கிரைம்

திண்டுக்கல்: 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த கொடூரன்கள்!

Quick Share

திண்டுக்கல்லில் 8 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 4 சிறார்களை போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸார் கைதுசெய்தனர்.

திண்டுக்கல்லில் ரயில் நிலையம் அருகே உள்ள கக்கன் நகரில் வசிக்கும் 8 வயது மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த 12 மற்றும் 13 வயதுகொண்ட 4 மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூற திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்ரோர் புகார் அளித்தனர்.

அதன்படி, போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைதுசெய்த போலீஸார், அவர்களை சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.

பெற்ற தந்தையை அடித்து கொலை செய்துவிட்டு 2 மகன்கள் தப்பியோட்டம் -வலைவீசி தேடி வரும் போ...

Quick Share

ஆத்தூர் அருகே உடல்நிலை சரியில்லாத தந்தையை அடித்துக் கொன்ற மகன்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

ஆத்தூர் அருகே செல்லிபாளையத்தில் உள்ள லட்சுமண சமுத்திரம் பகுதியில் வசிப்பவர் கெங்கு. இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருடைய இரண்டு மகன்களும் அருகே உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இரண்டு மகன்கள் சக்திவேல், வெங்கடேஷ் ,இரண்டு பேரும் ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றனர்.

அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் அருகில் உள்ள உறவினர்களிடம் சென்று சாப்பாடு வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளார். இதனால் நீ அருகில் உள்ள வீட்டில் ஏன் சாப்பாடு கேட்டு வாங்கி சாப்பிடுகிறாய் என்று இரண்டு பேரும் இன்று மாலை தன் அப்பாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வாக்குவாதம் அதிகமாக ஏற்பட்டு இரண்டு மகன்களும் சேர்ந்து தந்தை கீழே தள்ளி விட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக சம்பவ இடத்திலேயே தந்தை இறந்துவிடுகிறார்.

உடனாடியாக அருகில் உள்ள உறவினர்கள் ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தின் பேரில் ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கெங்குவை கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான இரண்டு மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.

கணவர் அளித்த தொடர் தொல்லை – தாங்க முடியாமல் மனைவி தற்கொலை -காரணம் என்ன?

Quick Share

திருமணமாகி ஒரு சில மாதங்களில் தாய்வீட்டில் புதுப்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்தவர் பிரியங்கா(24). எம்பிஏ பட்டதாரியான இவருக்கும், காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த நிரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்துள்ளது.நிரேஷ் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். மேட்ரிமோனி மூலமாகவே இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணமான இரண்டு மாதம் மகிழ்ச்சியாக இருந்த இந்த தம்பதி பின்பு சிறிது சிறிது சண்டை ஏற்பட்டு, இறுதியில் தாய் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.இந்நிலையில் பிரியங்கா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதையறிந்து, போலிசார் பிரியங்காவின் சடலத்தினை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில், வரதட்சணை பிரச்சனை என்றும், கல்யாணத்துக்கு 140 சவரன் பெண்ணுக்கு நகை போடுவதாக, கூறிவிட்டு 40 சவரன் மட்டுமே போட்டுள்ளதாகவும், இதனால் இருவீட்டாருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பின்பு நிரேஷ் வீட்டிலிருந்து அவரது தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இதனால் கதறியழுது கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது.இதனையடுத்து போலிசார் கணவர் நிரேஷ் வீட்டாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 மாதமாக ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில் அக்கா தங்கை இருவரை 8 பேர் சேர்ந்து செய்த கொடூர ...

Quick Share

சத்தீஸ்கர் மாநிலத்தில் அக்கா தங்கை என இரு சிறுமிகளை 8 இளைஞர்கள் இரண்டு மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் மாவட்டத்தின் பாலாரி பகுதியில் கடந்த மே 31 இரவு சுமார் 11.30 மணியளவில் 14 மற்றும் 16 வயதுடைய இரு சிறுமிகள் தங்கள் ஆண் நண்பர்களுடன் பைக்கில் வெளியே சென்றுள்ளனர். அதனை சிறுமியின் உறவினர் இளைஞர் மற்றும் அவரின் நண்பர்கள் நோட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் அக்கா தங்கை இருவரும் அதிகாலை 2 மணியளவில் ஊருக்கு திரும்பி வரும் போது ஊருக்கு வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் 8 பேர் அடங்கிய அந்த கும்பல் சிறுமியின் ஆண் நண்பர்களை அடித்து விரட்டியுள்ளனர். மேலும் இவ்வாறு இரவு நேரங்களில் வெளியே செல்வதை அப்பா அம்மாவிடம் கூறப் போவதாகவும் சிறுமிகளின் சொந்தக்காரர் மிரட்டியுள்ளார். சிறுமிகள் எதுவும் சொல்லவேண்டாம் என கெஞ்சி அழுதுள்ளனர். மேலும் அங்கிருந்து தப்பிக்க முற்படும் போது இளைஞர் கும்பல் சிறுமிகளின் முடியை பிடித்து இழுத்து ஆள் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை 8 பேர் கொண்ட கும்பல் 2 மணிநேரம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும், அதனை வீடியோ எடுத்தும் உள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த வீடியோவை காட்டி சுமார் 2 மாதங்கள் தினமும் அச்சிறுமிகளை தனியே வரவழைத்து பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில் ஜூலை 29 அன்று 8 பேர் கொண்ட கும்பலில் அல்லாத ஒருவர் தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். இந்த கொடூரத்திற்கு எப்படியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைத்த இரு சிறுமிகளில் ஒருவர் கடந்த புதன்கிழமை அன்று பெண்கள் ஹெல்ப்லைனை டயல் செய்து உதவி கேட்டுள்ளார்

அதையடுத்து இந்த சம்பவம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளின் நிலைக்கு காரணமாகிய 11 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது ஐபிசி மற்றும் போக்ஸோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒரு பெரியார் சிலை முகம் உடைப்பு – திருவள்ளூரில் பரபரப்பு!

Quick Share

மீஞ்சூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இந்த சமபவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை, சுந்தராபுரத்தில் இருக்கும் பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசப்பட்டது. இதையடுத்து அங்கு கூடிய திமுக, திக, விசிக, மதிமுக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக, கோவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சந்திரசேகர் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து, போத்தனூரைச் சேர்ந்த பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் (21) தானாக முன் வந்து போலீசில் சரண் அடைந்தார். இவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

இதற்குப் பின்னர் சேலத்தில் பெரியார் சிலைக்கு காவித்துண்டு போர்த்துவதற்கு வந்த இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

இந்த நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையை சேதப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரி மாணவி செல்போனுக்கு வந்த மெசேஜ் லிங்க்…ரிப்ளை செய்ததால் நேர்ந்த விபரீதம்!

Quick Share

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கல்லூரி மாணவியிடம் இணையதளம் மூலம் நூதன முறையில் 87 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

அங்குள்ள தனியார் மருந்தியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருபவர் சவுந்தர்யா. இவரது செல்போனை தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று, கூகுள் பே இணையப் பணவர்த்தனை செயலிக்கு வந்துள்ள லிங்கை கிளிக் செய்யும்படி கேட்டுள்ளனர்.

அவர்கள் சொன்னபடி செய்த சவுந்தர்யாவின் வங்கிக் கணக்கில் இருந்த 87 ஆயிரம் ரூபாய் பணம் மின்னல் வேகத்தில் சூறையாடப்பட்டது. இதன் பின்னர் சவுந்தர்யவின் தந்தை சுரேஷ், நாமக்கல் மாவட்ட காவல் கண்காளிப்பாளரிடம் புகார் அளிக்க, அவர்கள் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

corona-வை காரணம் காட்டி உருக்கமாக வீடியோ வெளியிட்டு 3 கோடி ரூபாய் மோசடி!

Quick Share

ஆந்திராவில் கொரோனாவை காரணம் காட்டி சமூக ஊடகங்களில் உருக்கமாக வீடியோ வெளியிட்டு 3 கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞர்கள் 2 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பழைய ஹைதராபாத் நகரை சேர்ந்த இளைஞர்கள் சிலர் HYC என்ற அமைப்பை தொடங்கி, கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் உயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகளுக்கு தாங்கள் நேரடியாக சென்று உதவி செய்வதாக இளைஞர் ஒருவர் பேசியிருந்தார். மேலும், இளைஞரின் பின்னால், பெண் ஒருவர் கொரோனா பாதித்து தீவிர சிகிச்சை எடுத்து வருவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இதனை நம்பிய பலர், வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கிக் கணக்குக்கு நன்கொடை செலுத்தியுள்ளனர். தொழிலதிபர் ஒருவர் 45 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இது போன்று 15 நாட்களில் சுமார் 3 கோடி ரூபாய் வரை பணம் வசூல் செய்த அந்த கும்பல் தங்களின் நன்கொடை பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைந்ததா என விசாரிக்க சென்றவர்களையும் தாக்கியதாக சொல்லப்படுகின்றது.இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட இளைஞர்கள் சல்மான்கான்,அகமது மொய்தீன் ரஷித்தை போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகர்கோயில் சிறுமி பாலியல் வன்கொடுமை : பணத்திற்காக பெற்ற தாயே துணை நின்ற கொடூர செயல்!

Quick Share

நாகர்கோவிலில் பெற்ற தாயே பணத்திற்காக 13 வயது மகளை 60 வயது எம்.எல்.ஏவிடம் அழைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் அடுத்த கோட்டாரை சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த தன்னுடைய காதலனுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு காணமல் போயுள்ளார். இதனால், அந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில், போலிசார் அவர்களை தேடி வந்தனர்.

அப்போது சிறுமி மற்றும் அவருடைய காதலனை போலிசார் கண்டுபிடித்து விசாரித்த போது, அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தன்னை பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து போலிசார் தலைமறைவாக இருந்த நாஞ்சில் முருகேசனை பிடிக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இறுதியில் கைது செய்யப்பட்டார். காணமல் போன சிறுமியை போலிசார் கண்டுபிடித்த போது, அவர்கள் பெற்றோரிடம் சிறுமியை ஒப்படைக்கவில்லை. மாறாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்று, அங்கு வைத்து விசாரித்துள்ளனர்.

அப்போது அந்த சிறுமி, தன்னை பெற்றோருடன் அனுப்பி வைக்க வேண்டாம் என்று கதறி அழுதுள்ளார். கடந்த 2 வருடத்திற்கு முன்பு, 2017-ஆம் ஆண்டு பெற்ற மகளை அவர்கள் முருகேசனிடம் அழைத்து சென்றுள்ளனர்.

பணத்திற்காக அவர் இந்த காரியத்தை செய்திருக்கிறார்கள். முருகேசன் மட்டும் சிறுமியை சீரழிக்காமல், தன்னுடைய நண்பர்களுக்கும் விருந்தாக்கியுள்ளார். இதை சொல்லி அந்த சிறுமி, என் அம்மாவிடம் மட்டும் என்னை அனுப்பாதீர்கள் என்று பொலிசாரிடம் கதறி அழுதுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலிசார், சிறுமியின் தாய் , பால், அசோக்குமார், கார்த்திக் உட்பட 4 பேரை கைது செய்தனர். நாஞ்சில் முருகேசனுக்கு அந்த சிறுமியின் அம்மாவுடனும் தொடர்பு இருந்துள்ளது.

இந்த பாலியல் கும்பலிடம் சிறுமி தவித்து சிக்கியிருக்கிறாள். அந்த பிடியில் இருந்து தப்ப முடியாமல் தவித்தபோது, அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு சிறுமி வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்.

சிறுமியின் முழு வாக்குமூல அறிக்கையை குழந்தைகள் நலக்குழுவினர் கலெக்டருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். கலெக்டரும், எஸ்பியும் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தி, சென்னை டிஜிபி அலுவலகம், மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.

இதன் பிறகு தான் முருகேசன் கட்சியில் இருந்து தூக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் வன்கொடுமையில் ஈடுபட்டதால், நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, பிறகு, 5 தனிப்படைகள் அமைத்து, தோட்டத்தில் பதுங்கி கொண்டிருந்த முருகேசனை நேற்று கைது செய்தனர்.

ஒரு வருடத்திற்கு பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்டசிறுமி நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

Quick Share

சென்ற ஆண்டு சுவிட்சர்லாந்தில் அடித்த புயலில் சிக்கிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆறு வயது சிறுமியின் உடல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது, காரில் சென்று கொண்டிருந்த அந்த சிறுமியும் அவருடன் பயணம் செய்த மற்றொரு ஆணும் புயல் வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்படுவதைக் கண்டு உதவமுடியாமல் கதறி அழுதுகொண்டிருந்தார் அந்த சிறுமியின் தாய்.

பின்னர் அந்த கார் கண்டுபிடிக்கப்பட்டாலும், அந்த காரில் யாரும் இல்லை. இந்நிலையில், சுமார் ஒரு ஆண்டுக்குப்பின், ஜெனீவா ஏரி பகுதியில் ஒரு சிறுமியின் உடல் கிடைத்துள்ளது. DNA பரிசோதனையில், அது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அந்த பிரான்ஸ் நாட்டுச் சிறுமியின் உடல்தான் என்பது தெரியவந்தது. இருந்தும், அவளுடன் பயணம் செய்த அந்த ஆணின் உடல் இதுவரை கிடைக்கவில்லை.

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Quick Share

இந்தியாவை சேர்ந்த தம்பதி அமெரிக்காவில் வாழ்ந்து வந்த நிலையில், மனைவியை கணவன் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தின், Monippally-ஐ சேர்ந்தவர் Merin Joy. 26 வயதான இவர் அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் இருக்கும் Broward Health Coral Springs மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இவர் வழக்கமாக பணிக்கு சென்று விட்டு, மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, திடீரென்று மர்ம நபர் ஒருவரால் பல முறை கத்தியால் குத்தப்பட்டு மற்றும் காரால் தாக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார்.

அதன் பின் இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக Philip Mathew என்ற 34 வயது நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்த பெண்ணின் கணவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து Coral Springs காவல்துறை துணைத் தலைவர் Brad McKeone கூறுகையில், அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, அந்த நபர் அவரை இழுத்து பல முறை கத்தியால் குத்தியதாக கூறியுள்ளார்.

இதனால் அவர் உடனடியாக சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட போதும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தம்பதி கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இருவரும் தனித் தனியாக வாழ்ந்து வருவதாகவும், குழந்தை தாயின் அரவணைப்பில் இருந்து வருவதால் Merin Joy மற்றும் அவரின் தாய் Philip Mathew-வை பார்க்கவே விடவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், Philip Mathew தன் மகள் மற்றும் மனைவி மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். இருப்பினும் கடந்த திங்கட் கிழமை குழந்தையை ஒரு போதும் பார்க்க உன்னை அனுமதிக்காமாட்டார்கள் என்று பிலிப்பிடம், ஜாய் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பிலிப் மறுநாள் காலையில் வேலை முடித்து வந்த மனைவியை அந்த ஆத்திரத்தில் குத்திவிட்டதாக பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

முதல்வர் மகளுக்கு செல்போனில் ‘ஆபாச’ அழைப்புகள்.., மர்ம சாமிகளின் செயல் !

Quick Share

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத்தின் மகள் ரூபையா ஷெரீப் தனது போனுக்கு மர்ம நபர்கள் அழைப்பு செய்து தொல்லை செய்வதாக புகார் அளித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத்தின் மகள் ரூபையா ஷெரீப் (45). திருமணமாகி சென்னை கணவருடன் ஆர்.ஏ.புரம் கேசவபுரத்தில் குடும்பத்தோடு குடியிருந்து வருகிறார். இவரின் கணவர் கார் விற்பனை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

ரூபையா ஷெரீப் மொபைலுக்கு 3 ஆபாச அழைப்புகள் வந்துள்ளதாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அது எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிந்து உள்ளனர். வெளிநாட்டு நம்பரில் இருந்தும் இப்படி போன் வந்ததால் அதனை பிளாக் செய்துவிட்டதாக கூறினார். ஆனாலும் அடுத்தடுத்து வேறு நம்பரில் போன் வந்ததால் புகார் கொடுத்துள்ளார்.
போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம்பெண்ணை ஏமாற்றி பிறப்புறுப்பில் இருந்து மாதிரி எடுத்த மருத்துவ ஊழியர்!

Quick Share

கொரோனா பரிசோதனைக்காக சென்ற 24 வயது இளம் பெண்ணிடம், மூக்கில் பரிசோதனைக்காக மாதிரி எடுப்பது போல், அவரின் பிறப்புறுப்பில் மாதிரி எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் எளிதாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவி விடுவதால், இந்த நோய் குறித்து சிறிய அறிகுறி இருந்தால் கூட பரிசோதனை அவசியம் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

அந்த வகையில், மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதியைச் சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தன்னுடன் பணி புரிந்த மற்றொரு பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், தனக்கும் எங்கு கொரோனா பரவியிருக்குமோ என்ற அச்சத்தில் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளார். அதன் படி பரிசோதனைக்கு சென்ற போது, பொதுவாக கொரோனா பரிசோதனைக்காக மூக்கு அல்லது வாயில் இருக்கும் சளிகளை எடுத்து, கொரோனா இருக்கிறதா? இல்லையா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

ஆனால், அந்த பெண்ணை பரிசோதனை செய்த பரிசோதனை செய்யும் நபர், உங்களின் பிறப்புறுப்பில் இருந்து மாதிரிகளை எடுக்க வேண்டும். அது மிக முக்கியமானது என்று கூறி, அந்த பெண்ணை நம்ப வைத்துள்ளார். இதையடுத்து பரிசோதனை முடிந்து வீட்டிற்கு திரும்பிய அப்பெண், தனக்கு நடந்த பரிசோதனை குறித்து சகோதரரிடம் கூறியுள்ளார்.

இதனால், அந்த சகோதரர் உடனடியாக தனக்கு தெரிந்த சில மருத்துவர்களிடம் இது குறித்து விசாரித்த போது, அப்படி ஒரு சோதனையே கிடையாது என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு, அந்த பெண்ணும், சகோதரரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின் இது குறித்து காவல்நிலையத்தில் அந்த நபர் மீது கற்பழிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




You cannot copy content of this Website