மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீடு…பிரம்மாண்ட அறிவிப்பு.. உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

July 7, 2022 at 7:02 pm
pc

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதை அதே பெயரில் படமாக உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் ‘பொன்னியன் செல்வன்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம்.

மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவை தஞ்சையில் பிரம்மாண்டமக நடத்த திட்டமிட்டனர் படக்குழுவினர். ஆனால் ஒருசில காரணங்களால் தஞ்சையில் விழாவை நடத்தும் முடிவை கைவிட்டனர் படக்குழுவினர்.

இந்தப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர் படக்குழுவினர். இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீடு குறித்து படக்குழுவினர் புதிய அறிவிப்பை வெளியிட்டுனர். அதில், “எங்களது ‘பொன்னியின் செல்வன் பாகம்-1’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா வரும் ஜூலை 8, 2022 மாலை 6 மணிக்கு சென்னை டிரேட் சென்டரில் நடைபெற உள்ளது. ‘பொன்னியின் செல்வன் பாகம்-1’ செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று உலகெங்கிலும் திரையரங்குகளில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website