இந்த ஜூஸ மட்டும் குடிங்க…. சருமம் எப்படி பொலிவா இருக்கும்னு பாருங்க….அப்புறம் எந்த கிரீமையும் தொடவே மாட்டிங்க …!!

சருமத்தின் நிறத்தை அதிகரிப்பதற்கும், அதனை மென்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரும் எண்ணுவர். அந்த வகையில், இப்போது நாம் நமது ஸ்கின்-ஐ எவ்வாறு மென்மையாக்கச் செய்வது என்பது பற்றிய சில குறிப்புகளை இதில் காண்போம்
சருமம் அழகாக தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில், விளம்பரத்தில் வரும் கிரீம்களை ட்ரை பண்ணுவர் அல்லது வேறு சிலரின் பரிந்துரைகளாலும், கிரீம்களை உபயோகிப்பார்கள். ஆனால், இவ்வாறு கிரீம் உபயோகிப்பது ரு சில சருமத்திற்கு மட்டுமே பொருந்தும். ஒரு சில பேருக்கும், அந்த கிரீம்-ஐப் பயன்படுத்துவதால், பல்வேறு விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
அந்த வகையில், இந்த கிரீம்களை எல்லாம் தவிர்த்து, வீட்டிலேயே ஜூஸ் தயாரித்துக் குடிப்பதன் மூலம் உடலின் உள் மற்றும் வெளிப்புறங்களைப் பாதுகாக்கலாம்
சருமத்தைப் பொலிய வைக்கும் ஜூஸ்
செயற்கை முறையான க்ரீம் போன்றவற்றை உபயோகிப்பதால், பல்வேறு வகையான விளைவுகளைச் சந்திப்பதுடன், நீண்டா நாள்களுக்கு பயனுள்ளதாக அமையாது. இதன் மூலம், தற்போது தோல் சுருக்கங்கள் ஏற்படாத போதிலும், பிற்காலத்தில், சருமம் குழி, மற்றும் சுருக்கங்களுடன் காணப்படும். சருமம் பொலிவாக வேண்டும் என்று நினைப்பவர்கள், அதனை இயற்கை முறையில் பெற்றால், நீண்ட நாள்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்
ஜூஸ் தயாரிக்கத் தேவையான பொருள்கள்
- கேரட்
- இஞ்சி
- கொத்தமல்லி
- இளநீர் அல்லது தேங்காய்ப்பால்
பயன்கள்
கேரட்டில் அதிக அளவிலான வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. இதன் மூலம், சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும், சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க முடியும். மேலும், சருமத்தினைப் பிரதிபலிப்பதில் இஞ்சியும் முக்கிய பங்காற்றுகிறது
இஞ்சி முகத்தில் இருக்கும் பாக்டீரியா, பரு, ரேஷஸ் போன்றவற்றைச் சரி செய்வதற்காக உதவுகிறது.
கொத்தமல்லி சருமத்தில் உள்ள மெலனினை அதிகப்படுத்தப் பயன்படுகிறது. சருமப் பராமரிப்பிற்காக இதனையும் சேர்த்துக் கொள்வது நல்லது
இந்த மூன்று பொருள்களுடன், தேங்காய்ப்பால் அல்லது இளநீரைச் சேர்த்துக் குடித்தால், மிகுந்த பலன்களை அளிக்கும்
தயாரிக்கும் முறை
- முதலில், கேரட், இஞ்சி மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை நன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர், அதில் தேங்காய்ப்பால் அல்லது இளநீரைச் சேர்க்க வேண்டும்.
- இவ்வாறு எளிதாக ஜூஸ் தயாராகி விடும்
கேரட், இஞ்சி, கொத்தமல்லி மற்றும் தேங்காய்ப்பால் அல்லது இளநீர் கலந்த இந்த ஜூஸைத் தினமும் அருந்தி வருவதன் மூலம், சருமம் மிகப் பொலிவுடன் இருப்பதை உணரலாம். இல்லையென்றால், வாரத்திற்கு மூன்று முறை என்ற கணக்கிலும், இந்த ஜூஸை அருந்தலாம். இவ்வாறு குடித்து வந்தால், சருமம் மிகப் பொலிவுடனும், மிருதுவாகவும் இருப்பதை உணரலாம்.