6 வயது குழந்தையை கழுத்து நெரித்து கொன்ற சித்தி – கேரளாவில் நடந்தது என்ன?

December 21, 2024 at 12:40 pm
pc

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் சூனியம் செய்ததாக சந்தேகிக்கப்படும் வழக்கில் ஆறு வயது சிறுமியை அவரது சித்தி கழுத்தை நெரித்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொத்தமங்கலம் அருகே உள்ள நெல்லிக்குழியில் வசித்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஜாஸ் கான் என்பவரின் மகள் முஸ்கான் என்ற சிறுமி. 

விசாரணையின் போது சித்தி அனீஷா குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அஜாஸ் கானின் இரண்டாவது மனைவி தான் அனீஷா.

படுக்கையில் அசையாமல் படுத்திருந்ததை பார்த்த அவரது தந்தை, சந்தேகித்துள்ளார். அதன்பின்னரே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.  

மேலும் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் சிறுமி முஸ்கான் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, புதன்கிழமை இரவு கணவர் இல்லாதபோது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதை அனீஷா ஒப்புக்கொண்டார். அனீஷாவின் மூட நம்பிக்கையால் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் கருதுகின்றனர். 

உள்ளூர் சூனியக்காரரான நௌஷாத், அனீஷாவை கொலை செய்ய தூண்டியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே நௌஷாத்திடம் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website