3 மாதங்களாக பாலியல் அத்துமீறல்: பாகிஸ்தானில் தந்தையை சுட்டுக் கொன்ற 14 வயது சிறுமி

September 24, 2023 at 10:44 pm
pc

பாகிஸ்தானில் 14 வயது சிறுமி தன்னை 3 மாதங்களாக பாலியல் துன்புறுத்தல் செய்த தந்தையை சுட்டுக் கொன்றுள்ளார்.

தந்தையை சுட்டுக் கொன்ற சிறுமி

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள குஜ்ஜர்புரா பகுதியில் சனிக்கிழமை 14 வயது சிறுமி ஒருவர் தன்னிடம் 3 மாதங்களாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக பொலிஸாரிடம் சிறுமி அளித்த விவரத்தில், தன்னுடைய தந்தை கடந்த 3 மாதங்களாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாகவும், அதனால் அவரை கொலை செய்ய தீர்மானித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கினை விசாரித்த காவல் அதிகாரி சொஹில் கஷ்மி, சிறுமியின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்து கோணங்களிலும் விசாரணை செய்யப்பட்ட பிறகு சந்தேக நபர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை தனது சொந்த மைனர் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்த அடுத்த நாளுக்கு பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website