நண்பருடன் உறவு வைத்துக்கொள்ள வலியுறுத்திய கணவருக்கு மனைவி வைத்த ஆப்பு!

ஆந்திராவில் மனைவியை நண்பருடன் உறவு வைத்துக்கொள்ள வலியுறுத்திய நபரை போலீசார் கைது
செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (30). இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்குள்ள பிரபல நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாஸ்கருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவெடுத்த நிலையில் குண்டூரைச் சேர்ந்த 25 வயதான பெண்ணை பேசி முடித்துள்ளார். இவர்களது திருமணம் கடந்த மார்ச் மாதம் முக்கிய சில உறவினர்கள் முன்னணியில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்க மாப்பிள்ளை என்பதால் பாஸ்கருக்கு பெண் வீட்டார் 50 சவரம் நகை மற்றும் ரூ. 50 லட்சம் ரொக்கத்தை வழங்கியுள்ளனர். திருமணம் முடிந்த நிலையில் குண்டூரில் உள்ள மணமக்கள் இருவரும் இல்லற வாழக்கையை தொடங்கினர். முதல் இரவு அன்று புதுப்பெண் அறைக்குள் சென்றபோது, தனக்கு உடல்வலி இருப்பதாக கூறிய பாஸ்கர் சீக்கிரமகாவே தூங்கியுள்ளார்.
சரி, ஒருநாள் தானே என்று பெருசாக எடுத்துக்கொள்ளாமல் புதுப்பெண்ணும் உறங்கியுள்ளார். ஆனால், அன்றுமுதல் ஒரு மாதத்துக்கும் மேலாக தாம்பத்ய உறவில் ஈடுபட மறுத்து வந்த பாஸ்கர் பலவகை காரணங்களை சொல்லி தட்டி கழித்து வந்துள்ளார். மேலும், பாஸ்கரின் நடவடிக்கையில் சில வித்தியாசத்தையும் அவர் உணர்ந்துள்ளார்.
இதையடுத்து பாஸ்கரின் நடவடிக்கையை குறித்து புதுப்பெண் தனது வீட்டில் தெரியப்படுத்தவே, இரு வீட்டாரும் சேர்ந்து பாஸ்கருடன் பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மனைவியுடன் தனியாக பேசவேண்டும் என அழைத்து சென்ற பாஸ்கர், அமெரிக்காவில் தான் ஏற்கெனவே ஒரு ஆணுடன் நெருக்கமாக பழகி வருவதாகவும், இருவரும் ஓரினசேர்க்கையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், நீ என்னுடன் வாழ விரும்பினால், அமெரிக்காவில் உள்ள என் நண்பனுக்கும் மனைவியாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனால் கடும் கோபமடைந்த புதுப்பெண் விஷயத்தை பெற்றோருடன் தெரிவிக்க, பாஸ்கர் மீது குண்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பாஸ்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சட்டப்படி இருவரையும் பிரித்து, வரதட்சணையை திருப்பி கொடுக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.