திருமணமான மூன்றே மாதத்தில் இளம்பெண் தற்கொலை…

April 13, 2023 at 5:12 pm
pc

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில், ஓய்வு பெற்ற தாசில்தார் இ.கே.மோகன் மற்றும் உஷா தம்பதியரின் மகள் மகிமா மோகன் (25). குடமாலூரில் உள்ள அவரது வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு மகிமா தனது கணவர் அனந்து சங்கருடன் இங்கிலாந்தில் இருந்து கேரளா திரும்பினார். அவர்கள் கடந்த ஜனவரி 25, 2022 அன்று திருமணம் செய்து கொண்டனர். புதுப்பெண் திருமணமான மூன்றே மாதத்தில் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website