வெறும் 21 நாட்களில் கருமையான அடர்த்தியான முடிக்கு இந்த இரண்டு இலை போதும்!

முடி உதிர்வுப்பிரச்சனை என்பது தற்போது வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. இந்த பிரச்சனை வருவதற்கான னாரணம் நமது பழக்க வழக்கம் தான். தொடர்ந்து முடி உதிர்வதால் பெண்கள் மற்றும் ஆண்களின் தலையில் வழுக்கை, சொட்டை விழ ஆரம்பித்துவிடும். வீட்டு வேலை, அலுவலக வேலைகளில் தனக்கென நேரம் கிடைக்காமல் இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு பல அசௌகரியங்ளை நேர்கொள்ள வேண்டி இருக்கும்.
இதற்காக பலரும் பல முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர்.ஆனால் இது உடல் அநலத்தில் சிறந்த பங்களிப்பு தராது. இதற்காக நாம் சில வீட்டு வைத்த்தியங்களை செய்தால் இந்த பிரச்சனையிஜல் இருந்து விடுபடலாம். அது என்ன வீட்டு வைத்தியம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பெண்கள் தங்களது கூந்தல் பராமரிப்பில் பெரும் கவனத்தை செலுத்தி வருகின்றனர். எல்லோருக்கும் தலைமுடி நீளமாகவும் கருப்பாகவும் இருப்பது பிடிக்கும். இதில் ஆண் பெண் என இருபாலாரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
முடி நீளமாக இல்லாவிட்டால் கூட முடி உதிராமல் அடர்த்தியாக வளர வேண்டும் என்று தான் இருபாலரும் அசைப்படுகின்றனர்.
அந்த வகையில் எளிமையாக கிடைக்கும் தினந்தோறும் சமையலில் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை மற்றும் முருங்கை கீரை ஆகியவற்றை வைத்து தலை முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வைத்து கொள்ள முடியும்.
கருவேப்பிலை மற்றும் முருங்கை கீரையை மற்றும் கறிவேப்பிலையை எடுத்துக்கொண்டு அதை நன்கு உலர வைத்து பொடியாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த பொடியை ஒரு பாட்டிலில் போட்டு வைத்து கொண்டு தினமும் காலையில் 1 ஸ்பூன் அளவு இந்த கறிவேப்பிலை மற்றும் முருங்கை கீரை பொடியை வெது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் 21 நாட்கள் பிறகு தலை முடி உதிர்தல் இல்லாமல் கருமையாகவும் அடர்த்தியாகவும் தலை முடி வளர ஆரம்பிக்கும்.
இதை தொடர்ந்து செய்தால் முடி நினைத்ததை விட அழகாக வரும்.