விஜயகாந்த் இரங்கல் பதாகையை கட்டித்தழுவி அழுத பெண் துப்புரவு பணியாளர்!

கேப்டன் விஜயகாந்த் மறைவை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் வைக்கப்பட்டு இருந்த கண்ணீர் அஞ்சலி பதாகையை கட்டித்தழுவி பெண் துப்புரவு பணியாளர் கதறி அழும் காட்சிகள் நெஞ்சை உலுக்கி வருகிறது. தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று காலை 6:10 மணியளவில் காலமானார்.
விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பதாகையை கட்டித் தழுவி அழுத பெண் துப்புரவு பணியாளர் கேப்டன் விஜயகாந்த் மறைவை ஒட்டி கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் அவரது உருவப் படத்துடன் கூடிய கண்ணீர் அஞ்சலி பதாகை வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இந்த கண்ணீர் அஞ்சலி பதாகையை கட்டித்தழுவி பெண் துப்புரவுப் பணியாளர் கதறி அழும் காட்சிகள் காண்போரை கண்கலங்க செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சியில் துப்புரவு பணியாளராக சேவையாற்றி வரும் ஏமப்பேர் கிராமத்தை சேர்ந்த அலமேலு, சாலையை தூய்மை செய்வதற்காக வந்த போது இமயம் சாய்ந்துவிட்டது என வைக்கப்பட்டு இருந்த கேப்டன் விஜயகாந்த் இரங்கல் பதாகையை பார்த்து கதறி அழுதுள்ளார்.