கோவில் கோவிலாக சுற்றும் ஜோதிகா -சூர்யா..வைரல் போட்டோஸ்

November 27, 2024 at 11:41 am
pc

நடிகை ஜோதிகா தனது கணவர் சூர்யாவுடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கும், தனியாக திருப்பதி திருமலை கோவிலுக்கும் சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் கடந்த சில நாட்களாக கோவில்களுக்கு அதிகமாக சென்று வழங்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலில் ஜோதிகா மற்றும் சூர்யா தரிசனம் செய்ததாகவும், சிறப்பு யாகம் நடத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதேபோல், ஜோதிகா திருப்பதி கோவிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபட்ட வீடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது. திருமலை கோவிலில் நடிகை ஜோதிகா சுற்றி வரும் போது, பக்தர் ஒருவர் அவருக்கு ஏழுமலையான் வெங்கடாசலபதி புகைப்படத்தை பரிசாக வழங்கினார்; அதை அவர் அன்புடன் ஏற்றுக் கொண்டார்.

இதேபோல், ஒரு ரசிகை சட்டென ஜோதிகாவிடம் கை கொடுப்பதற்கு முன் வந்த போது, அவர் தனது கையில் லட்டு இருப்பதை சுட்டிக்காட்டி ஒரு புன்சிரிப்போடு அந்த இடத்திலிருந்து நகர்ந்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website