#BREAKING ‘கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து படுகொலை’ …தாம்பரத்தில் பரபரப்பு!

தாம்பரம் ரயில் நிலைய நுழைவு வாயிலில் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து படுகொலை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் ரயில் நிலைய நுழைவு வாயிலில் சுவேதா என்ற கல்லூரி மாணவியை பட்டப்பகலில் கத்தியால் குத்திவிட்டு இளைஞர் ராமு தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
இதையடுத்து காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவி சுவேதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சுவேதாவை காதலனே கத்தியால் குழுந்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.