கேரவனில் இருந்த ரகசிய கமெரா: பரபரப்பை கிளப்பிய ராதிகா சரத்குமார்!

September 3, 2024 at 1:08 pm
pc

படப்பிடிப்பின் போது கேரவனில் ரகசிய கமெரா வைத்திருந்ததாக நடிகை ராதிகா சரத்குமார் கூறிய புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கையால் கேரள சினிமாவில் பல்வேறு பரபரப்பான விடயங்கள் நடந்துள்ளன. இந்த அறிக்கையில், கேரள நடிகைகளுக்கு ஏற்பட்டுள்ள வன்புணர்வு கொடுமைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த வன்புணர்வு கொடுமைகள் கேரள சினிமாவில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் நடைபெற்றுள்ளது என்று தமிழ் நடிகைகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், மலையாள படப்பிப்பின் போது அங்குள்ள ஆண்கள் செல்போனை சிரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது இது பற்றி அங்குள்ள தமிழ் தெரிந்தவர்களிடம் கேட்ட போது கேரவனில் கமெரா வைத்து பெண்கள் உடைமாற்றுவதை பார்த்து கொண்டிருக்கிறார்கள் என கூறினார்கள்.

பின்னர், கேரவன் ஆட்களை அழைத்து கேரவனுக்குள் கமெரா வந்தால் செருப்பால் அடிப்பேன் என எச்சரித்தேன் என்று நடிகை ராதிகா சரத்குமார் கூறினார்.

மேலும், அந்த சம்பவத்திற்கு பிறகு கேரவனுக்குள் உடை மாற்றுவதில்லை என்றும், ஹொட்டலுக்கு சென்று உடை மாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவர் கூறிய கருத்து தற்போது அனைத்து தரப்பினரிடமும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், கேரள அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு பொலிஸார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ராதிகாவிடம் பொலிஸார் விசாரிக்க முடிவு செய்தனர். பின்னர், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும் தகவல் வந்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website