கிரைம்

அமெரிக்காவில் இந்தியருக்கு நடந்த சோகம்.., பூங்காவில் ஜாக்கிங் சென்ற 43 வயது பெண்ணை கொலை...

Quick Share

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஷர்மிஸ்தா சென்(43) ஆராய்ச்சியாளர் டெக்சாஸ் மாகாணத்தின் ப்ளானோ நகரில் வசித்து வந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். உயிரியல் தொடர்பான படிப்பில் ஆராய்ச்சி செய்து வரும் அவர், புற்றுநோயாளிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உடையவர்.

இவர் கடந்த 1ம் தேதி பூங்கா ஒன்றின் அருகே கடுமையாக தாக்கப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அதேநேரத்தில், அவரது வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக 29 வயது மதிக்கத்தக்க பகரி அபியோனா மொன்கிரீப் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர் ஷர்மிஸ்தா சென் இவர் தடகள வீராங்கனை எனபதும் இவர் பூங்கா பகுதியில் தினமும் ஜாக்கங் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதிரடியான விசாரணையில் கொலையாளி பகரி அபியோனா மொன்கிரீப் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சாலையோரத்தில் கிடந்த அரசு பாடப்புத்தகங்கள், சீருடைகள் -கன்னியாகுமரியில் பரபரப்பு!

Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அரசு வழங்கிய பாடப்புத்தகங்கள், சீருடைகள் சாலையோரம் கிரந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்களிடம் புத்தகங்களை ஒப்படைக்க சென்றவர்கள் டாஸ்மாக்கில் மது அருந்தி விட்டு மயங்கி கிடந்தனர். பள்ளிக்கு வர முடியாத மாணவர்களுக்கான புத்தகங்களை உள்ளுறை சேர்ந்தவர்களிடம் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது.

புத்தக பைகளை மாணவர்களிடம் ஒப்படைக்காமல் சாலையோரம் போட்டுவிட்டு மது அருந்தியுள்ளனர். சாலையோரம் கிடந்த புதிய புத்தகங்கள், சீருடைகளை பொதுமக்கள் மீண்டும் பள்ளியில் ஒப்படைத்தனர்.

வீட்டின் 3-வது மாடியிலிருந்து குதித்து தம்பதிகள் தற்கொலை -நெஞ்சை பதறவைக்கும் காரணம்!

Quick Share

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் உடல்நலத்தை பாதிப்பதோடு, பெரும்பாலானோர்களுக்கு மன உளைச்சளையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமான தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அனந்தபூர் என்ற பகுதியை சேர்ந்த வெல்ல வியாபாரி பனிராஜ். இவர் தனது மனைவி சிரிஷா மற்றும் 15 வயது மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பனிராஜ் மற்றும் அவருடைய மனைவி சிரிஷா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. ஏற்கனவே கொரோனாவால் பனிராஜ் தாயார் உயிரிழந்த நிலையில் தம்பதிகள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் ஒருசில நாட்களுக்கு முன்னர் தம்பதிகள் இருவரும் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மீண்டும் தங்களது தொழிலை வழக்கம் போல் செய்ய முயற்சித்த போது அக்கம் பக்கத்தினர் கொரோனாவில் இருந்து மீண்ட இந்த தம்பதியிடம் பேசுவதை தவிர்த்ததாகவும், அவர்களிடமிருந்து வெல்லம் வாங்குவதை நிறுத்தி கொண்டதாகவும் தெரிகிறது.

ஏற்கனவே கடன் தொல்லையால் அவதிப்பட்டு இந்த தம்பதியர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தங்களை ஒதுக்குவதை அறிந்ததும் மனமுடைந்தனர். இதனால் இருவரும் தங்கள் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூரில் மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்த சிறுவன் – விசாரணையில் பகீர் தகவல்!

Quick Share

செந்துறை அருகே மூதாட்டியை சிறுவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குவாகம் காலணி தெருவைச் சேர்ந்தவர் லோகிதாஸ் மனைவி சிவகாமி (80). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர். சிவகாமி தனியாக குவாகம் காவல் நிலையம் அருகே உள்ள குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் வீட்டில் இருந்த கட்டிலில் இறந்து கிடந்தார். இது குறித்து குவாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். உறவினர்கள் தங்களுக்கு ஏதும் முன்விரோதம் இல்லை ஆகையால் வழக்கு பதிவு எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டனர். மர்மமான முறையில் இறந்த சிவகாமியின் தலையில் லேசான காயம் இருந்தது.

அதனை தொடர்ந்து எஸ் பி உத்தரவின் பேரில் குவாகம் போலீஸார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சிவகாமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீனிவாசன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் நேரில் வந்து புலன் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மூதாட்டி அணிந்து இருந்த அரை பவுன் நகைக்காக அருகே வசிக்கும் சிறுவன் ஒருவன் மூதாட்டியை தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நகையை பறித்து சென்றது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து நீதிமன்ற அறிவுறுத்தலை பின்பற்றி அந்த சிறுவனை அவர்களது வீட்டிலேயே வைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அரை பவுன் நகை மற்றும் 100 ரூபாய் பணத்திற்காக மூதாட்டியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டான்.

ஏற்கனவே அந்த சிறுவன் செல்போன் உள்ளிட்ட பல்வேறு சிறிய திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். அரை பவுன் நகைக்காக மூதாட்டியை சிறுவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் கணவன் கண் எதிரே மலைவாழ் பெண்ணிற்கு நேர்ந்த கொடூர சம்பவம்!

Quick Share

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே கணவரை தாக்கி விட்டு மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை கைது செய்ய கோரி மலைவாழ் மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜாமின் நகர் தாண்டாவை சேர்ந்த மலைவாழ் மக்களான நாகேஷ் நாயக்கும், அவரது மனைவியும் குண்டுப்பாலம் அருகே காவலாளிகளாக வேலை செய்து வருகின்றனர். கடந்த வாரம் இவர்கள் இருவரும் பணியில் ஈடுபட்டிருந்த போது நள்ளிரவு 12 மணியளவில் அங்கு வந்த 3 பேர் நாகேஷ் நாயக்கின் கைகளை கட்டிவிட்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

மேலும் கணவரின் கண் எதிரிலேயே அவரது மனைவியை மர்மநபர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட அந்த தம்பதி, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மலைவாழ் மக்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். கணவன் கண் எதிரே மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இல்லையெனில் உயரதிகாரிகளிடம் முறையிடப்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை தொடர்ந்து, குறிப்பிட்ட தம்பதியிடம் தவறு செய்த அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தார்.

இதையடுத்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. அதே வேளை கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்குப் பதியப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காகப் பாதிக்கப்பட்ட பெண்ணையும், கணவரையும் போலீசார் மருத்துவமனை கொண்டு சேர்த்தனர்.

இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு..மாமனாரே மருமகனை அடித்து கொலை!

Quick Share

தருமபுரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக மாமனாரே மருமகனை அடித்து கொன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள ஒட்டர்திண்ணை கிராமத்தை சேர்ந்த 12 படித்த விஜய்யே கொலை செய்யப்பட்டவர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பொறியியல் படித்த வந்த மாணவி ராஜேஸ்வரியை அவர் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த மாமனார் முனிராஜ் தனக்கு சொந்தமான மாங்காய் மண்டிக்கு வருமாறு விஜய்க்கு கடந்த 1ம் தேதி அழைப்பு விடுத்தார். மாமனாரை பார்க்க சென்ற விஜய் கும்மனூர் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாமனார் மற்றும் அவரது உறவினர்கள் என 6 பேரிடம் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மாமனார் தரப்பினரே மருமகனை தலையில் இருப்பு கம்பியால் அடித்து கொன்று விபத்து நடந்ததை போன்று நாடகமாடியது தெரியவந்தது. சரக்கு வாகனத்தில் உடலை மறைத்து அதன் மீது தக்காளி பெட்டிகளை அடுக்கி எடுத்து சென்று சடலத்தை வீசி உள்ளனர்.

கொல்லப்பட்ட இளைஞர் ஏழ்மையானவர் என்பதால் இந்த வெறிச்செயல் அரங்கேறியுள்ளது. இதனையடுத்து மாமனார் முனிராஜ், அவரது உறவினர்கள் வீரமணி, சித்துராஜ், மஹாலிங்கம் உள்ளிட்ட 4 பேரை பிடித்து பஞ்சப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் பெட்ரோல் பங்க் ஒன்றில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தியதில் விஜய் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து முனிராஜ் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

உயிரிழந்த இளம் பெண்ணின் சடலம் சூட்கேசில் இருந்து கண்டெடுப்பு -அதிர்ச்சி பின்னணி!

Quick Share

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உயிரிழந்த இளம் பெண்ணின் சடலம் சூட்கேசில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ‌

அப்பெண்ணின் அடையாளங்களை போலீசார் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததை அடுத்து அலிகரை சேர்ந்த தாய் ஒருவர் அந்த சடலம் காணாமல் போன தனது 25 வயது மகள் வாரிஷாவின் சடலம் என அடையாளம் காட்டினார். மேலும் தனது மகளை அவரது மாமியாரும் கணவரும் கொடுமைப்படுத்தியதாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வாரிஷாவின் கணவரும், மாமியாரும் கடந்த 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த கொலையை கண்டுபிடித்ததற்காக காஸியாபாத் போலீசார் குழுவிற்கு 15,000 ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது.இந்நிலையில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் வாரிஷா உயிருடன் திரும்பி வந்து போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அப்பகுதி பேருந்து நிலையத்தில் ஒரு லேடி கான்ஸ்டபிளை அணுகிய வாரிஷா, கடந்த ஜூலை 24ஆம் தேதி தனது கணவரால், தான் தாக்கப்பட்டதாகவும், அதன்பிறகு கணவரை விட்டுவிட்டு நொய்டாவுக்குச் சென்றதாகவும், அங்கு ஒரு தொழிற்சாலையில் தங்கியிருந்து தினசரி கூலி வேலை செய்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், தான் இறந்ததாக அறிவிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும், தனது பெற்றோரிடம், தான் உயிரோடு இருப்பதைக் கூறுவதற்காக வந்ததாக தெரிவித்துள்ளார். இதனிடையே வாரிஷாவை கொடுமைப்படுத்தியதாக அவரது கணவரும் மாமியாரும் சிறையில் உள்ள நிலையில், இப்போது வரை சூட்கேஸில் இருந்த அந்த பெண் யார் என்று தெரியாமல் காஸியாபாத் போலீசார் திணறி வருகின்றனர்.

மேலும் தவறான உடலை தன் மகளென அடையாளம் காட்டியதற்காக வாரிஷாவின் தாய் மற்றும் சகோதரர்கள் மீது நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் இறந்த பெண் செவிலியர்..2 மணி நேரமாக புதைக்காமல் கிடந்த அவலம் -ஆற்காடு அருகே அ...

Quick Share

கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் செவிலியரின் உடலை அடக்கம் செய்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கல்லறையில் அவரின் சடலத்தை வைத்து உறவினர்கள் தவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு தமிழகத்தின் சென்னை உள்பட பல நகரங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ராணிப்பேட்டையை சேர்ந்த செவிலியர் அர்ச்சனா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவரின் சொந்த ஊரான நாவல்பூரில் உள்ள கல்லறை தோட்டத்தில், உடலை புதைப்பதற்காக உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.

அதன் படி அவரின் சடலத்தை கொண்டு வந்தனர். ஆனால் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை எங்கள் பகுதியில் புதைக்கவிட மாட்டோம் என்று, அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திடீரென்று தகராறில் ஈடுபட்டனர்.

இது குறித்து தவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனால் உயிரிழந்த அர்ச்சனாவின் சடலத்தை கல்லறை அருகே வைத்து கொண்டு உறவினர்கள் தவித்து வந்துள்ளனர். இப்படி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் இறுதியாக கிராம மக்கள் ஒப்புக் கொண்டதால், அதன் பின் செவிலியரின் சடலம் அங்கு புதைக்கப்பட்டது.

பொதுமக்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்காக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் செவிலியராக பணிபுரிந்து ஒருவரின் உடலை அந்த கிராமத்து மக்களே அடக்கம் செய்யவிடாமல் எதிர்ப்பு தெரிவித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சொந்த மகனையே நரபலி கொடுக்க முயன்ற தந்தை – போலி சாமியார் பேச்சை கேட்டதால் நேர்ந்த ...

Quick Share

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை அடுத்த சடையமான்குளம் சேர்ந்தவர் பார்வதி (வயது 70). இவரது மகன் குமரேசன்.குமரேசனுக்கு திருமணமாகி 7 வயதிலும், 5 வயதிலும், ஐந்து மாத கை குழந்தையாகவும், மொத்தம் 3 மகன்கள் உள்ளனர். இதில், மூதாட்டி பார்வதிக்கு மாந்த்ரீகம் தொடர்பாக அதிகம் நம்பிக்கை இருந்து வந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக, அப்பகுதியை சேர்ந்த கிரான ராஜன் என்ற போலி சாமியாருடன் நீண்ட நாட்களாக பார்வதிக்கு பழக்கம் இருந்து வந்துள்ளது. அதே போல, பார்வதி வீட்டிலும் அடிக்கடி நள்ளிரவு மாந்த்ரீக பூஜைகள் நடந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், பார்வதி வீட்டில் புதையல் இருப்பதாகவும், அதனை எடுத்து தர வேண்டும் என்றால் 2 லட்சம் ரூபாய் பணத்தை தர வேண்டும் என கூறி கிரான ராஜன், பார்வதியிடம் இருந்து 2 லட்சம் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவு குமரேசன் வீட்டில் புதையல் எடுப்பதற்கான பூஜையை மேற்கொண்டுள்ளனர். பூஜைக்கு இடையே பலி கொடுக்க வேண்டி கறுப்புப் பூனை ஒன்றும், கோழி ஒன்றும் கொண்டு வரப்பட்டுள்ளது.

அப்போது, பலி கொடுக்க இருந்த பூனை தப்பித்து ஓடியுள்ளதாக தெரிகிறது. இதனால் குமரேசனின் ஐந்து மாத குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் என கிரான ராஜன் கூறியுள்ளார். இதற்கு பார்வதியும், அந்த சமயத்தில் குடி போதையில் இருந்த குமரேசனும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், குழந்தையின் தாய் ஒப்புக் கொள்ளாமல் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கதறியழுதுள்ளார். அவரிடம் இருந்து குழந்தையை பறிக்க மற்றவர்கள் முயற்சி செய்த நிலையில், அவர் குழந்தையை கொண்டு வீட்டிற்கு வெளியே தெருவில் வந்து கூச்சலிட்டுள்ளார்.

அப்போது, அவரது கூச்சலைக் கேட்டு அங்கு கூடிய அக்கம் பக்கத்தினர் பார்வதி, குமரேசன் மற்றும் போலி சாமியார் கிரான ராஜன் ஆகியோரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மூவரையும் கைது செய்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். புதையல் கிடைக்கும் என்பதற்காக சொந்த குழந்தையையே தந்தை குடி போதையில் நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வார்டில் அடிப்படை வசதி எதுவும் இல்லை -வாக்குவாதத்தில் கொரோனா நோயாளிகள் !

Quick Share

திருவண்ணாமலை மாவட்டம் தச்சூர் அரசு பொறியியல் கல்லூரியில் கொரோனா நோயாளிகள் சுமார் 152 பேர் தங்க வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு அடிப்படை வசதி எதுவும் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்கு 5 அறைக்கு 1 கழிவறை உள்ளதாகவும், இதனால் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் சுகாதார துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நோயாளி ஒருவர் சுகாதாரத் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மாமியார் குடும்பத்தில் 4 பேரை சரமாரியாக வெட்டிய கணவன்..மனைவி பரிதாபமாக பலி!

Quick Share

சத்தியமங்கலம் அருகே குடும்பத் தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை வெட்டித் தள்ளியதில் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அக்கரைதத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா. இவரது காதல் கணவர் வீரமணிகண்டனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான பவித்ரா தனது தந்தை சாஸ்தா மூர்த்தி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை எழுந்து குழந்தைகள் இருவரில் ஆளுக்கு ஒருவர் என எடுத்து வளர்த்துக் கொள்வது என ஊர் பெரியவர்கள் முன்னிலையில் முடிவாகியுள்ளது.

இரண்டு வயதுடைய பெரிய மகனை வீரமணிகண்டனும், 9 மாத இளைய மகன் கிருத்திக்கை பவித்ராவும் வளர்த்து வந்தனர். நேற்றிரவு பவித்ராவின் வீட்டுக்கு வந்த கணவர் வீரமணிகண்டன் மற்றும் அவரது நண்பர் ராம்குமார் ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது ஆத்திரமடைந்த வீரமணிகண்டன், பவித்ராவை அரிவாளால் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டியுள்ளார். அதனை தடுக்க வந்த பவித்ராவின் தந்தை சாஸ்தாமூர்த்தி, தாயார் அமுதா, பாட்டி சித்தம்மாள் ஆகியோரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பவானிசாகர் காவல்துறையினர் அனைவரையும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பவித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூவரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மனைவியை கொலை செய்த கணவர் வீரமணிகண்டன் மற்றும் அவரது நண்பர் ராம்குமார் ஆகியோரை கைது செய்த பவானிசாகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டையில் 10-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த பகீர் சம்பவம் -தொடரும் அதிர்ச்சி…!!!

Quick Share

புதுக்கோட்டை 10ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல் ஆபாச படமெடுத்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் பாலியல் தொல்லைகள் அதிகமாக நடந்து கொண்டே இருக்கின்றன. இதனால் பச்சிளம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். மேலும் பாலியல் வன்கொடுமையால் பலரும் படுகாயமடைந்துள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் இந்த நிலை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. அதாவது கீரனூர் அருகே குப்பத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய 10ம் வகுப்பு மாணவியை அதே ஊரை சேர்ந்த உறவினரான முருகன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், பாலியல் செய்ததோடு மட்டுமல்லாமல் அதனை ஆபாச படமாக எடுத்து மாணவியின் தாயாரிடம் காட்டி, தமக்கு திருமணம் செய்துவைக்கும்படி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ மற்றும் தகவல் தொழிநுட்ப சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். அதிலிருந்து மீள்வதற்குள் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் நிகழ்ந்து கொண்டே வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




You cannot copy content of this Website