மது அருந்திவிட்டு ஓவியா வெளியிட்ட புகைப்படம்!!கொந்தளிக்கும் ரசிகர்கள்..


நடிகை ஓவியா மது அருந்திவிட்டு இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவு ஏராளமான லைக்ஸை குவித்துள்ளது.
நடிகை ஓவியா
தமிழ் சினிமாவில் களவாணி திரைப்படத்தில் அறிமுகமானார் தான் நடிகை ஓவியா. இதன் பின்பு பல படங்களில் நடித்து வந்த இவர், பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய நாயகியானார்.
இதில் ஆரவ் என்பவரைக் காதலித்து சர்ச்சையில் சிக்கிய ஓவியா, பிக்பாஸ் வீட்டிற்கு ஒரு இடத்தில் கூட போலியாக நடிக்காமல் இருந்தது ரசிகர்கள் மனதில் இன்றும் மிகப்பெரிய இடத்தில் இருக்கின்றார்.
தற்போது அவர் ’சம்பவம்’ ’ராஜ பீமா’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படம் வெளியிட்டு வருகின்றார்.
மது அருந்திவிட்டு அட்வைஸ்
இந்நிலையில் ஓவியா சரக்கு அடித்துக் கொண்டே அசைவ உணவு சாப்பிடும் புகைப்படத்தை பதிவு செய்து ’குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது’ என்றும் தெரிவித்துள்ளார்.
ஓவியாவின் இந்த பதிவுக்கு ’நன்றாக வாழ்க்கையை அனுபவியுங்கள், நீங்கள் தான் உண்மையாக இருக்கிறீர்கள்’ என்றும் ’நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொன்றும் அபாரமாக உள்ளது’ என்றும் ’பொறுப்புள்ள குடிமகள்’ என்றும் ’இயற்கையாகவே நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள்’ என்றும்’ எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்க்கையை அனுபவியுங்கள்’ என்று பல ரசிகர்கள் பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.