கிரைம்

மாற்றுத்திறனாளி பெண்ணை இரும்பு தடியை வைத்து விளாசிய உயர்அதிகாரி !! CCTV-ல் பதிவான அதிரவ...

Quick Share

ஆந்திராவில் சுற்றுலாத்துறை கீழ் உள்ள ஒரு ஓட்டலில் ஒப்பந்த அடிப் படையில் சேர்க்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை உயரதிகாரி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லூரில் உள்ள ஆந்திர மாநில சுற்றுலாத் துறையின் கீழ் உள்ள ஒரு ஹோட்டலின் மேல் அதிகாரியாக இருப்பவர் பாஸ்கர். அலுவலகத்தில் ஒப்பந்த அடிப் படையில் சேர்க்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று மாற்றுத்திறனாளி பெண் உயரதிகாரி பாஸ்கரிடம் ஏன் மாஸ்க் அணியவில்லை ? என கேட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவுதல் கருத்தில் கொண்டு மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டுமென அரசு வலியுறுத்தும் இந்த வழிமுறைகளை உயர் அதிகாரிக்கு கூறியுள்ளார். இதனால் எரிச்சலடைந்த உயரதிகாரி அந்தப் பெண்ணை தாறுமாறாக இரும்பு கம்பியில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளார்.

அந்த வீடியோவில், பாஸ்கர், முகமூடி அணியாமல், தனது கேபினிலிருந்து வெளியே வந்து, அந்த பெண்ணை தலைமுடியால் இழுத்து, இழுத்துச் சென்று, ஒரு பொருளைக் கொண்டு பலமுறை தாக்கியபோது, மற்ற சக ஊழியர்கள் தலையிட முயற்சிக்கிறார்கள்.

ஆத்திரம் அடங்காத அவர், பெண்ணை கீழே தள்ளி, தலைமுடியை பிடித்து அடித்தும், கட்டையால் கடுமையாக தாக்கியும் உள்ளார். ஜூன் 27ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்டிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பான நெல்லூர் போலீசார் பாஸ்கரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த செய்தி சுற்றுலா துறைஅமைச்சரை சென்றடைந்துள்ளது.

IPC 354, 355, மற்றும் 324 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு நீதித்துறை ரிமாண்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

14வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.., மறுத்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய கொடூரம் !!

Quick Share

சத்தீஸ்கரின் மாநிலம் முங்கேலி மாவட்டத்தில் பாப்லு பாஸ்கர் (30) என்பவர் 14வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். பாலியல் தொந்தரவிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள நினைத்த 14 வயது சிறுமியை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் ஜூன் 30 அன்று முங்கேலி கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் நடந்தது.
புதன்கிழமை மருத்துவமனையில் சிகிச்சையின்போது பாதிக்கப்பட்ட பெண் தீக்காயங்களுக்கு ஆளானதாக முங்கேலி துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி தேஜ்ராம் படேல் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட பாப்லு பாஸ்கர் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பாஸ்கர் சிறுமியின் வீட்டிற்குள் தனியாக இருப்பதைக் தெரிந்து கொண்டு பாலியல் வன்கொடுமைக்கு முயன்றார். அவர் எதிர்த்தபோது, ​​அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றிய எரித்துள்ளார்.
தீயில் மூழ்கிய சிறுமி, உதவிக்காக கத்தி வீட்டை விட்டு வெளியே ஓடிவந்ததும். அருகிலிருந்தவர்கள் தீயை அனைத்து மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்,

குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302 (கொலை), 506 (கிரிமினல் மிரட்டல்) மற்றும் 354 (அவரது அடக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் பெண் மீது தாக்குதல் அல்லது குற்றவியல் படை) மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்கும் விதிகள் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அறந்தாங்கி: 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது…!!!

Quick Share

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 31-ந் தேதி இரவு முதல் காணவில்லை கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏம்பல் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில், சிறுமியை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் அந்த சிறுமி ஏம்பல் கிளவி தம்மம் குளத்திற்கு தண்ணீர் செல்லும் வரத்து வாரியில் நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் போலீசாரிடம் கூறுகையில், சிறுமியை ஒரு வாலிபர் கறம்பவயல் காளிகோவில் பக்கம் அழைத்து சென்றதாக தெரிவித்தனர். அதன்பேரில், அந்த வாலிபர் மற்றும் இன்னொரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சிறுமி பாலியல் வழக்கில் சிறுமியின் வீட்டிற்கு அருகே வசித்து வரும் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டுப்பாளையத்தில் பெண் யானை துப்பாக்கியால் சுட்டுக்கொலை…!!! பிரேத பரிசோதனை முடி...

Quick Share

கோவையில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே விளைநிலத்தில் பெண் யானை மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டது.

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கண்டியூர் பீட் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலத்தில் இன்று (ஜூலை 02) காலை, சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை காது பகுதியில் காயத்துடன் ரத்தம் வழிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், யானை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் 2 பேர் கைது செய்யப்பட்டதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.

மனைவிக்கு முதல் பிரசவம்..! ஊரடங்கால் மறுக்கப்பட்ட இ பாஸ்..!! மருத்துவமனைக்கு செல்லமுடிய...

Quick Share

காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த ரோஜா என்பவரை திருமணம் கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில் மனைவி கர்ப்பமானதை அடுத்து பிரசவத்திற்காக அவரது தாய் வீடு இருக்கும் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கிடையே குழந்தை விரைவில் பிறந்துவிடும் என மருத்துவர்கள் சொன்னதை அடுத்து இந்த சந்தோஷமான விஷயத்தை கணவரிடம் தெரிவித்துள்ளார் ரோஜா. மேலும் பிரசவத்தின்போது கணவர் அருகில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்ட ரோஜா கணவரை சென்னைக்கு அழைத்துள்ளார்.

தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் விக்னேஸ்வரன் சென்னைக்கு வரமுடியவில்லை. பலமுறை இபாஸ் பெற விண்ணப்பித்தபோதும் அது கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த விக்னேஸ்வரன் விரக்தியில் இருந்துள்ளார்.

இதற்கிடையே நேற்று இரவு மனமுடைந்த விக்னேஸ்வரன் தனது வீட்டில் தூ க்கிட் டு த ற்கொ லை செய்து கொண்டார். இவரை பார்க்க நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்தபோதுதான் விக்னேஸ்வரன் தூக்கில் தொங்கியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சிவகாஞ்சி போலீசுக்கு அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விக்னேஸ்வரனின் ச டலத் தை கைப்பற்றி பி ரேத ப ரிசோ தனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் அரசாங்கம் அறிவுரையை ஏற்று சிறிது நாட்கள் வீட்டிலேயே விக்னேஸ்வரன் இருந்திருந்தால் அடுத்த மாதம் குழந்தையை பார்த்து சந்தோஷப்பட்டிருப்பார். குழந்தையும் தந்தையை பார்த்து சந்தோஷத்தில் சிரித்திருக்கும். இவர் எடுத்த அவசர முடிவால் கணவனை பெண் இழந்துள்ளார். தந்தையை குழந்தை இழந்துள்ளது

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை…!!! போலீசாரால் 2 பேர் கைது .. த...

Quick Share

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 31-ந் தேதி இரவு முதல் காணவில்லை கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏம்பல் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில், சிறுமியை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் அந்த சிறுமி ஏம்பல் கிளவி தம்மம் குளத்திற்கு தண்ணீர் செல்லும் வரத்து வாரியில் நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த ஏம்பல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரும் வந்து விசாரணை நடத்தினார்.

பின்னர், அந்த சிறுமியின் உடல், பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து மோப்ப நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி ஒரு வீட்டுக்குள் படுத்து கொண்டது. இதனால், அந்த சிறுமியை அந்த வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கொடூரமாக கொலை செய்து இங்கு உடலை வீசி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் போலீசாரிடம் கூறுகையில், சிறுமியை ஒரு வாலிபர் கறம்பவயல் காளிகோவில் பக்கம் அழைத்து சென்றதாக தெரிவித்தனர். அதன்பேரில், அந்த வாலிபர் மற்றும் இன்னொரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோவில் சென்றதற்காக வழக்குப்பதிவு செய்ததால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட ஆட்டோ ஓட...

Quick Share

ஆட்டோவில் சென்றதற்காக வழக்குப்பதிவு செய்ததால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை. நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதே நேரத்தில் குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது மிக கடுமையாக இருக்கிறது. சென்னையில் மட்டும் 58 ஆயிரத்து 327 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் தமிழகம் முழுவதும் ஜூலை மாதம் இறுதிவரை தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.ஆகையால் சென்னையில் காவல் துறையினர் மிக கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தாம்பரம் அடுத்த காந்தி ரோடு வழியே 40 வயதான ஹரி என்பவர் ஆட்டோ ஓட்டி வந்ததாகத் பிடித்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.

இதனால் வேதனையடைந்த ஹரி வழக்குப்பதிவு செய்த அதே இடத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்து தனக்கு தானே பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்து கொண்டார். இதில் காயமடைந்த அவருக்கு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.

ஆறுதலாக இருந்த 81 வயது தந்தை..! மகள் மற்றும் பேத்தி ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய...

Quick Share

சென்னை கீழ்கட்டளையில் தாய் மற்றும் மகள் ஒரே புடவையில் தூக்கு மாட்டி கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீழ்கட்டளை துரைசாமி நகர், 1-வது தெருவில் வசித்து வருபவர் பிரபாவதி. இவர் 9ஆம் வகுப்பு படிக்கும் தனது மகளுடன் வசித்துவருகிறார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தன் கணவனை இழந்த பிரபாவதி மகள் சொப்னாவுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

கணவரை இழந்த பிரபாவதிக்கும் பேத்திக்கும் ஆறுதலாகவும், மகளின் குடும்பச் செலவுக்கு செல்வராஜ் (81) பணம் கொடுத்து வந்தார். பிரபாவதியின் தந்தை கீழ்கட்டளை காமராஜர்நகர், ராஜீவ் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (81) தான் தினமும் மகளின் வீட்டிற்கு வந்து பார்த்து செல்லும் பழக்கம் உடைய செல்வராஜ்,

28-ம் தேதி காலை மகளையும் பேத்தியையும் சந்தித்துவிட்டு சென்றுள்ளார். அடுத்தநாள் 29-ம் தேதி காலை 8 மணியளவில் மகளையும் பேத்தியையும் பார்க்க சென்றுள்ளார், வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில் தட்டியும் திறக்காததால் தூங்கி கொண்டிருப்பார்கள் என நினைத்து செல்வராஜ் திரும்பிச் சென்றுவிட்டார். அதன்பின் மாலை 4 மணியளவில் இளைய மகள் கவிதாவுடன் பிரபாவதியின் வீட்டுக்கு வந்துள்ளார்.

ஆனால் அப்போதும் கதவைத் தட்டியும் திறக்கவில்லை. ஜன்னல் வழியாக வீட்டின் உள்ளே பார்த்த செல்வராஜ், தனது மகள் மற்றும் பேத்தி ஒரே சேலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்த செல்வராஜ் மடிப்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து தாய், மகள் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் தந்தை செல்வராஜ், ‘எனக்கு 4 மகள்கள் இருக்கின்றனர். அதில் 3வது மகள் பிரபாவதி. அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. என் கடைசி மகளும் மூன்றாவது மகளும் கீழ்கட்டளையில் வசிக்கின்றனர். மேலும் கடைசி மகள் கவிதா வீட்டில் நான் 3 மாதங்களாகக் குடியிருந்து வருகிறேன்.
கணவனை இழந்த என் மகள் பிரபாவதி அதிலிருந்து யாருடனும் சரியாகப் பேசமாட்டார்.

மனஉளைச்சலோடு காணப்பட்டார். கணவர் இழந்த துக்கத்திலிருந்து மீளமுடியாத பிரபாவதி, அவள் மகளுடன் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இருவரின் சடலங்களையும் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். வயதான காலத்தில் தந்தையை கஷ்டப்படுத்த விரும்பாத பிரபாவதி மகளுடன் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

பக்கத்து வீட்டுக்காரரின் 4 வயது குழந்தையை கொலை செய்து வீட்டில் மறைத்து வைத்த 39வயது பெண்

Quick Share

மும்பை அந்தேரி பகுதியில் சந்தோஷி மாதா நகரில் வசிப்பவர் Madhu Gadhe 39 வயது. இவர் பக்கத்து வீட்டுக்காரரின் 4 வயது குழந்தையை வீட்டில் அடைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

39 வயதான Madhu Gadhe அக்கம்பக்கத்தினர் உடன் அடிக்கடி சின்ன சின்ன விஷயங்களுக்கு சண்டை போட்டுள்ளார். இதற்கு பழி வாங்குவதற்காக பக்கத்து வீட்டுக்காரரின் 4 வயது குழந்தையை அழைத்து தனது லெக்கின்ஸ் மூலம் குழந்தையை கட்டி தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

மகனை காணவில்லை என பலமுறை தேடியும் கிடைக்கவில்லை. குழந்தை காணவில்லை என்று தேடிய தாயை தனது வீட்டில் அனுமதிக்காமல் சுதாகரித்துக் கொண்டுள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் அக்கம்பக்கத்தினர் வலுக்கட்டாயமாக அவர் வீட்டில் சோதனையிட்டபோது குழந்தை பாத்ரூமில் தண்ணீர் தொட்டியில் தலைகீழாக மூழ்கடிக்கப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவத்தைக் குறித்து அந்தேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கொலை செய்த பெண்ணை உடனே கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

லண்டனில் தனது 4 வயது மகளை கொன்ற பெண்!

Quick Share

லண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லண்டனில் மிச்சம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிருக்கு போராடும் நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு பொலிஸாரும், வைத்தியர்களும் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம் காரணமாகவே இவ்வாறு தனது மகளை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், கொலைக்கான உரிய காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

அவசர சிகிச்சை உலங்குவானூர்தி மூலம் தாயும், மகளும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், மகள் உயிரிழந்துள்ளதாகவும், தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 வயது நிரம்பிய சாயகி என்னும் சிறுமியே இவ்வாறு தாயினால் கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் அலட்சியத்தால் பலியான 1 வயது சிறுவன்: நாட்டையே உலுக்கிய சம்பவம்!

Quick Share

மருத்துவர்களின் அலட்சியத்தால் இறந்து போன மகனை கட்டியணைத்து கதறிய தந்தையின் புகைப்படம் வெளியாகி நாட்டையே அதிர வைத்துள்ளது. உத்தரபிரதேசத்தின் கன்னோஜ் எனும் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிரேம்சந்த், ஆஷாதேவி. வீங்கிய கழுத்து மற்றும் கடுமையான காய்ச்சலுடன் தங்களது ஒரு வயது மகனை தூக்கிக் கொண்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். ஆனால் மருத்துவர்களோ குழந்தையை தொடக்கூட மறுத்ததுடன் கான்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளர்.

அவசர உதவி தேவைப்படும் குழந்தையை 90கிமீ தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மிக ஏழ்மை நிலையில் இருந்த பிரேம்சந்த் என்னசெய்வதென்று தெரியாமல் மருத்துவமனை வாசலிலேயே குழந்தையை கையில் வைத்தபடி கதறியுள்ளார். இதனை அங்கிருந்த பலரும் தங்களது செல்போனில் படமெடுக்க, கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் கழித்து குழந்தையை ஐசியூவில் சேர்த்தனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாய் இறந்து போனது, மருத்துவர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனை மருத்துள்ள கன்னோஜ் மருத்துவமனையின் உயரதிகாரி, குழந்தையை அழைத்து வந்ததும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தோம்.

குழந்தையின் உடல்நிலை மோசமாக இருந்தது, சிகிச்சையளிக்க உரிய அதிகாரியை அவசரமாக அழைத்தோம். குழந்தையை காப்பாற்ற தேவையான சிசிச்சைகளை செய்தோம், ஆனால் 30 நிமிடங்களில் அவன் உயிர் பிரிந்தது, இதில் அலட்சியம் ஏதுமில்லை என தெரிவித்துள்ளார்.

கணவனின் சொத்துக்கு ஆசைப்பட்டு மனைவி செய்த கொடூர செயல்!

Quick Share

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த இலங்கைப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சையை சேர்ந்தவர் ஜோசன் என்கிற யூசுப். இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் திருச்சியில் வசித்து வருகின்றனர். குவைத்துக்கு வேலைக்குச் சென்ற யூசுப் அங்கு தன்னுடன் வேலை பார்த்த இலங்கை பெண்ணான அசிலாவை காதலித்து மணந்து கொண்டார். பின்னர் அசிலாவை தஞ்சாவூர் அழைத்து வந்து வீட்டில் தங்க வைத்தவர், தஞ்சை, திருச்சி என இரு மனைவிகளுடனும் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகின்றது. இந்த சூழலில் அசிலாவின் நடவடிக்கை பிடிக்காமல் கருத்து வேறு பாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் யூசுப்.

கடந்த 25ஆம் திகதி யூசுப் சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற மர்ம கும்பல் ஒன்று அவரை அரிவாளால் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொன்றது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் 5 வழக்கறிஞர்களுடன் காவல் நிலையத்தில் ஆஜரான அசிலா, கணவன் கொலைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என கூறினார். ஆனால் பெண் பொலிசார் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் யூசுப் கொலைக்காண மர்மம் விலகியது

2016 ஆம் ஆண்டில் யூசுப் வெளிநாடு சென்ற பின்னர் வீட்டில் தனியாக இருந்த அசிலா, முகநூல் மூலம் ஏராளமான இளைஞர்களோடு நட்பை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களை வீட்டுக்கு வரவழைத்து தனிமையை கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதோடில்லாமல் யூசுப் வங்கி கணக்கு வைத்திருந்த வங்கியின் மேலாளரை தனது வலையில் வீழ்த்திய அசிலா, யூசுப்பின் வங்கி லாக்கரில் இருந்த 300 சவரன் நகைகள், மற்றும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டு சொகுசாக வாழ்ந்து வந்தார்.

இந்தத் தகவல் நண்பர்கள் மூலம் யூசுப்புக்குத் தெரியவரவே, கடந்த 2018ஆம் ஆண்டு அவர் குவைத்திலிருந்து தஞ்சை திரும்பியுள்ளார். அசிலாவின் தவறான உறவு தொடர்பாக இருவருக்கும் எழுந்த தகராறில் அவரை பிரிந்துள்ளார். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் யூசுப் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அசிலாவிடம் இருந்து தனது சொத்துக்களை மீட்க யூசுப் சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதாக கூறப்படுகின்றது. இதனால் தான் அபகரித்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் கணவரை தனது நண்பர்கள் மூலம் 10 லட்சம் ரூபாய் கொடுத்து திருச்சியில் இருந்து கூலிப்படையை அழைத்து வந்து யூசுப்பை தீர்த்துக்கட்டியது தெரியவந்துள்ளது.




You cannot copy content of this Website