30 வயதை நெருங்கிவிடீர்களா ?? குழந்தை பெற்றுக்கொள்ள தள்ளிபோடுகிறீர்களா ?? இது உங்களுக்காக தான் !!

January 23, 2020 at 10:38 pm
pc

இந்தியாவில் பல தம்பதிகள் குழந்தையின்மையால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் சுற்றி இருப்பவர்களிடம் எரிச்சலோடு சில சமயம் பேசுவார்கள். இருபதுகளின் ஆரம்பத்தில் தான் ஆண், பெண் இருவரும், 100 சதவீதம் குழந்தைப் பெறுவதற்கான உடல் மற்றும் மனத்தகுதிகள் இருக்கும். இந்த வயதில் தான் பெண்களுக்கு, 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் முட்டைகள் வரை கருவில். இருபதுகளின் கடைசிகளில், பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான உடல் வலிமை குறைய ஆரம்பித்துவிடும்.

30 வயதை தொட்டுவிட்டால் குழந்தை பெறுவதற்கு 75 சதவீத வாய்ப்புகளே உள்ளது என பல ஆராய்ச்சிகள் கூறுகின்றது. ஏனெனில், ஆணின் விந்தணுவின் உற்பத்தியும் வேகமும் குறைவதில்லை. முப்பதுகளின் ஆரம்ப வயதில் இருந்து ஒவ்வொரு மாதவிடாய் காலத்திலும், பெண்களின் கருமுட்டைகளின் எண்ணிக்கை, ஆயிரக்கணக்கில் குறையத் துவங்கும். இதுதான் பெண்களுக்கு. 30 வயதில், குழந்தைப்பேறுக்கான வாய்ப்புகள் குறைய காரணம். இயற்கையாக 40 முதல் 45 வயதிற்குள், பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாயே நின்று விடுகிறது. அப்படியே கருமுட்டை உருவாகினாலும், வலிமை குறைவாக தான் இருக்கும். அதேநேரம், ஆணின் விந்து உற்பத்தியும், வேகமும் குறைந்து விடும். அதனால் நாற்பதுகளில் குழந்தைப் பேறு என்பது மிகவும் சிரமம்.

45 வயதிற்கு மேல் இருக்கும் மிக குறைவான எண்ணிக்கையில் உள்ள பெண்கள் அதுவும், சிலருக்கு சரியான மருத்துவ சிகிச்சைகளின் மூலமாக கருத்தரிக்க செய்கின்றனர். கருமுட்டையின் வலுவின்மையும், மாதவிடாய் முடியும் தருவாய் என்பதாலும், கருத்தரிப்பில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், ஆணின் விறைப்பு தன்மை மற்றும் வேகம் மிகவும் குறைந்திருக்கும். இதனால், குழந்தைப் பேறு அடைவது மிக மிக குறைகிறது. எனவே சரியான காலத்தில் கல்யாணம் முடித்து குழந்தை பாக்கியத்தை பெற காலம் கடத்தாதீர்கள். அதன் விளைவுகள் மோசமாக இருக்கலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website