2000 ரூபாய் நோட்டை மாற்ற வங்கிகளில் கேட்கப்படும் ஆவணம்!

May 25, 2023 at 3:49 pm
pc

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி சில விதிகளை விதித்துள்ள நிலையில், வங்கிகள் சில கூடுதல் விவரங்களை கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பபெருவதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் எந்த வங்கியிலும் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். அல்லது தங்கள் சொந்தக் கணக்கில் டெபாசிட் செய்யலாம். 2000 ரூபாயை மாற்றும் வசதி செப்டம்பர் 30, 2023 வரை இருக்கும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

ரூ.2000 பணத்தாள் செப்டம்பர் 30-க்குப் பிறகும் சட்டப்பூர்வமான டெண்டராகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ உத்தரவிட்டு உள்ளது.

20,000 ரூபாய் வரை ஒரு நாளுக்கு மாற்ற அடையாள அட்டை தேவை கிடையாது.: அதற்கு மேல் ஒரு நாளில் மாற்ற வேண்டும் என்றால் அடையாள அட்டை தேவை. ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(1) பிரிவின் கீழ் இந்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது சில வங்கிகள் 20,000-க்கும் கீழ் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றவும் அடையாள அட்டை கேட்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வங்கிகளில் பணத்தை மாற்ற வேண்டும் என்று சொன்னால், அவர்கள் ஒரு ஸ்லிப் கொடுப்பார்கள். அதை வாடிக்கையாளர் பூர்த்தி செய்ய வேண்டும். இதில் பணம் மாற்றும் நபரின் பெயர் போன்ற அடிப்படை விவரங்கள் மற்றும் எத்தனை 2000 ரூபாய் பணத்தாள்கள் உள்ளன என்ற எண்ணிக்கை மற்றும் அதன் மதிப்பு போன்ற .விவரங்களை கொடுக்க வேண்டும்.

மேலும் வாடிக்கையாளர்கள் பரிமாற்றம் செய்யப்படும் இடம் மற்றும் தேதியையும் குறிப்பிட வேண்டும். பின்னர் இதில் கையெழுத்து போட்டு 2000 ரூபாயுடன் கொடுத்தால் பணத்தை மாற்றிக்கொள்ள முடியும்.

அதுமட்டுமின்றி, இந்த ஆவணத்தை நிரப்ப ஆதார் கார்டு, PAN கார்டு உள்ளிட்ட கேஒய்சி விவரங்களை வழங்க வேண்டும் என்று வங்கிகளில் கேட்கப்படுகின்றன. சில வங்கிகள் 20,000-ற்கும் கீழ் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றினாலும் கூட அடையாள அட்டை கேட்கின்றன.

அடையாள அட்டையை பார்த்தே அவர்கள் கேஒய்சி விவரங்களை நிரப்புகிறார்கள். 20 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் அடையாள அட்டை தேவை இல்லை என்று ரிசர்வ் வங்கி கூறியும் கூட கேஒய்சியை நிரப்ப வங்கிகள் அடையாள அட்டையை கேட்கின்றன.

2016 நவம்பர் 8-ஆம் திகதி திடீரென பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் விளைவாக அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

அப்போது 1000 ரூபாய்க்கு பதிலாக 2000 ரூபாய் நோட் வெளியிடப்பட்டது. மேலும், புதிய 500 ரூபாய் நோட்டும் அறிவிக்கப்பட்டது.

பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக தற்போதுஇந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்தான் தற்போது நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பபெருவதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website