7 மாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவி..’வயிற்றில் உள்ள குழந்தை என்ன பாலினம் என்று அறிய கணவன் செய்த கொடூர செயல்’…!

September 23, 2020 at 3:55 pm
pc

உத்தர பிரதேசத்தில் வயிற்றில் உள்ள குழந்தை என்ன பாலினம் என்பதை அறிய மனைவியின் வயிற்றை கணவன் கொடூரமாக கிழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் நெக்பூர் பகுதியை சேர்ந்தவர் பன்னலால் .இவருக்கு திருமணமாகி ஏற்கெனவே 5 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் 6 வதாக தனக்கு ஆண் குழந்தை வேண்டுமென்று நினைத்துள்ளார்.

இந்த நிலையில் மனைவி( 35 வயது ).இவர் 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா என தெரிந்துகொள்வதற்காக மனைவியின் வயிற்றை கொடூரமாக கிழித்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கூரான ஆயுதத்தால் கிழித்ததில் அவரது மனைவி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.ஆனால் துரிதமாக செயல்பட்ட கர்ப்பிணியின் குடும்பத்தினர் அவரை விரைவாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர்.

இதனையடுத்து கர்ப்பிணியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பன்னலால் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தை என்ன என்பதை தெரிந்து கொள்ள மனைவியின் வயிற்றை கணவன் கிழித்த கொடூர சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website