ஆஸ்பத்திரியிலிருந்து குழந்தை கடத்தல் – 12 மணி நேரத்தில் மீட்பு

April 27, 2023 at 11:57 am
pc

ஒடிசாவை சேர்ந்தவர் அர்ஜூன்குமார் (26). பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி கமலினி (24). கடந்த 22ந் தேதி பிரசவத்திற்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கமலினிக்கு ஆண் குழந்தை பிறந்தது. வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கமலினியின் அருகிலிருந்த எஸ்தர் ராணி, உமா ஆகியோர் உதவி செய்வதுபோல் குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி, 12 மணி நேரத்தில் குழந்தையை கடத்திய உமாவை கள்ளக்குறிச்சி அருகே மடக்கிப்பிடித்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website