முகம் கலராகனுமா..? இந்த இரண்டு பொருள் மட்டும் போதும் …அப்புறம் பாருங்க மாயாஜாலத்தை ….!!

முகத்தில் அந்தந்த இடத்தில் கருப்பாக இருக்கிறதா? கவலையை விடுங்க. இதோ உங்களுக்கான டிப்ஸ். இந்த குறிப்பை பின்பற்றி வாருங்கள் அப்பறம் பாருங்க. உங்களுடைய முகத்தில் அங்காங்கே இருக்கும் கருமை காணாமல் போய்விடும். அதுமட்டுமல்லாமல், முகத்தில் எண்ணெய் பசை, முகப்பரு, வறட்சி என்று எதுவுமே இருக்காது. பொலிவான, அழகான சருமத்தை பெற சூப்பரான பேஸ் பேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பேஸ் பேக் எப்படி தயார் செய்வது?
நன்றாக பழுத்த தக்காளி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதன் விதைகளை நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.
அத்துடன் 1 ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை போட்டு இரண்டையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த பேஸ் பேக்கை முகத்தை போடுவதற்கு முன்பு, முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள்.
பின்னர் இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 2 நிமிடங்கள் மசாஜ் செய்து, 10 நிமிடம் அப்படியே வைத்திடுங்கள்.
10 நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளுங்கள்.
இதை வாரத்திற்கு இருமுறை செய்து வாருங்கள். மென்மையான கலரான அழகான சருமம் கிடைக்கும்.