விடுதி அறையில் சடலமாக கிடந்த காதல் ஜோடி!

ஓயோ ஹொட்டலில் நேற்று, 28 வயது ஆணும், 27 வயது பெண்ணும் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜாஃப்ராபாத்தில் உள்ள ஒரு ஹொட்டலில் வெள்ளிக்கிழமை அன்று 28 வயது ஆணும், 27 வயது பெண்ணும் இறந்து கிடந்தனர். இறந்தவர்கள் மீரட்டைச் சேர்ந்த சோராப் மற்றும் டெல்லியைச் சேர்ந்த ஆயிஷா என அடையாளம் காணப்பட்டனர்.
ஆயிஷாவுக்கு திருமணமாகி 9 மற்றும் 4 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளது. இறந்த ஆயிஷாவின் கணவர் முகமது குல்ஃபாம் ஜிம்மில் புரோட்டீன் சப்ளிமெண்ட்ஸ் விற்கிறார்.
பொலிஸார் கூறுகையில்.. மவுஜூர் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள OYO ஹொட்டலில் ஒரு அறைக்குள் இரண்டு பேர் உயிரிழந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் பின் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், சொஹ்ராப் மற்றும் ஆயிஷா மதியம் 1:02 மணிக்கு OYO ஹொட்டலில் , 4 மணிநேரத்திற்கு அறையை பதிவு செய்து உள்ளனர்.
அவர்கள் வெளியே வராததால், இரவு 07:45 மணியளவில் ஹொட்டல் ஊழியர்கள் கதவைத் தட்டினர். அப்போது எந்த பதிலும் வராததால் அவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் பொலிஸார் முன்னிலையில் அறையை திறந்தபோது, சோராப் நைலான் கயிற்றில் கூரை மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையிலும், ஆயிஷ் படுக்கையிலும் இறந்து கிடந்தார்.
இருவரும் காதலிப்பதாகவும், இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.