சினிமா

வந்துட்டாங்கய்யா !! கைகோர்க்கும் “குண்டக்க மண்டக்க” கூட்டணி, பரவும் போட்டோ:...

Quick Share

நகைச்சுவையில் கலக்கிய பழைய கூட்டணி, தற்போது சந்தித்து கொண்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் திளைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான நகைசுவை கூட்டணியான வடிவேலு – பார்த்திபன் கூட்டணியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. வெற்றி கொடிக்கட்டு, காதல் கிறுக்கண் போன்ற நகைச்சுவை படங்கள் மூலம் காமெடியில் கலக்கியவர்கள் இவர்கள். கடைசியாக குண்டக்க மண்டக்க எனும் படத்திற்கு பிறகு ஒன்றாக சேரவே இல்லை. எத்தனை காமெடி நடிகர்கள் வந்தாலும் வடிவேலு மாதிரி வராது, என சொல்லும் அளவிற்க்கு வைகைப்புயல் வடிவேலுவின் காமெடி தற்போது வரை பேசப்படுகிறது. தற்போது மீம் கிரியேட்டர்களின் தெய்வமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் வைகைப்புயல். அவரின் ரியாக்ஷனை வைத்து என்ன மீம் போட்டாலும் அப்படியே செட் ஆகிவிடும். 2011 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக விஜயகாந்தை விமர்சித்த விவகாரத்தில், அப்போது சினிமாவை விட்டு போனவர் அதன் பின்னர் வரவே இல்லை. இருந்தாலும் மீம்களின் மூலம் வலைத்தளங்களில் தினமும் வலம் வருகிறார். சமீபத்தில் கமல் 60விழாவில் கலந்துகொண்டு தரிசனம்தந்த அவர் “தலைவன் இருக்கிறான் என்ற படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு வருவதை உறுதி செய்தார்.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு, நடிகர் வடிவேலுவும், நடிகரும், இயக்குனருமான பார்த்திபனும் நேரில் சந்தித்த ஒரு போட்டோவை போட்டு” இன்றைய சந்திப்பு, நாளைய செய்தியாகலாம் ” என பதிவிட்டுள்ளார் பார்த்திபன். இந்த போட்டவை பார்த்த நெட்டிசன்கள், செய்தியெல்லாம் வேண்டாம் நல்ல காமெடியை பார்த்து ரொம்ப நாளாச்சு சீக்கிரம் உங்க கூட்டணியில் படம் பண்ணுங்க, படத்திற்காக காத்திருக்கிறோம் என கெஞ்சாத குறையாக கோரிக்கையை வைத்துள்ளனர்.

ரஜினி, அஜித், விஜய் Forbes பட்டியலில் 2019ம் ஆண்டின் இந்தியாவின் அதிக வருமானம் வாங்கும...

Quick Share

இந்தியாவின் சிறந்த 100 பிரபலங்கள் பட்டியல் போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் திரைப்பட நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பலர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவின் சிறந்த 100 பிரபலங்களின் பட்டியலை ஆண்டுதோறும் பிரபல ஆங்கில பத்திரிக்கையான போர்ப்ஸ் வெளியிடுவது வழக்கம் அதேபோல 2019-ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த 100 பிரபலங்கள் பட்டியலை அவர்களின் புகழ், ஆண்டு வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் இந்திய கிரிகெட் வீரர் விராட் கோலி உள்ளார். அவரது 2019ம் ஆணடு வருமானம் ரூ.252 கோடி ஆகும். இரண்டாவது இடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும், மூன்றாவது இடத்தில் சல்மான் கானும் உள்ளனர். ஓய்வு பெற்ற பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி ரூ.135.93 கோடி வருமானத்துடன் 5வது இடத்தை பிடித்துள்ளார். பெரும்பாலும் பாலிவுட் நடிகர்களும், விளையாட்டு வீரர்களும் இடம் பிடித்த இந்த பட்டியலில் தமிழ் திரையுலகினரும் இடம் பிடித்துள்ளார்.

அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (ரூ.100கோடி வருமானம்) 13வது இடத்தையும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் (ரூ.94.8 கோடி வருமானம்) 16வது இடத்தையும், தளபதி விஜய் (ரூ.30 கோடி வருமானம்) 47வது இடத்தையும், தல அஜித் (ரூ.40.05 கோடி வருமானம்) 52வது இடத்தையும், இயக்குனர் ஷங்கர் (ரூ.31 கோடி வருமானம்) 55வது இடத்தையும், உலக நாயகன் கமலஹாசன் (ரூ.34 கோடி வருமானம்) 56 வது இடத்தையும், நடிகர் தனுஷ் (ரூ.31.75 கோடி வருமானம்) 64 வது இடத்தையும், இயக்குனர் சிறுத்தை சிவா (ரூ 2.17 கோடி வருமானம் ) 80 வது இடத்தையும், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் (ரூ.13.5 கோடி வருமானம் ) 84 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

நம்ம லெஜெண்ட் ஹீரோ அண்ணாச்சி !! பாலிவுட் ஜோதா அக்பர் படத்தை மிஞ்சும் அளவுக்கு செய்யும் ...

Quick Share

லெஜெண்ட் சரவணா “ப்ரொடக்சன் நோ 1” படத்தில் பாடலின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சரவணா ஸ்டோர்ஸ் புகழ் லெஜெண்ட் சரவணன், தற்போது கதாநாயகனாகவும் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். அவர் தயாரித்து நடிக்கும் படத்தின் பெயர் “ப்ரொடக்சன் நோ 1” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் அறிமுக கதாநாயகி கீத்திகா திவாரி நடிக்க உள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தி பிரபு, விவேக், மயில்சாமி, தம்பி ராமையா போன்றவர்கள் நடித்துவருகிறார்கள்.

Legend saravanan
Legend saravanan

இந்த படத்தில் இருக்கும் அணைத்து தொழிற்நுட்ப கலைஞரும் பெரியலளவில் பெயர் உள்ளவர்கள், இவர்களுடன் இணைந்துள்ள லெஜெண்ட் சரவணன் இந்த படத்தின் மூலம் சகாப்தம் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இசையமைப்பாளர், இயக்குனர், காமெடி நடிகர்கள் ஹீரோவாக வளம் வரும் ட்ரெண்டில் நம்ம தொழிலதிபர் லெஜெண்ட் அண்ணாச்சி வருகைதந்துள்ளார். இவருடைய படத்தில் பாடல் கட்சிகளின் புகைப்படங்கள் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.

விஸ்வரூபம் நடிகை பூஜா குமார் ஸ்லீவ்லெஸ் உடையில் இளசுகளை கிறங்கடித்த புகைப்படங்கள் உ...

Quick Share

காதல் ரோஜாவே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜாகுமார்.அதன் பின் அவர் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார்.

அதன் பின் அவரை மீண்டும் கமல்ஹாசன் தான் இயக்கிய விஸ்வரூபம் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். மேலும், விஸ்வரூபம் 2-விலும் இவர் நடித்துள்ளர்.

அதோடு, கமல்ஹாசன் நடித்து வெளியான உத்தமவில்லன் படத்திலும் இவர் நடித்துள்ளார். அமெரிக்க சென்று காணாமல் போன இந்த பொக்கிஷத்தை மீட்டு மீண்டும் சினிமாவிற்கு கொண்டு வந்த கமல்ஹாசன் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரும் கூடவே தோன்றுகிறார்.

அமீர்கான் மகள் ஐரா கான் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் – சூடேறி கிடக்கும் இன்டர்நெட்..!

Quick Share

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கானின் மகள் ஐரா அமெரிக்காவில் உள்ளார். அவர் கேமராவுக்கு பின்னால் இருக்க ஆசைப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் ஐரா தொடர்ந்து போட்டோஷூட்டுகளில் கலந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவருக்கு நடிகையாகும் ஆசை வந்துவிட்டதாக பாலிவுட்டில் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐரா ஒரு போட்டோஷூட்டில் கலந்து கொண்டார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு “என்ன ஒரு வியூ” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அமிதாப் கூறிய 3 அறிவுரை: ஒன்றிற்கு” நோ” சொன்ன ரஜினி !! “எனது ஆசை வேறு...

Quick Share

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் எனக்கு 3 அறிவுரை வழங்கினார் ஆனால் ஒன்றை மட்டும் என்னால் கடைபிடிக்க முடியவில்லை, தர்பார் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் மனம் திறந்த ரஜினி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கியுள்ள திரைப்படம் “தர்பார் ” இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டுவிழா மும்பையின் நேற்று பிரமாண்டமாக நடந்தது. மும்பையில் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், இந்தி திரையுலகில் அமிதாப்பச்சன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் அவர் என்னிடம் 60 வயதில் முக்கியமான 3 விஷயங்களை கடைபிடிக்கச்சொன்னார். உடற்பயிற்சியை தினமும் தவறாமல் செய்யவேண்டும். எப்போதும் நம்மை பிஸியாக வைத்துக்கொள்ள வேண்டும், அரசியலில் நுழைய கூடாது இந்த மூன்றும் அவர் எனக்கு கூறிய அறிவுரைகள்.

ஆனால் அதில் என்னால் முதல் இரண்டை மட்டும் தான் கடைபிடிக்க முடிந்தது என கூறினார். இதன் மூலம் தான் அரசியலுக்கு வருவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் பேசிய அவர் தர்பார் படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். ஏற்கனவே நடித்த கதாபாத்திரங்களில் இருந்து இது சற்று மாறுபடும். திருநங்கை வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை என பேசினார்.

அந்த மாதிரி படம் பார்த்தால் அரஸ்ட்..! ப்ளீஸ்.. இப்படியெல்லாம் போடாதீங்க..! ராய் லக்ஷ்மி...

Quick Share

அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள்.

அவர்களில், முக்கியமானவர் நடிகை ராய் லட்சுமி. படங்களில் இவரை பார்கிறோமோ இல்லையோ.. சமூக வலைதளங்களில் நிச்சயம் பார்க்கலாம். செம்ம ஆக்டிவாக இருப்பார்.

அவர் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் விதவிதமான கோணங்களில் எடுக்கப்பட்டதாக இருக்கும். அவற்றை பலரும் ரசித்து லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் அள்ளித்தெளிப்பார்கள்.

இன்று ராய் லட்சுமி வெளியிட்டுள்ள படம் கிளாமரின் உச்சமாக இருந்தாலும், அதில் அவர் குறிப்பிட்டுள்ள வார்த்தைதான் ஹைலைட். ‘கண்கள் எப்போதும் பொய் சொல்லாது’ என்ற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த மாதிரி படம் பார்த்தாலே போலீஸ் அரஸ்ட் பண்ணிடும்ன்னு சொல்றாங்க.. நீங்க இப்படியெல்லாம் போஸ்ட் பண்ணாதிங்க எங்களை அரஸ்ட் பண்ணிட போறாங்க என்று திகில் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

நெகிழ்சி ! ‘கர்பிணி பெண்ணின்’ ஆசையை நிறைவேற்றிய ‘ரஜினி’..

Quick Share

சென்னை : சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வந்த ராகவா விக்னேஷ் மற்றும் அவர் மனைவி ஜெகதீஸ்வரி, இவர்கள் இருவருமே ரஜினியின் தீவீர ரசிகர்கள் ஆவர். இவர்கள் புதியதாக திருமணம் செய்தவர்கள். பல ஆசைகள் ஜெகதீஸ்வரிக்கு இருந்தாலும் சூப்பர் ஸ்டார் பார்ப்பதே இவரின் கனவு ஆசையாக இருந்தது.இந்நிலையில் கணவரான ராகவ் விக்னேஷ் தன் மனைவியிடம் நான்கு மாதமாக கருவுற்ற இருந்தபோது மனைவியின் ஆசையை கேட்டுள்ளார். அதற்கு அவரின் மனைவி தனக்கு பிடித்த ஹீரோவாக இருந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரை காணவேண்டும் என்பதையும் அவரிடம் எப்படியாவது ஓர் உரையாடலை வைத்துகொள்ளவேண்டும் என்ற ஆசையையும் தெரிவித்தார்.

இதனால் அவரை காண நான்கு மாதங்களாக முயற்சித்துவந்தார்.இதனை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் தான் திரைபடப்பிடிப்பு எடுக்கும் இடத்திற்கு இருவரையும் அழைத்து அவர்களிடம் ஒருசில மணிநேரம் செலவழித்தார். பிறகு ஜெகதீஷ்வரிக்கு வளையல் வாங்கி போட்டுவிட்டார். எனவே இங்கு ஜெகதீஸ்வரியின் கனவு நினைவானது ஆகையால் அக்குடும்பம் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

அனல் பறக்கும் தர்பார் ட்ரைலெர் வெளியானது !! மிரட்டும் ஆதித்யா அருணாசலம் !!

Quick Share

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தர்பார் படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியானது.

ரஜினியின் “தர்பார்” லைக்கா தயாரிப்பில் எ.ஆர் முருகதாஸ் இயக்க பெரும் பொருள்செலவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தில் ஆதித்ய அருணாசலம் என்ற கதாபாத்திரத்தில் கமிஸ்ஸின்ர் ஆக சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கிறார் என லைக்கா நிறுவனம் தெரிவித்தது. படத்தை பொங்கலுக்கு வெளியிட பட குழுவினர்கள் திட்டமிட்டுள்ளார். இன்று டிசம்பர் 16 மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் எ.ஆர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். படத்தின் ட்ரைலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றிருக்கிறது.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், காமெடி நடிகர் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் தர்பார், பாடல் வெளியீட்டு விழா பிரமாண்டமாக அரங்கேறியது, அனிருத் இசையில் அணைத்து பாடல்களும் பட்டி தொட்டி முழுவதும் பட்டையை கிளப்புகின்றது. இந்நிலையில் தர்பார், ட்ரைலர் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஷங்கர் டைரக்ஷனில், விஜய்? நண்பனுக்கு பிறகு மீண்டும் கூட்டணி ஆவலுடன் ரசிகர்கள் !!

Quick Share

தளபதி 64க்கு பிறகு தளபதி விஜய், இயக்குனர் ஷங்கருடன் இணைவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2012-ம் ஆண்டில் ஷங்கர் – விஜய் கூட்டணியில் வெளிவந்த படம் “நண்பன்”. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் இது நேரடி தமிழ் படம் இல்லை. பாலிவுட்டில் நடிகர் அமீர்கான் நடிப்பில் வெளியான “3 இடியட்ஸ்” படத்தின் ரீமேக்காகும். அதன் பிறகு தமிழகத்தின் பிரம்மாண்டத்திற்கு பெயர்போன இயக்குனர் ஷங்கருடன் தளபதி விஜய் எப்போது இணைவார் என விஜய் ரசிகைகள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில், இணையதள நிறுவனம் ஒன்றின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஷங்கரிடம் விஜய் ரசிகர்கள் மீண்டும் தளபதியுடன் இணைவது எப்போது என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் “நானும் ரெடி, அவரும் ரெடி எப்போது வேண்டுமானாலும் இனைந்து படம் பண்ணுவோம். அதன் அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்” என பதிலளித்தார்.

ஷங்கரின் பதில் விஜய் ரசிகர்களை சந்தோச படுத்தியுள்ளது. இதற்கிடையில் விஜய்க்கான கதையை ஷங்கர் தயாரித்து விட்டதாகவும், கதையை விஜயிடம் சொல்லி ஒப்புதல் வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தற்போது தளபதி 64 ல் பிஸியாக உள்ளார், ஷங்கரும் இந்தியன்-2வில் பிஸியாக உள்ளார். இருவரும் பட வேலைகளை முடித்தபின் புதிய படத்தில் இணைவது குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் இவர்களது கூட்டணிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஜி.வி-யின் பாடலை வெளியிட்ட யுவன் மகிழ்ச்சியில் “வணிகன்” பட குழு !!

Quick Share

புதுமுக இயக்குனர் இயக்கிய “வணிகன்” என்ற படத்தின் ஆடியோ உரிமத்தை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வாங்கியுள்ளார். இதனால் அந்த பட குழுவினர் சந்தோஷத்தில் திளைத்துள்ளனர்.

FESTUS புரொடக்சன் என்ற நிறுவனத்தின் சார்பில் செந்தில் விஜயக்குமார் தயாரிப்பில் புதுமுக இயக்குனரான டேனியல். VP எழுதி இயக்கியுள்ள படம் வணிகன். இந்த படத்தில் ஹீரோவாக நேரம், வெற்றிவேல், அமரகாவியம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஆனந்த் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளனியாகவும், சன்டிவி யில் “லட்சுமி ஸ்டோர்ஸ்” சீரியலில் கதாநாயகியாகவும், சின்னத்திரையில் வலம் வரும் நக்ஷத்திரா நாகேஷ் இந்த படத்தின்மூலம் வெள்ளித்திரையில் கால்பதிக்கிறார். இந்த படத்திற்கு சுரேஷ்குமார். TR- புவனேஷ்செல்வகணேஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இயக்குனர் டேனியல். VP இந்த படத்தினை பற்றி பேசும் போது, இந்த படம் ஒரு எதார்த்தமான திரில்லர் படம். சமூகத்தில் நடக்கும் விஷயத்தை படத்தில் முறையாக கையாண்டுள்ளோம். இந்த படத்தின் பாடல்களை கேட்ட இசையமைப்பாளர் யுவான்ஷங்கர் ராஜா, படத்தின் இசையமைப்பாளர்களை பாராட்டினார். மேலும் படத்தில் ஆடியோவை யுவன் ரெகார்டஸ் நிறுவனம் மூலம் வாங்கியுள்ளார். இது எங்கள் படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. மேலும் இந்த படத்தில் “வாடி முட்ட கண்ணி” என்ற பாடலை இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இந்த பாடலை யுவான்ஷங்கர் ராஜா வெளியிட்டார். இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது என மகிழ்ச்சியாக கூறினார்.

பாலுணர்வைத்தூண்டும் வகையில் படம் எடுத்த “எஸ்.ஏ.சந்திரசேகரை போக்ஸோ சட்டத்தில் கைது...

Quick Share

தளபதி விஜய் அவர்களின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திர சேகரை “போக்ஸோ சட்டத்தில் கைது செய்தால் தவறு இல்லை” என திரையரங்க உரிமையாளர் சங்க செயலாளர் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கிய, நடிகர் ஜெய் நடிப்பில் “கேப்மாரி” என்ற திரைப்படம் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. இந்த படத்தில் மோசமான காட்சிகள் உள்ளதாக விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த திரைப்படத்தை பற்றி திரையரங்க உரிமையாளர் சங்க செயலாளர் ஸ்ரீதர் என்பவர் கடுமையான விமர்சனத்தை எஸ்.ஏ.சந்திர சேகர் மீது வைத்துள்ளார். அவர்கொடுத்த பேட்டியில், எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கத்தில் வந்துள்ள “கேப்மாரி” திரைப்படம் மிகவும் மோசமான கதை அம்சங்களை கொண்டுள்ளது. பாலியல் குற்றங்கள் தற்போது நாட்டில் பெருகிவரும் இந்த சூழலில் இதுபோன்ற படம் தேவையா. இந்த படத்தை தணிக்கை அதிகாரிகள் எவ்வாறு தணிக்கை செய்தார்கள் என்று தெரியவில்லை. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை குறித்து அதிரடி ஆக்ஷன் படங்களை எடுத்த இவர், இதுபோன்ற பாலியல் உணர்வை தூண்டும் படங்களை எடுப்பதா. எஸ்.ஏ.சந்திர சேகரை இந்த படத்தை இயக்கியதற்காக போக்ஸோ சட்டத்தில் கைது செய்தாலும் தவறில்லை, என கடுமையாக சாடியுள்ளார்.

Athulya Ravi, Vaibhavi Shandilya in Kepmari Movie Stills HD



You cannot copy content of this Website