சமந்தாவை பழிவாங்க இப்படி செய்தாரா நாக சைதன்யா?வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் ..

August 13, 2024 at 1:08 pm
pc

நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. அதனை நாகார்ஜுனாவே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இதனையடுத்து அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். இந்தச் சூழலில் நிச்சயதார்த்தம் நடந்திருக்கும் ஆகஸ்ட் 8ஆம் தேதி பற்றி புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவர் முதலில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நாக சைதன்யா பிறந்தார். ஆனால் சில காரணங்களால் அந்தப் பெண்ணை விவாகரத்து செய்துவிட்டு நடிகை அமலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்தார். அவர்களுக்கு அகில் என்ற மகன் இருக்கிறார். இப்போது நாகார்ஜுனாவின் முன்னாள் மனைவி அமெரிக்காவில் வசித்துவருவதாக கூறப்படுகிறது. அங்கு சென்று நாக சைதன்யா சந்திப்பாராம்.

நாக சைதன்யாவும் 2009ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானார். சொல்லிக்கொள்ளும்படியான ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அவர்; கடைசியாக கஸ்டடி படத்தில் நடித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக தண்டெல் என்ற படத்தில் நடித்துவருகிறார் நாக சைதன்யா. இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார் அவர்.

திருமணம் டூ பிரிவு: இதற்கிடையே சமந்தாவை காதலித்து வீட்டு சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் சைதன்யா. அவர்களது திருமணம் வாழ்க்கை சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. சமந்தாவும் திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினார். ஆனால் திடீரென தாங்கள் விவாகரத்து செய்துகொள்வதாக அறிவித்தனர் நாக சைதன்யாவும், சமந்தாவும். அதற்கு சமந்தா நடித்ததுதான் காரணம் என்று சொல்லப்பட்டது.

திருமண வாழ்க்கையிலிருந்து வெளியேறிய பிறகு சமந்தா இன்றளவும் சிங்கிளாக இருந்துவருகிறார். ஆனால் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் சென்றுவருவதாக கூறப்பட்டது. அதனை இருவருமே மறுக்கவும் இல்லை ஏற்கவும் இல்லை. சூழல் இப்படி இருக்க இன்று அவர்களுக்கான நிச்சயதார்த்தம் சிம்ப்பிளாக முடிந்திருக்கிறது. அது பெரும் ஆச்சரியத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து நாகார்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் சோபிதா, நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ‘நாக சைதன்யாவுக்கும், சோபிதாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது என்பதை அறிவிப்பதில் சந்தோஷம் அடைகிறேன். சோபிதாவை எங்கள் குடும்பத்துக்கு வரவேற்கிறேன். இன்று காலை 9.42 மணிக்கு அவர்களது நிச்சயதார்த்தம் முடிந்தது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நிச்சயதார்த்தம் நடந்த நாளான இன்றுதான் சமந்தாவும் தனது காதலை பல வருடங்களுக்கு முன்பு நாக சைதன்யாவிடம் சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் சமந்தாவை அப்செட்டாக்கவே இன்றைய நாளில் நிச்சயதார்த்தத்தை வைத்திருக்கிறார்களோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website