2 மாதமாக ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில் அக்கா தங்கை இருவரை 8 பேர் சேர்ந்து செய்த கொடூர செயல் !

July 31, 2020 at 5:14 pm
pc

சத்தீஸ்கர் மாநிலத்தில் அக்கா தங்கை என இரு சிறுமிகளை 8 இளைஞர்கள் இரண்டு மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் மாவட்டத்தின் பாலாரி பகுதியில் கடந்த மே 31 இரவு சுமார் 11.30 மணியளவில் 14 மற்றும் 16 வயதுடைய இரு சிறுமிகள் தங்கள் ஆண் நண்பர்களுடன் பைக்கில் வெளியே சென்றுள்ளனர். அதனை சிறுமியின் உறவினர் இளைஞர் மற்றும் அவரின் நண்பர்கள் நோட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் அக்கா தங்கை இருவரும் அதிகாலை 2 மணியளவில் ஊருக்கு திரும்பி வரும் போது ஊருக்கு வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் 8 பேர் அடங்கிய அந்த கும்பல் சிறுமியின் ஆண் நண்பர்களை அடித்து விரட்டியுள்ளனர். மேலும் இவ்வாறு இரவு நேரங்களில் வெளியே செல்வதை அப்பா அம்மாவிடம் கூறப் போவதாகவும் சிறுமிகளின் சொந்தக்காரர் மிரட்டியுள்ளார். சிறுமிகள் எதுவும் சொல்லவேண்டாம் என கெஞ்சி அழுதுள்ளனர். மேலும் அங்கிருந்து தப்பிக்க முற்படும் போது இளைஞர் கும்பல் சிறுமிகளின் முடியை பிடித்து இழுத்து ஆள் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை 8 பேர் கொண்ட கும்பல் 2 மணிநேரம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும், அதனை வீடியோ எடுத்தும் உள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த வீடியோவை காட்டி சுமார் 2 மாதங்கள் தினமும் அச்சிறுமிகளை தனியே வரவழைத்து பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில் ஜூலை 29 அன்று 8 பேர் கொண்ட கும்பலில் அல்லாத ஒருவர் தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். இந்த கொடூரத்திற்கு எப்படியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைத்த இரு சிறுமிகளில் ஒருவர் கடந்த புதன்கிழமை அன்று பெண்கள் ஹெல்ப்லைனை டயல் செய்து உதவி கேட்டுள்ளார்

அதையடுத்து இந்த சம்பவம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளின் நிலைக்கு காரணமாகிய 11 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது ஐபிசி மற்றும் போக்ஸோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website