மொபைல் செயலி மூலம் மக்களின் தொடர்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!!
கடந்த மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “Ak” என்ற செயலியை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இந்த செயலியின் மூலம் சுமார் 20,000கும் மேல் ஆர்வலர்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் பங்கஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரண்டே மாதத்தில் 50,000கும் மேற்பட்டோர் இச்செயலியை தரவிறக்கம் செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த செயலியின் மூலம் நாங்கள் மக்களுடன் நேரிடையாக தொடர்பில் இருக்கிறோம். அத்துடன் இதன் மூலம் எங்கள் தரப்பின் கருத்துக்களை மக்களுக்கு உடனடியாக கூற முடிகிறது. இதனால் மக்களின் கருத்துகளையும் நாங்கள் எளிதில் அறிய பாலமாக உள்ளது. இச்செயலியில் ஆர்வலர்கள் இரண்டு மணி நேரம் ஒவ்வொரு நாளும் செலவிட்டாலே போதும்”, என்றார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பரப்பப்படும் கருத்துக்களை ஒழிக்கவே இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் கெஜ்ரிவால் இக்கருத்துகளுக்கு இந்த செயலியின் மூலம் பதிலளிப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்ட சபை தேர்தல் இருப்பதால் கெஜ்ரிவால் “AK ” செயலியின் மூலம் மக்களிடம் தொடர்பில் இருப்பது மிகவும் அவசியமாக உள்ளது என்று பத்திரிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.