விராட் கோலி 45வது சதம்! இலங்கைக்கு எதிராக மிரட்டல் சாதனை.. அதிர்ந்த மைதானம்

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதம் அடித்தார்.
கோலியின் மிரட்டல் ஆட்டம்
கவுகாத்தியில் நடந்து வரும் ஒருநாள் போட்டியில் விராட் கோலி அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். பவுண்டரிகளை விரட்டிய அவர் 80 பந்துகளில் சதமடித்தார்.
சாதனை சதம்
இது அவருக்கு 45வது ஒருநாள் சதம் ஆகும். அத்துடன் 73வது சர்வதேச சதம் ஆகும். இதன்மூலம் அவர் இலங்கைக்கு எதிராக அதிக ஒருநாள் சதங்கள் (9) அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அதே போல் சொந்த மண்ணில் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். இருவரும் இந்திய மண்ணில் 20 சதங்கள் அடித்துள்ளனர்.
விராட் கோலி 87 பந்துகளில் ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 113 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 373 ஓட்டங்கள் குவித்துள்ளது.