8ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்: அடிக்கடி சந்தித்த டிரைவர் வெறிச்செயல்!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில சிறுமிக்கு உடல் நிலை குறைவு காரணமாக பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர்.
அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் 6 மாத கர்ப்பமாக இருந்ததை உறுதி செய்தனர். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து சிறுமியிடம் கேட்டு உள்ளனர்.
அப்போது லாரி டிரைவர் முனியப்பன் (26) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி சென்று தனிமையில் சந்தித்ததாக அவர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் லாரி டிரைவர் முனியப்பனை தாடிக்கொம்பு போலீசார் போக்சோவில் கைது செய்து உள்ளனர்.