15 நிமிஷத்துல உங்க முகம் பளிச்சின்னு ஆகணுமா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க …!!

July 5, 2022 at 11:12 am
pc

வெயில் மற்றும் சுற்றுபுறச் சூழ் நிலையால் முகம் கறுத்து திரும்பவும் பழைய நிலமைக்கு வரமுடியாதபடி பெரும்பாலோருக்கு இருக்கும். உடல் ஒரு நிறம், வெயில் படுமிடம் ஒரு நிறம் என தோற்றமளிக்கும்.
பராமரிப்பு இல்லையெனால் கருத்த முகத்தில் நிரந்தர கருமை குடிய்றிவிடும். இதற்கு ஒரு நல்ல தீர்வு இருக்கிறது. தினமும் சில நிமிடங்களில் இந்த குறிப்பை செய்து பாத்தால் ஒரே வாரத்தில் மாற்றம் காணலாம்.

தேவையானவை

தக்காளி – 1
பால் – சிறிது.

செய்முறை

தக்காளியை நன்றாக கழுவி அதன் தோலை உரித்து உள்ளிருக்கும் சதைப் பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த சதைபகுதியை மசிக்கவும். விதைகளை அகற்ற அதனை வடிகட்டி அதன் சாற்றினை எடுக்கவும்.
இந்த சாறுடன் சம அளவு காய்ச்சாத பாலை எடுத்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு பஞ்சினால் நனைத்து முகம் கழுத்து போன்ற பகுதிகளில் தடவவும்.
15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். தினமும் இப்படி செய்தால் முகத்திலுள்ள கருமை மறைந்து முகம் பளிச்சிடும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website