கிரைம்

தந்தை சாவில் மகனுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் !!

Quick Share

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் ஜோதி முருகன்(32) தந்தை இவருடைய ஆண்டிச்சாமி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

தந்தையின் இறுதிச்சடங்கு செய்வதற்காக அவரது ஜோதி முருகன் மாலை உட்பட இறுதிச்சடங்கு பொருட்களை வாங்குவதற்காக நண்பர் முத்துச்செல்வம் என்பவரை அழைத்துக்கொண்டு நிலக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது குண்டலபட்டி அருகே எதிர்பாராத விதமாக மினி லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜோதிமுருகனும், அவரது நண்பரும் படுகாயம் அடைந்தனர். அடிபட்ட இருவரையும் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மோசமான நிலையில் மேல்சிகிச்சை கொடுத்து பலனின்றி நேற்று ஜோதிமுருகன் பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற முத்துசெல்வத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தந்தை சாவிற்காக சென்ற மகன் வாகன விபத்தில் இறந்தது அவர் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேட்ரிமோனி என கூறி இளம் பெண்ணிடம் லட்சக்கணக்கில் ஆட்டையை போட்ட பலே திருடன் !! நூதனமாக ச...

Quick Share

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலை சேர்ந்தவர் என்ஜினீயரிங் பட்டதாரியான ராகேஷ் சர்மா (வயது 36). இவர் கொடுங்கையூரில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணிடம், மேட்ரிமோனி மூலம் அறிமுகம் ஆனார். அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அந்த பெண்ணிடம் மூளை சலவை செய்து 5½ லட்ச ரூபாய் பணம் மற்றும் 20 பவுன் நகை ஆகியவற்றை வாங்கியுள்ளார்.

அடிக்கடி காசு கேட்பதால் ராகேஷ் சர்மா மீது அந்த இளம்பெண்ணுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து தனது தந்தையிடம் அவர் கூற அவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இது தெரியாமல் ராகேஷ் சர்மா மீண்டும் அந்த பெண்ணுக்கு போன் செய்து 2000 ஆயிரம் ரூபாய் பணம் கேட்க அவர் போலீசார் அறிவுரைப்படி மாதவரம் ரவுண்டானா அருகே வரும்படி கூறியிருக்கிறார். சொன்ன இடத்திற்கு ராகேஷ் சர்மா வர போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

ராகேஷ் ஷர்மாவிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். திருமணமாகி மனைவி பிரிந்து சென்றதை அடுத்து கத்தாரில் வேலை பார்த்துள்ளார். வெளிநாடுகளை சேர்ந்த பெண்களையும் ராகேஷ் சர்மா ஏமாற்றி இருப்பதாக தெரிகிறது. நான் அவன் இல்லை படம் பார்த்து ஐடியா வந்ததாக கூறியுள்ளார். இதுவரை 20க்கும் மேற்பட்ட பெண்களை ராகேஷ் சர்மா ஏமாற்றி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேட்ரிமோனி என கூறி இப்படி பல மோசடி சம்பவங்கள் ஆங்காங்கே நடந்துகொண்டு தான் இருக்கிறது.

சாலையில் சாக்கு பையில் கட்டியபடி இருந்த இளம் பெண்ணின் உடல் !! அதிர்ச்சி சம்பவம்

Quick Share

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே சாகியாபாத் என்னும் பகுதியில் சாலையோரம் சூட்கேஸ் ஒன்று சந்தேகத்திற்கு இடமாக அப்பகுதியில் கிடந்துள்ளது. அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சூட்கேஸை சோதனை செய்தனர்.

சுமார் 30 வயதுக்குள் இருக்கும் ஒருவரின் உடல் இருந்ததைக் கண்டு போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெண்ணின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மர்மமான முறையில் இறந்த பெண் யார் என்பது குறித்து சரியான தகவல் எதுவும் தெரிய வராத நிலையில், பெண்ணை அடையாளம் காணுவது தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

காய்கறி கார்கோவில் தங்கம் கடத்தல் !! விசாரணையில் பல முக்கிய புள்ளிகள்

Quick Share

கேரளாவை சேந்த ஸ்வப்னா சுரேஷ் என்பவர் தனது பதவியை பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சட்டவிரோதமாக 30 கிலோ தங்கம் கேரளாவுக்கு கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். அண்மையில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த கடத்தல் விவகாரத்தில் 20-க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர்.

என்ஐஏ அதிகாரிகள் ஸ்வப்னாவிடம் விசாரணை நடத்தியதில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உதவியுடன் தங்கம் கடத்தப்பட்டதாக ஸ்வப்னா வாக்குமூலம் அளித்துள்ளார். கார்கோ விமானத்தில் காய்கறிகள் கொண்டு செல்லும் கண்டெய்னர்கள் மூலம் பணம், நகை கடத்தப்பட்டதாக ஸ்வப்னா தகவல் அளித்துள்ளார்.

என்ஐஏ அதிகாரிகள் காவலில் விசாரணையை முடித்து கடந்த நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவருடன் கைதுசெய்யப்பட்ட சந்தீப் நாயர் ஆகியோரை அடுத்த மாதம் 21-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த தங்க கடத்தல் விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கும் தொடர்புடையதால் விசாரணை தீவரமடைந்துள்ளது.

பெற்ற மகளை கொன்றுவிட்டு நாடகமாடிய தந்தை: பிரேத பரிசோதனையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

Quick Share

குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக பெற்றோர் கூறி வந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்தவர் பாலாஜி. இவர் தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மகளிர் சங்க தலைவியாக உள்ளார். இந்த தம்பதிக்கு செந்தாரகை என்ற 23 வயதில் மகள் இருந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செந்தாரைக்கும், யுவராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால், செந்தாரகைக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை.

இதையடுத்து, கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் செந்தாரை தனது தாய்வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார். அப்போது வீட்டின் குளியலறைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை. கதவை உடைத்து பார்த்ததில் குளியலறையில் அவர் வழுக்கி விழுந்து இறந்து கிடந்துள்ளார். ஆனால் அவரின் பெற்றோர், செந்தாரகையின் உடலை அவசர அவசரமாக அடக்கம் செய்வதிலே குறிகோளாக இருந்தனர். இதனால் செந்தாரகை மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பொலிசாருக்கு தகவ்ல கிடைத்துள்ளது.

அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது செந்தாரையின் பிரேத பரிசோதனையின் முடிவு வெளியாகியுள்ளது. அதில், கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதையடுத்து செந்தாரகையின் தந்தை பாலாஜி கைது செய்யப்பட்டு மதுராந்தகம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்ததை மாற்றி, தற்போது கொலை வழக்காக உத்திரமேரூர் பொலிசார் பதிவு செய்துள்ளனர். திருமணம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து செந்தாரகையின் கழுத்தை பாலாஜி நெரித்து கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் உயிரிழப்பதற்கு முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளருக்கு பெற்றோர்களால் தமக்கு ஆபத்து இருப்பதாகவும் உடனடியாக தன்னை மீட்டு செல்லுமாறும் தனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு தன் பெற்றோர் பாலாஜி மற்றும் ஜெயந்தி தான் காரணம் எனவும் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தது தற்போது வெளியாகியுள்ளது.

வறுமையின் பிடியில் தொழிலாளி: ரூ.45 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட பச்சிளம் குழந்தை!

Quick Share

அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் ஒரு வனப்பகுதி கிராமத்தை சேர்ந்தவர் தீபக் பிரம்மா. இவர், ஊரடங்குக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். ஊரடங்கைத் தொடர்ந்து சொந்த ஊருக்கு திரும்பினார். அங்கு உறவினர் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

எவ்வளவோ முயன்றும் வேலை கிடைக்கவில்லை. வறுமையால் அவதிப்பட்டார். இதற்கிடையே, கடந்த மாதம் அவருடைய மனைவி 2-வது பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனால், செலவு மேலும் அதிகரித்ததால், அந்த பச்சிளம் குழந்தையை 2 பெண்களிடம் ரூ.45 ஆயிரத்துக்கு விற்பனை செய்தார்.

இதை அறிந்த அவருடைய மனைவியும், உறவினர்களும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்டனர். தீபக் பிரம்மாவையும், குழந்தையை வாங்கிய 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் எல்லாம் நிஜ வாழ்க்கையிலும் கொடூரமானவர்கள்.., தைரியமாக நடந்ததை வெளிப்படுத்திய பி...

Quick Share

இந்திய முன்னாள் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால் உடன் நெருக்கமாக பழகி வருகிறார். அவ்வப்போது இவர்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் தங்களது நெருக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இரண்டு பேரும் திருமணமாகி விவாகரத்து ஆனவர்கள் என்பதால் நல்ல புரிதல் இருவருக்குமிடையே நிலவி வருகிறது. ஹீரோயின் போல அழகாக இருக்கும் ஜுவாலா கட்டா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில் சமூகவல்தளத்தில் பெண் தெய்வம் ஒன்றின் கையில் இருக்கும் கொடியில் சானிடரி நாப்கின் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட ஜூவாலா, ‘பீரியட்ஸ் ஆர் கூல்’ என்று பதிவு செய்திருந்தார்.

இதற்கு ஒரு நெட்டிசன் ஜுவாலா கட்டா விற்கு ஆபாசமான வார்த்தையில் அவரது தாயாரை இழிவாக பேசியுள்ளார். இந்த மெசேஜை தைரியமாக வெட்டவெளியில் பகிர்ந்துள்ளார். மிகவும் தரக்குறைவான வார்த்தைகள் என்பதால் இப்படியும் சமூக வலைத்தளங்களில் சிலர் கொடூரமானவர்கள் இருக்கிறார்கள், இவர்கள் சமூக வலைதளம் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் மோசமானவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/Guttajwala/status/1286378126868492288?s=20

பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம்-34 ஆண்டுகள் சிறை தண்டனை..மகிளா...

Quick Share

வட்டி பணம் கொடுக்க வந்த பெண்ணை வன்கொடுமை செய்த கொடூரனுக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 50 வயது பெண்மணி தனது குடும்ப செலவுக்காக பள்ளிபாளையம் அக்ரஹரம் பகுதியை சேர்ந்த நிதி நிறுவன அதிபரிடம் கடந்த 2009-ம் ஆண்டு கடன் வாங்கியுள்ளார். இதற்கான வட்டித் தொகையை ஒவ்வொரு மாதமும் செலுத்தி வந்துள்ளார். அதன் படி கடந்த 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் திகதி வட்டித் தொகையை அந்த பெண், தன்னுடைய 19 வயது மகளிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.

நிதி நிறுவனத்திற்கு சென்ற அப்பெண்ணை நிதிநிறுவன அதிபர் சிவகுமாரும், அவரது நண்பர் ரவி ஆகியோர் வன்கொடுமை செய்து அப்பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கு நாமக்கல் சி.பி.சி.ஐ.டி பொலிசுக்கு மாற்றப்பட்டு வழக்கு நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை நடைபெற்ற போது வழக்கில் 2-ஆம் குற்றவாளியான ரவி உயிரிழந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் நிதி நிறுவன அதிபருக்கு சிவக்குமாருக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனையும், 13 ஆயிரம் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்கிட நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

சிறுவனை கடத்தி ஆபாசமாக நடந்துகொண்ட இளம்பெண்!

Quick Share

அமெரிக்காவில் சிறுவனை நைசாக கடத்தி சென்று அவனிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டார். ஜெசிகா பிராட் என்ற 26 வயது இளம்பெண் 16 வயதுக்கு குறைவான சிறுவனிடம் நைசாக பேசி தனது தந்தை மற்றும் மாற்றந்தாய் இருக்கும் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுவனிடம் ஜெசிகா தவறாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டுள்ளது.

இதே போல சில தடவை ஜெசிகா நடந்து கொண்டார் எனவும் நீதிமன்றத்தில் பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவனும் சாட்சியளித்துள்ளான். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஜெசிகா நீதிமன்றத்தில் ஆஜரானார், அவர் இரு தினங்களுக்கு முன்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஆகஸ்ட் 24ஆம் திகதி ஜெசிகா மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராவார் என தெரியவந்துள்ளது.

COVID-19 தீவிர பரவலை எட்டியுள்ளது.., கடுமையான கட்டுப்பாடுகள் வேண்டும் !!

Quick Share

உலகம் முழுவதும் கொரோனவால் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி 1.5 கோடிக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும். அமெரிக்கா பிரேசில் போன்ற நாடுகளில் பல மடங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.

கொரோனா சமூக பரவலாக மாறும் எச்சரிக்கையாக மாறுவதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக சுகாதார மையம் வரையறுத்தது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் சில நாடுகளில் தீவிர பரவலை எட்டியுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளதாவது: பாதிப்பை ஒப்பிட்டு பார்த்த போது கொரோனா பரவல் சில நாடுகளில் கடுமையாக அதிகரித்துள்ளது. உலக அளவிலான மொத்த கொரோனா பரவலில் மூன்றில் இரண்டு பங்கு, 10 நாடுகளில் சேர்ந்தவையாக உள்ளது. அந்த நாடுகள் ஊரடங்கில் தளர்வுகளை வழங்காமல் கொரோனவை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு மக்களை காக்க மேலும் போராட வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறினார்.

அமெரிக்காவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவிலான பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2வது இடத்திலும் உள்ளன. இந்தியா 3வது, ரஷ்யா 4வது இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக பிரமுகர் ஒருவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை – மயிலாடுதுறையில் பர...

Quick Share

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, திமுக பிரமுகர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் பாபு. இவர் நேற்று இரவு 10 மணிக்கு கடைவீதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் அருகே உள்ள குளக்கரையில் மறைந்திருந்த மர்ம கும்பல் பாபுவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தகவலறிந்த மயிலாடுதுறை எஸ்பி. ஸ்ரீ நாதா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளார். திமுக பிரமுகர் முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோயாளியை கற்பழித்த அரசு மருத்துவமனை டாக்டர்..

Quick Share

உத்தர பிரதேசத்தின் அலிகார் நகரில் தீன்தயாள் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த நிலையில், இந்த மருத்துவமனையில் அதற்கென தனி வார்டு அமைக்கப்பட்டது.

இதில், கொரோனா பாதித்த நபர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்று வந்த பெண் ஒருவரை டாக்டர் கற்பழித்து உள்ளார். இதுபற்றிய புகார் போலீசில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு டாக்டர் மீது 376 2(இ) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் டாக்டரை கைது செய்தனர். முதல் மந்திரி அலுவலகம் இந்த வழக்கை விசாரிக்க குழு ஒன்றை உருவாக்கி உள்ளது.




You cannot copy content of this Website