15 வயது சிறுமியை வேலைக்கு வைத்த நடிகர் ஷியாம், இப்போ நான் சிறுமியை படிக்கவைக்குறேன் !!

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடு பகுதியில் சினிமா நடிகர் ஷாமுக்கு சொந்தமான, அடுக்குமாடி குடிருப்பில் உள்ள வீட்டில் திடீரென போலீஸ் சோதனை நடத்தினர். அப்போது நடிகர் ஷாம் உட்பட 12 பேர் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பணம் மற்றும் சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை ஜாமினில் விடுவித்தனர்.
இந்நிலையில் நடிகர் ஷியாம் வீட்டில் 15 வயது சிறுமியை வீட்டில் வேலைக்கு வைத்துள்ளதாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சிறுமியின் தாய், ஷாம் வீட்டில் வேலை பார்த்து வருவதால் சிறுமியும் வேலை பார்த்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த தகவல் அறிந்து வந்த குழந்தைகள் நல பாதுகாப்பு குழு மைனர் சிறுமியை மீட்டுள்ளனர். மேலும் சிறுமிக்கு 15 வயது எனத்தெரியாது என்று கூறியுள்ள ஷாம், சிறுமி படிப்புச்செலவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளாராம். எப்படி சிறுமியின் வயசு தெரியாமல் வேலைக்கு சேர்த்திருப்பார்கள் என நெட்டிசன்கள் பல சமூகவலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.