ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கு ஐந்தாவது தேசிய விருது உறுதி-‘இந்தியன் 2’ -காமெடி நடிகர் ரோபோ சங்கரின் வைரல் பதிவு..

July 13, 2024 at 12:36 pm
pc

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் 1500 கோடி வசூல் செய்யும் என்றும் கமல்ஹாசனுக்கு இன்னொரு தேசிய விருது உறுதி என்றும் காமெடி நடிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

‘இந்தியன் 2’ திரைப்படம் இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் பிரம்மாண்டமான காட்சிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ் காமெடி நடிகர் ரோபோ சங்கர் ’இந்தியன் 2’ படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். 28 ஆண்டுகளுக்கு முன் ’இந்தியன்’ படம் பார்த்தேன், இப்போது ’இந்தியன் 2’ படத்தையும் குடும்பத்துடன் பார்த்தேன்.

’இந்தியன் 2’ படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜையும் செய்துள்ளேன். இந்த படம் கட்டாயம் மிகப்பெரிய வெற்றி பெறும், 1500 கோடி ரூபாய் வசூல் செய்யும் , ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கு ஐந்தாவது தேசிய விருது உறுதி என்று கூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website