காணாமல் போன அலிபாபா ? வெளியே வந்து தலைகாட்டி சொன்ன விஷயம்
அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா, தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த நிலையில் அக்டோபர் 24 முதல் அதில் பங்கேற்கவில்லை. ஜாக் மா உடல்நலம் குறித்துப் பல்வேறு வதந்திகள் உலவிய நிலையில், ஆசிரியர்கள் நூறு பேர் கலந்துகொண்ட இணையவழிக் கலந்துரையாடலில் இன்று அவர் பங்கேற்றார்.
கடந்த 3 மாதங்களாக நிலவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஹாங்காங் பங்குச்சந்தையில் அலிபாபா நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்று ஒரேநாளில் 6 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஜாக் மா வுக்கு அரசியல் தலைக்கவர்களுடன் சில பிரச்சனைகள் இருந்ததால் அவர் மறைத்துக்கொண்டிருந்தார் என்ற செய்திக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.