“ஈரானில் அணு உலைக்கு அருகே நிலநடுக்கம்”, 10 KM ஆழத்தில் ஏற்பட்டது !!

January 8, 2020 at 10:36 am
pc

ஈரானில் உள்ள புஷ்ஷீர் அணு உலை அருகே 4.9 ரிக்டர் அளவு கோளில் பதிவானது. ஈரானில் போரேஜன் நகரின் தென்கிழக்கே 10 km தொலைவில் சரியாக 10 Km ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் இயற்கையான நிகழ்வு எனவும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இருக்கும் போர் பதற்றத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தனர்.

இன்று காலை இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் இரு நாடுகள் இடையே பெரும் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கும் நிலையில் உள்ளார். மறுபக்கம் ஈரான் சுலைமானி தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் என அமெரிக்காவை எச்சரித்துள்ளது. மேலும் தற்போது அணு உலைக்கு அருகே நடந்த நிலநடுக்கம் அங்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

https://twitter.com/StratSentinel/status/1214755378141024256
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website