையை போட வேண்டும். சற்று நேரத்திலேயே வெற்றிலை நிறம் மாறி வதங்கும் நிலை வந்துவிடும்.


அந்த நேரத்தில் அதனை கழுத்தில் போட்டு வர முற்றிலும் கழுத்து வலி குணமாகும். மேலும் சிறிதளவு ஐஸ் கட்டியை எடுத்து கழுத்தின் பின்புறத்தில் உள்ள நடுப்பகுதியில் அதாவது குவிப்போல் இருக்கும் பகுதியில் மசாஜ் செய்து வர ரத்த ஓட்டம் சீரடைந்து வலி குறையும்.
கழுத்து வலியால் பலரும் உடற்பயிற்சி செய்வது வழக்கம். ஆனால் தலை சுற்றல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் கழுத்து வலிக்கான உடற்பயிற்சி செய்வதை தவிர்த்துக் கொள்ளலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website