‘அதிர்ச்சி’ இந்தியாவிடம் ‘அணுஆயுத போருக்கு’ சவால் விடும் பாக்கிஸ்தான் பிரதமர் -இம்ரான் கான்

சர்வதேச அகதிகள் மன்றத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். “ஏற்கெனவே ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நெருக்கடியைத் தொடர்ந்து தற்போது இந்தப் புதிய சட்டம் மேலும் பல நெருக்கடிகளை உருவாக்கும். இதன்மூலம் இந்திய முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தானுக்கு வர நேரிடும். பாகிஸ்தானால் அதைச் சமாளிக்க முடியாது. இது வெறும் அகதிகள் பிரச்னையாக மட்டுமல்லாமல் ”இரண்டு அணுஆயுத நாடுகளையும் போர் முனைக்கு இட்டுச் செல்லும்”. இந்திய அரசு, காஷ்மீரை ஆக்கிரமித்ததோடு, அஸ்ஸாமில் முஸ்லிம்கள் குடியுரிமையையும் பறித்தது. தற்போது இந்தப் புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது” என்று குற்றம்சாட்டினார்.

இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், “பாகிஸ்தான் பிரதமரின் அனைத்துக் கருத்துக்கும் இந்தியா பதிலளிக்க வேண்டிய தேவையில்லை. இம்ரான் கான், இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாமல் அவர்கள் நாட்டின் சிறுபான்மையினர் நிலைமையில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளது.