கள்ளகாதலன் வீட்டில் உல்லாசமாக இருந்த பெண்-மனைவியை அரைநிர்வாணமாக்கி கணவனை சுமக்கவைத்த கொடுமை…

மத்திய பிரதேசம்: போர்படாவ் என்ற பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல் தோடவா. இவரது மனைவி திடீரென மாயமாகியுள்ளார். இதையடுத்து அவரை தேடி பார்த்த போது அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டில் மறைந்திருப்பது தெரியவந்தது. அந்த இளைஞரும் ராகுல் தோடவா மனைவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராகுல் தனது மனைவியைச் சாட்டையால் அடித்து கொடுமைப் படுத்தியுள்ளார்.
பிறகு அவரது உறவினர்கள் ராகுலைத் தோல்மீது சுமக்கவைத்து அந்த பெண்ணை தெரு தெருவாக ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த கிராமத்திற்குச் சென்று அந்த பெண்ணை கொடுமைப் படுத்தியதாக ராகுல் உட்பட 14 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.