“பேய் நகரமாக மாறிய சீனாவின் ஹாய்ஷூ நகரம்” !! அப்படி அங்கு என்ன நடந்தது ?

வடசீனாவில் பேர்ல் நதி பாயும் ஹாய்ஷூ நகரத்தில் இருந்த சாம்சங் தொழிற்சாலை மூடப்பட்டதால் அந்த நகரமே தற்போது பேய் நகரம் போல காட்சியளிக்கிறது .
30 ஆண்டுகளாக, சாம்சங் தொழிற்சாலை ஒன்று ஹாய்ஷூ நகரில் செயல்பட்டு வந்தது. கடந்த அக்டோபர் மாதம் திடீரென இழுத்து மூடப்பட்டு, சாம்சங் நிறுவனமானது இந்தியா மற்றும் வியாட்நாமுக்கு மாட்டப்பட்டு விட்டது. இதன் விளைவாக இந்த தொழிற்ச்சாலையை மையமாக கொண்டு செயல் பட்டு வந்த 60% சிறுசிறு நிறுவனங்கள், உணவகங்கள் போன்றவைகளும் இழுத்து முடப்பட்டுள்ளன. பிரமாண்டமாகவும், பரபரப்பாகவும் செயல்பட்டுவந்த சாம்சங் தொழிற்சாலை மூடப்பட்டதால், அதில் பணியாற்றிவந்த தொழிலாளர்களும் அந்நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இத்தனைநாள் பாப்பரப்பாக இயங்கிவந்த 60 சதவீத சிறு நிறுவனங்கள், உணவகங்கள் போன்றவை மூடப்பட்டதால் அந்த நகரமே ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
