தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்!!

August 11, 2022 at 4:32 pm
pc

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். 

காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் தர்ஹால் என்ற இடத்தில் இந்திய பாதுகாப்பு படையினர் முகாம் அமைத்து ரோந்து பணி மேற்கொண்டு வந்தனர். அப்போது அப்பகுதி வழியாக இருவர் எல்லையை தாண்டி ஊடுறுவியுள்ளனர். 

அவர்களை உடனடியாக ராணுவத்தினர் தடுத்தபோது ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். கண்ணிமைக்கும் நொடியில் நடந்த இந்த தாக்குதலை தொடர்ந்து, ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் இருவரும் கொல்லப்பட்டனர். 

இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இரு வீரர்கள் காயமடைந்துள்ளனர். 

இந்நிலையில் தீவிரவாத தாக்குதலில், போராடி வீரமரணம் அடைந்த மூன்று ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த லெக்‌ஷமணன் என்பது தெரியவந்துள்ளது. 

மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் தீவிரவாத தாக்குதலில் போராடி வீர மரணம் அடைந்த செய்து, தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website