பிரணவ் என்ற 21 வயது நிரம்பிய B.COM பட்டதாரி. இவர் பிறக்கும்போதே இரு கைகள் இல்லாமல் பிறந்தார். அவர் படிப்பதற்கும் எழுதுவதற்கும் தனது கால்களையே பயன்படுத்துவார். கால்களில் ஓவியம் வரைந்து அசத்தி வருகிறார். இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரணவ் உடன் செல்பி எடுத்துக்கொண்டார். மேலும் பிரணவ் தனது கால்களால் வரைந்த ரஜினிகாந்த் ஓவியத்தை அவரிடமே கொடுத்தார். தனது கால்களால் செல்போனை பிடித்தவாறு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. காண்போரின் கண்களை நெகிழவைத்தது, ரஜினி பிரணவ் சந்திப்பு.
சில மாதங்கள் முன்பு அவர் கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் அவர்களை சந்தித்தார். மேலும் பிரணவ் வரைந்த சச்சின் படத்தை சச்சினுக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அவர் திறமையை கண்டு வியந்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“நம்ம வீட்டு பிள்ளை” படத்தில் குடும்பங்களின் நன்மதிப்பை சிவகார்த்திகேயன் பெற்றுள்ளார். தற்போது ஹீரோ என்ற படத்தில் நடித்திருக்கிறார். “ஹீரோ” படமும் வெளியிட தயாராக உள்ளது. இன்று சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் “கோலமாவு கோகிலா” படத்தை இயக்கிய நெல்சன் படத்தை இயக்குகிறார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவுள்ளார். இன்று படத்தின் டைட்டிலை “டாக்டர்” என சிவகார்த்திகேயனின் சொந்த ப்ரொடக்ஷன் கம்பெனி வெளியிட்டது.
“டாக்டர்” ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாக படத்தின் இயக்குனர் நெல்சன், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். படத்தின் டைட்டில் சமூகவலைதங்களில் வைரலாகி வருகின்றது.
“ரேணிகுண்டா” படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து அனைவரது நெஞ்சங்களிலும் கொள்ளை கொண்டவர் சனுஷா.
அவர் அதற்கு முன்னே விக்ரம் நடித்த காசி படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் வருவார். பீமா படத்திலும் திரிஷாவுக்கு தங்கச்சியாக நடித்திருப்பார். ரேணிகுண்டா படத்தை தொடர்ந்து நந்தினி மற்றும் விமல் நடித்த எத்தன் ஆகிய படங்களிலும் கதாநாயகியாக தொடர்ந்தார்.
மலையாள நடிகையான இவர் சிறுவயதிலிருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார். எத்தன் படத்திற்கு பிறகு கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகளில் ஒருவராக வலம்வந்தார். இறுதியாக சசிகுமார் நடித்த கொடிவீரன் திரைப்படத்தில் சசிகுமாரின் தங்கச்சியாக நடித்து அனைவரது உள்ளங்களிலும் கவர்ந்த இவரது தற்போதைய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் பரத் நடிப்பில் வெளியான “பொட்டு” படத்திற்கு பிறகு ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ” கா ” . இதில் ஆண்ட்ரியா சோலோ ஹீரோயினாக நடிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது. கா என்றால் காடு, கானகம் என்று பொருள்.முழுக்க முழுக்க காட்டை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கிவருகிறோம்.தற்பொழுது இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு மூணாரில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் ரிஸ்க் எடுத்து நிறைய காட்சிகளை படமாக்கியிருக்கிறோம் என்றது படக்குழு.
இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா.
ஆளே இல்லாத அடர்ந்த காட்டுக்குள் ஹாலிவுட் ஸ்டைலில் இருக்கும் அவரது புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜெனிலியா.
இயக்குனர் ஷங்கர் இயக்கிய “பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் ஜெனிலியாவை ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார்.
பின்னர், நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதிலும், ஜெயம்ரவி நடிப்பில் வெளியான “சந்தோஷ் சுப்பிரமணியம்” படத்தில் ஹாசினியாக டேக் இட் ஈஸி கேரக்டர் ( Cuteness Overloaded என்றும் சொல்வார்கள்) பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார்.
இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு ரித்திஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டார். சினிமாவை விட்டு விலகி விட்டாலும் சமூக வலைத்தளங்கள் வழியாக ரசிகர்களுடன் தன்னுடைய இருப்பை உறுதிபடுத்திக்கொண்டே இருக்கிறார்.
அந்த வகையில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள். உங்களுக்கு வயசாகிவிட்டது என்பது அப்பட்டமாக தெரிகின்றது என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
ரஜினிகாந்தின் 70 வது பிறந்தநாளையொட்டி நடந்த விழாவில் ரஜினியை புகழ்ந்து பேசிய தயாரிப்பாளர் எஸ்.தாணு மற்றும் இயக்குனர் பாரதிராஜா.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் “எளிமை மனிதரின் எழுபதாவது பிறந்தநாள் விழா ” என்ற தலைப்பில் விழா வேலூர் ரங்காபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. விழாவில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, பட்டிமன்ற பேச்சாளர் எஸ்.ராஜா, பத்திரிக்கையாளர் ரங்கராஜ்பாண்டே உள்பட பலர் பங்கேற்ற விழாவில் 70 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை செய்தனர்.
விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.தாணு பேசும் போது, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் வரலாறு படைத்துள்ளனர். அவர்கள் மரபு வழியில் வந்தவராக ரஜினியை நான் பார்க்கிறேன். அவர் ஒரு நல்ல மனிதர் என்பதால்தான் பிரதமரே அவர் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். இவர்தான் தமிழகத்திற்கு துணையானவர். ரஜினி வென்று காட்டுவார், உயர்ந்து காட்டுவார் என புகழ்ந்து பேசினார். பின்னர் பேசிய இயக்குனர் பாரதிராஜா இவ்விழாவில் பங்கேற்பது சூப்பர் ஸ்டாருக்காக இல்லை, சூப்பரான மனிதகருக்காக, மற்றவர் மனதை காயப்படுத்தாதவர், எளிமையானவர், அவரின் பரட்டை தலையை பார்த்துதான் 16 வயதினிலே படத்தில் நடிக்க அழைத்தேன். அதில் அவருக்கான சம்பளம் ரூ.3000 க்கு பேசி முடித்தேன் ஆனால் ரூ.2500 தான் கொடுத்தேன், இன்னமும் ரூ.500 பாக்கியுள்ளது. எனக்கும் ரஜினிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வரும் ஆனால் அவர் மேல் எனக்கு கோபம் வந்ததில்லை ஏனென்றால் அவர் அவ்வளவு நல்ல மனிதர் என பாரதிராஜா பேசினார்.
படத்திற்காக பிரம்மாண்டமாய் ஹை-டெக் தொழிற்நுட்ப கலைஞர்கள் இணைந்துள்ளார்கள்.
சரவணா ஸ்டோர்ஸ் புகழ் லெஜெண்ட் சரவணன், தற்போது கதாநாயகனாகவும் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். அவர் தயாரித்து நடிக்கும் படத்தின் பெயர் “ப்ரொடக்சன் நோ 1” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் அறிமுக கதாநாயகி கீத்திகா திவாரி நடிக்க உள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தி பிரபு, விவேக், மயில்சாமி, தம்பி ராமையா போன்றவர்கள் நடிக்க இருக்கிறார்கள்.
படத்தின் பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுத ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். வசனங்கள் பட்டுக்கோட்டை பிரபாகரன் எழுத, ஜே.டி ஜெரி இயக்குகிறார். லெஜெண்ட் சரவணன் தனது புது முயற்சியாக சினிமாவில் கால்பதித்து இதிலும் தனது வியாபாரத்தை போன்று சினிமாவிலும் ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் நூற்றென்பது எனும் படத்தில் அறிமுகமானவர் நடிகை நித்யாமேனன், அதன் பிறகு காஞ்சனா 2, ஓகே கண்மணி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். கடைசியாக இவர் மிஷ்கின் இயக்கத்தில் “சைக்கோ” படத்தில் நடித்திருக்கிறார், இந்த படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் உடல் எடை கூடியதால் படவாய்ப்புகள் கிடைக்காததால் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமான “தி அயர்ன் லேடி” யிலும் நடிக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க நித்யாமேனன், அங்கு தனது திரையுலக அனுபவங்கள் குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் எனக்கு சினிமாவில் நடிக்க, ஆரம்பத்தில் விருப்பம் இல்லை, எனது பெற்றோர்களின் கட்டாயத்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் தான் நன் சினிமாவிற்கு நடிக்க வந்தேன். காட்டில் சென்று மிருகங்களை புகைப்படம் எடுப்பது தான் எனது ஆசை. ஆனால் இப்போது சினிமாத்துறையில் வந்தது எனக்கு பெருமையை கொடுத்துள்ளது. எனது சினிமா வாழ்க்கை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் போன்றது. திருமணத்திற்கு பிறகு காதல் பிறப்பது போன்றது என மனம் திறந்து கூறினார்.
மூன்று வருட போராட்டத்திற்கு பிறகு பல எதிர்பார்ப்போடு திரைக்குவந்துள்ள
தனுஷ் நடிப்பில் ,கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள “என்னை நோக்கி
பாயும் தோட்டா “திரைப்படம் எப்படி இருக்கிறது ?
“வரும் ஆனா வராது “என்கிற நிலையில் ஒவ்வொரு முறையும் ரசிகர்களை ஏமாற்றி வந்த” என்னை நோக்கி பாயும் தோட்டா” நேற்று திரையில் வெளியானது . சூழ்நிலை காரணமாக காதலனை 4 வருடமாக பிரிந்த காதலி, 4 வருடத்திற்கு பிறகு வரும் போன் கால், காதலி பிரச்சனையில் உள்ளது தெரியவே காதலியை தேடி மும்பை செல்லும் காதலன், கூடவே குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்ற அண்ணணும் ஆபத்தில் உள்ளார். மும்பையில் அடுத்த 5 நாட்கள் என்ன நடக்கும் ,ஏன் ஹீரோவுக்கு இதெல்லாம் நடக்கிறது, காதலியும் ,அண்ணனும் எப்படி சந்தித்தனர், நாயகியையும் ,அண்ணனையும் காப்பாற்றுவாரா ஹீரோ ? என்ற கதையை நோக்கி பாயும் தோட்டா தான் இந்தப்படம்.
இந்த படத்தின் பலமாக இருந்துள்ளவை, தனுஷின் நடிப்பு, அதை மட்டும் குறைகூறவே முடியாது முகபாவனை,ரோமன்ஸ், ஆக்க்ஷன் என எல்லாவற்றிலும் கலக்கியுள்ளார் . நாயகி மேகா ஆகாஷ் நடிப்பில் அதனை ஸ்பெஷல் இல்லையென்றாலும் அழகில் ரசிகர்களை கொள்ளை கொண்டுள்ளார். மற்றுமொரு முக்கிய கதாபாத்திரம் சசிகுமார் தனுஷின் அண்ணனாக கொஞ்சநேர காட்சிகளில் வந்தாலும் மாஸ் கட்டி இருக்கிறார் . படத்தின் பாடல்கள் தெறிக்குது ,”மறுவார்த்தை பேசாதே “என்ற பாடலுக்காகவே படத்திற்கு சென்ற பலர் உள்ளனர் .யாரு அந்த இசையமைப்பாளர் என மக்கள் தேடும் அளவிற்கு ஹிட்டானது அந்த பாடல் . இசையமைப்பாளர் தர்புகாவின் இசையில் பாடல்கள் மட்டுமல்ல ,பின்னணி இசையும்” வாவ் ” சொல்ல வைத்துள்ளார் . ஒளிப்பதிவு ,படத்தொகுப்பு என படத்தின் டெக்னிக்கள் விஷயங்கள் எல்லாம் படத்தின் பிளஸ .
இப்படத்தின் பலவீனம் என்று பார்க்கும் போது, கௌதமின் இயக்கமும் , விறுவிறு திரைக்கதையும் ரசிகர்களை ரசிக்க வைத்தாலும் ,கௌதம் படத்தின் மேஜிக் மிஸ் ஆகிறது . படத்தின் முதல் பாதி முழுக்க கதை இல்லாமல் ரோமன்ஸ் மட்டுமே உள்ளது . படம் முழுக்க” சத்தம் தான் கேக்குது வாயே அசையல” என்று சொல்லும் அளவிற்கு மனதிற்குள் பேசும் வாய்ஸ் ஓவர் ஆகா உள்ளது . மேகா ஆகாஷ் 4 வருடம் தனுஷை பிரிந்ததற்கு சப்பையான கரணம் தான ? என கேள்வி எழுப்ப வைக்கிறது .மொத்தத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் ஜெராஸ் போல உள்ளது படத்தின் சாயல் .
மறுவார்த்தை பேசாதே பாடல் ஸ்கிரீனில் மின்னுகிறது ,காதல் வசனங்கள் செம்ம , காதல் ,ஆக்க்ஷன் ,அண்ணன் -தம்பி செண்டிமெண்ட் என முடிகிறது படம் . 3 வருட காத்திருப்புக்கு பிறகு வெளிவந்த என்னை நோக்கி பாயும் தோட்டா எதிர்ப்பாத்ததை ரசிகர்களுக்கு தரவில்லை என்றுதான் கூற வேண்டும். மத்தபடி படம் ஓகே ..படம் வந்த முதல் நாள் சென்னையில் 74 லட்சம் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது .
சின்னத்திரையில் தொகுப்பாளராக வலம் வந்து, பின்னர் வெள்ளித்திரையில் காமெடி வேடங்களில் நடித்து தற்போது முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான “நம்ம வீட்டு பிள்ளை” படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து அடுத்த மாதம் 20ம் தேதி “ஹீரோ “திரைப்படம் வெளியாகவுள்ளது .
அடுத்த கட்டமாக “இன்று நேற்று நாளை படத்தை” இயக்கிய ரவிக்குமார் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனை கேட்டுள்ளார். இந்த படத்திற்கு ஒப்புக்கொண்டு அதன் 75% படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை “ரகுல் ப்ரீத் சிங் “நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார் .
இந்த படம் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் கூறும்போது, நான் சினிமாவிற்கு நடிக்க வரும் போது, இயக்குனர் ஷங்கர் சார் இயக்கத்தில் நடிக்கவேண்டும் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் பாடலுக்கு நடனமாட வேண்டும் என்ற கனவோடு வந்தேன். என் நீண்ட நாள் கனவில் ஒன்று இந்த படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த படத்தில் 3 பாடல்கள் ஏ.ஆர். ரகுமான் ரெகார்ட் செய்துள்ளார் என கூறினார்.
சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஓவியாவிடம் செய்தியாளர்கள், ரஜினி – கமல் இருவரின் அரசியல் பிரவேசம் குறித்து அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இது தொடர்பாக தனது ட்விட்டரில், அரசியலில் ஈடுபடாத நடிகர், நடிகைகளிடம் அரசியல் தொடர்பான கேள்விகளை கேட்பதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அந்த பதிவை பார்த்த ரசிகர் ஒருவர், நீங்கள் ஒரு அரசியல் கட்சி தொடங்குங்கள் என கமண்ட் செய்தார் .
அதற்கு யாரும் எதிர்பாக்காத விதமாக, ரசிகர்கள் மனதையும் காயப்படுத்தாமல், அரசியல் கட்சி எதுக்கு, எனக்கு தான் ஆர்மி உள்ளதே! என திறமையாக பதில் ட்வீட்டை கொடுத்து ரசிகர் வாயை அடைத்தது மட்டுமல்லாமல் ஓவியா ஆர்மி ரசிகர்களை உற்சாகத்தில் தள்ளியுள்ளார் .
களவாணி படம் மூலம் தமழ் ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. இவர் விஜய் தொலைக்காட்சியில் முதன் முறையாக நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். யாரைப்பற்றியும் கவலை படாத, யாரையும் பற்றி பின்னல் போய் பேசாத இவரது குணம் ஓவியாவிற்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. முதன்முதலில் ஆர்மி ஆரம்பித்ததே ஓவியாவிற்கு தான்.
தனது ரசிகரின் மரணத்தில், கார்த்தி கண்ணீர் விட்டு அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.
மக்கள் மட்டும் ரசிகர்களின் நன்மதிப்பை எப்போதும் தன்வசம் வைத்துக்கொள்வதில் சிவகுமாரின் இளையமகன் கார்த்தி ரொம்ப இளகிய மனம் உள்ளவர். எந்த வித ஆர்பரிப்பும் இல்லாமல் சர்வ சாதாரணமாக இருக்கும் நட்சத்திர நடிகர் கார்த்தி. மக்கள் நல பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார்.
கார்த்தி மக்கள் நல மன்றத்தின் சென்னை மாவட்ட அமைப்பாளர் வியாசை நித்தியா, நேற்று இரவு உளுந்தூர்பேட்டை சாலை விபத்தில் சிக்கி உயிர் இழந்தார். வியாசை நித்தியாவின் மரண செய்தியை கேட்டவுடன் இன்று அதிகாலை அவரது உடலுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தினார். பிரிவால் வாடும் வியாசை நித்தியாவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். கார்த்தி கண்ணீர் விட்டு அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.