அதிரடி முடிவெடுத்த ஜெகன் மோகன் !! 21 நாட்களில் பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை
சைபராபாதில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் என்கவுண்டர்-ல் சுட்டு கொல்லப்பட்டனர். இதனை பற்றி பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. இந்த வழக்கில் பாலியல் குற்றாவாளிகள் சுட்டுக்கொள்ளப்பட்டதை வரவேற்பதாகவும் மேலும் இது போன்ற குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
ஜெகன் மோகன் ரெட்டி இதற்காக, பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை நிறைவேற்ற சட்டம் கொண்டுவரப்படும் என உறுதியளித்துள்ளார். இதனை பல தரப்பு மக்கள் வரவேற்றுள்ளனர்.