கிரைம்

ஒரே வீட்டில், இரு சகோதரர்கள் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை அதீத பாசத்தால் நேர்ந்த விப...

Quick Share

தம்பியின் மீது கொண்ட பாசத்தால், தம்பி தற்கொலை செய்து கொண்டு இறந்த செய்தியை கேட்ட அண்ணனும் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். ஒரே வீட்டில் இருந்த 2 மகன்களையும் இழந்த குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

சென்னை காசிமேடு பகுதியில் உள்ள காசிமாநகர் 2 வது தெருவில் வசித்து வருபவர்கள் அலெக்ஸ்சாண்டர்- ஜோஸ்வின் மேரி தம்பதியினர். அவர்களுக்கு அனிஷ் என்கிற இருதய ராஜ் (29), ஆரோக்கிய ஆகாஷ் (24) என்ற இரு மகன்கள் உள்ளனர். அனிஷ் B.TECH முடித்துவிட்டு பிரபல IT நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரின் தம்பி ஆரோக்கிய ஆகாஷ் இன்ஜீஇனியரிங் படித்து விட்டு வீட்டில் இருக்கிறார். இருவரும் வெறும் அண்ணன் தம்பி உறவாக மட்டும் அல்லாமல் நண்பர்களை போல இருந்துள்ளார்கள். அண்ணனுக்கு தம்பி மேல் அவ்வளவு பாசமாம். இந்நிலையில், ஆரோக்கிய ஆகாஷ் ஒருநாள் தன்னுடைய நண்பர் ஒருவரின் செல்போனிற்கு ஒரு வாட்ஸப் மெசேஜை அனுப்பியுள்ளார். அதில், ஹாய் பிரெண்ட்ஸ், நான் இந்த உலகத்தைவிட்டு செல்கிறேன் என் குடும்பத்தை நீதாண்டா பாத்துக்கணும்” என அனுப்பியுள்ளார்.

இதை கண்ட நண்பர் ஆரோக்கிய ஆகாஷின் செல்போனிற்கு தொடர்பு கொண்டுள்ளார் ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டிருந்தது. உடனே அவர் ஆகாஷின் சகோதரர் அனிஷ்க்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே வீட்டிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே வீட்டில் இருந்தவர்கள் ஆரோக்கிய ஆகாஷ் இருந்த அறைக்கு சென்று பார்த்தனர், அறை உள்ப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதனால் கதவை உடைத்து சென்றனர். அங்கு பார்த்தால் ஆரோக்கிய ஆகாஷ் தனது அறையில் உள்ள மின்விசிறியில் துக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ,அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இந்த தகவலை மருத்துவமனைக்கு வந்த அண்ணன் அனிஷால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மருத்துவமனையிலேயே கதறி கதறி அழுதார். பின்னர் அங்கிருந்து வேகமாக வீட்டிற்கு திரும்பினார். ஆகாஷின் சடலம் பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

மனமுடைந்து வீட்டிற்கு சென்ற அனிஷ் தம்பி தற்கொலை செய்து கொண்ட அதே அறையில், அதே மின்விசிறியில், அதே துணியை கொண்டது தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு சென்ற அனிஷை தேடிச்சென்ற குடும்பத்தினருக்கு, மற்றொமொரு அதிர்ச்சியாய் அனிஷும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு துயரத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து தகவலளித்த போலீசார், ஆரோக்கிய ஆகாஷ் இன்ஜீனியரிங் படித்தும் வேலையில்லாத காரணத்தால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி, போதைக்கு அடிமையாகி உள்ளார் ஆரோக்கிய ஆகாஷ். அதனால் தற்கொலை செய்துள்ளார். தம்பியின் இறந்த செய்தியை தாங்கமுடியாத அண்ணனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இருவரின் உடலையும் பிரேதபரிசோதனை முடித்த பின் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்தோம் என்றனர். படித்த இளைஞர்களின் இந்த விபரீத செயல் அந்த பகுதி மக்களையும், அந்த குடும்பத்தாரையும் பெரும் துயரத்திற்கு தள்ளியுள்ளது.

பீர் பாட்டிலால் 15 இடங்களில் குத்து மனைவியை சரமாரியாக தாக்கிய கணவன் !!

Quick Share

ஆவடியை சேர்ந்த குமரன் என்பவர் தனது மனைவியை பீர்பாட்டிலால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோட முயற்சி செய்த அவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

சென்னையில் முகப்பேர் பகுதியை சேர்ந்த குமரன் என்பவருக்கும், ஆவடியை சேர்ந்த காமாட்சி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 2 இரண்டு மகள், 1 மகன் என 3 குழந்தைகள் உள்ளனர்.10 ஆண்டுகளாக சென்னையில் உள்ள முகப்பேரில் கணவனோடு சந்தோஷமாக வாழந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முன்பாக காமாட்சியும், குமரனும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒருநாள் சண்டை முற்றியது, இதனால் காமாட்சி கோபித்துக்கொண்டு குழந்தைகள் மூன்று பேரையும் கணவர் வீட்டிலேயே விட்டுவிட்டு ஆவடியில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு வந்துள்ளார். 6 மாதங்களாக தனது பாட்டி வீட்டிலேயே இருந்துள்ளார். அங்கு வேறு ஒரு நபருடன் காமாட்சி கள்ளத்தொடர்பில் இருப்பதாக குமரனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் மனைவியை பார்க்க சென்ற குமரன், மனைவியை அழைத்து தனியாக பேச வேண்டும் என கூறியுள்ளார்.

இவருவரும் பேசிய போது குமரன் கள்ளத்தொடர்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே சண்டை முற்றியதால், குமரன் தான் ஏற்கனவே பையில் வைத்து கொண்டுவந்த பீர் பாட்டிலை உடைத்து மனைவியை 15 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். காமாட்சியின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்க்கும் போது குமரன் கையில் பீர் பாட்டிலுடன் ரத்த கரையில் இருந்துள்ளார். கூட்டம் கூடவே தப்பியோட முயற்சித்த குமாரனை பொதுமக்கள் பிடித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ரத்தவெள்ளத்தில் இருந்த காமாட்சியை ஆவடி அரசு மருத்துமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். தற்போது காமாட்சி கவலைக்கிடமாக தீவிர சிகிச்சையில் உள்ளார். குமாரனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் ஆவடி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

கந்துவட்டி கடனுக்காக அடிச்சே கொன்னுட்டாங்க..

Quick Share

தூத்துக்குடியில் கந்துவட்டி கும்பல் அட்டூழியம்## தூத்துக்குடி மாவட்டம் சிறுத்தொண்ட நல்லூர் சேர்ந்தவர் சாகுல் ஹமீது இவர் ஆழ்வார் திரு நகரை சேர்ந்த கண்ணன் இடம் ஒரு லட்சம் கடன் வாங்கி இருந்தார் சூழ்நிலை காரணமாக சாகுவால கடனை திருப்பித் தர முடியவில்லை.

இந்த ஒரு லட்சம் ரூபாய் கடனுக்காக கண்ணன் தலைமையில் 6 புறம்போக்குகள் ஒன்றாக சேர்ந்து சேர்ந்து சாகுல் ஹமீது அங்குள்ள மளிகைக்கடையில் பின்புறம் உள்ள இடத்தில் கட்டி வைத்து அடித்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர் பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் சாகுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் எரால் ் காவல் நிலைய ஆய்வாளர் பட்டாணி கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள உறவினர்கள் ் மனு கொடுத்துள்ளனர்.

என்ன செய்தாலும் போன உயிர் திரும்ப வருமா இ கந்துவட்டி கும்பலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இவர்களை என்ன செய்வது உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்

திருமணமான 9 மாதத்தில், தூக்கில் தொங்கிய அரசு மருத்துவர் !! குமரியில் நடந்த சோகம் !!

Quick Share

கன்னியாகுமரி மாவட்டத்தில் பளுகல் எனும் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் லாலு கிருஷ்ணா என்ற மருத்துவர் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அரசு மருத்துவரான லாலு கிருஷ்ணாவிற்கும் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆர்யா என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் பெற்றோர்கள் திருமணம் செய்துவைத்துள்ளனர். அவர் திருமணத்திற்கு பின் மருத்துவத்தில் மேல் படிப்பு படிக்கவேண்டும் என கூறவே திருமணம் முடிந்த கையோடு ஆர்யா மேற்படிப்பை தொடர அகமதாபாத் சென்று விட்டார். இதனால் லாலு கிருஷ்ணா தனது பெற்றோர்களுடன் தங்கி வேலை பார்த்துவந்துள்ளார். ஏற்கனவே அவர் அடிக்கடி மன அழுத்தத்திற்கு உள்ளானார் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் தீடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் தகவலறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி, தற்கொலைக்கான காரணம் மன அழுத்தமா இல்லை வேறு ஏதாவதா என விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். திருமணமான 9 மாதத்திலேயே இவர் எடுத்த விபரீத முடிவு அவரின் குடும்பத்தையும், மனைவியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

“நான் தான் டா அம்மன்”பாம்பை கழுத்தில் சுற்றி Youtube-ல் அருள் வாக்கு!! R...

Quick Share

நாகப்பாம்பை கழுத்தில் சுற்றி, அபிஷேகம் செய்து அருள்வாக்கு என்ற பெயரில் வித்தை காட்டிய பெண் சாமியாரை வனத்துறை அதிரடியாக கைது செய்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை சேர்ந்த கபிலா அம்மையார் என்பவர், தன்னை பத்திரகாளியம்மன் என கூறிக்கொண்டு அருள்வாக்கு சொல்லி பரபரப்பை கிளப்பிவருகிறார். சமீபத்தில் ஒரு கோவில் கும்பாபிஷேகத்தில், கையில் சூலத்துடன் 2 நாகப்பாம்புகளை வாடகைக்கு எடுத்துவந்து பாம்புகளோடு அவர்செய்த லூட்டி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அதில் அவர், அந்த பாம்புகளுக்கு மலர் தூவி பூஜைசெய்து, அபிஷேகம் என்ற பெயரில் பாம்பின் மீது பாலை ஊற்றி, அந்த பாம்புகளை கோவில் சிலைகளின் மீது ஏறவிட்டும் ,தம்முடைய கழுத்தில் சுற்றிக்கொண்டும் அம்மன் போல காட்சி தந்து அருள் வாக்கு கூறி பக்தர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். அதுமட்டுமல்லாது அதை வீடியோ எடுத்து youtube-ல் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ வனத்துறையினர் பார்வையில் சிக்கியுள்ளது.

பாம்புகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்தது, பாம்புகளை வைத்து விதைக்காட்டியது ஏன் என்பது குறித்து அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்திய போது, அதற்கு அவர், அம்மன் அருள் எனக்கு வந்துள்ளது. அம்மன் தான் என்னிடம் சொன்னார். அதனால்தான் பாம்புகளுக்கு பூஜை செய்தேன், கழுத்தில் சுற்றி கொண்டேன் என விளக்கம் கூறியுள்ளார். அதன்பின் அந்த பெண் சாமியார் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வனத்துறையினர் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“மகளுக்கு சொத்து கொடுத்த, நீ இருக்காத செத்துடு” தந்தையை கதற கதற கொன்ற அரக்க...

Quick Share

மதுராந்தகத்தில் கேவலம் ஒரு துண்டு நிலத்திற்காக, கதறி அலறிய தந்தையை பாவம் பார்க்காமல் டிராக்டர் ஏற்றி கொன்ற மகனை, போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள முருக்கம்பாக்கம் எனும் கிராமத்தில் வசித்து வரும் 75 வயதான அண்ணாமலை என்பவருக்கு 3 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகனுக்கு மனநிலை சரியில்லாததால், அவரைத்தவிர மற்ற அனைவர்க்கும் திருமணம் செய்து வைத்து வைத்தார். இவருக்கு 15 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. அது அண்ணாமலையின் தந்தையும் அவரும் சேர்ந்து சம்பாதித்தது. தனக்கு வயதாவதால் அண்ணாமலை, தனது பெயரில் உள்ள சொத்துகளை தனது மகள்களுக்கும், மகன்களுக்கும் சமமாக பிரித்து வழங்க முடிவு செய்து அதேபோல ஆளுக்கு தலா 3 ஏக்கர் பிரித்து வைத்து உயில் எழுதியுள்ளார். ஒரு மகனுக்கு மனநிலைசரியில்லாததால், தன்னுடைய இறப்புக்கு பின் சொத்துக்களை பராமரிக்க மற்றொரு மகன் ஏழுமலையை நியமிக்குமாறு, உயிலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இப்படி சமமாக பிரித்தது பிடிக்காத ஏழுமலை, “அது எப்படி மகள்களுக்கு சமமாக சொத்து எழுதி கொடுக்கலாம், நாங்க ஆம்பள பிள்ளைங்க எங்களுக்கு அதிக சொத்து வேணும்” என சண்டையிட்டுளார். ஆனால் தனது முடிவில் அண்ணாமலை உறுதியாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை தந்தையையே கொள்ள துணிந்துள்ளார். ஒரு நாள் அண்ணாமலை வயலில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது டிராக்டரை எடுத்து கொண்டு தன்னை நோக்கி வந்த ஏழுமலையை பார்த்து அண்ணாமலை திகைத்துள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை டிராக்டரில் ஏற்றி கொன்று விட்டு அங்கிருந்து தப்பித்து விட்டார். இதனை அறிந்து வந்து பார்த்த குடும்பத்தினரும், அவரின் 3 மகள்களும் கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தப்பி சென்ற, ஏழுமலையை மீது அணைக்கட்டு பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

வசதிக்கொன்னு ,அசதிக்கொன்னு..!! என்ன தப்பு .? வேலியே பயிரை மேய்ந்துள்ளது..

Quick Share

தர்மபுரி : ஈட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் ,மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் இவர் காதலித்த பெண்ணை கழட்டி விட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . 21 வயதுள்ள அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை 3 வருடமாக காதலித்து, திருமணம் செய்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி ‘அந்த ‘சம்பவங்கள் பல நிகழ்த்தி உள்ளார் .

இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பெண்ணுடன் அண்மையில் திருமணம் நடத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முதல் காதலி ‘காவலர் மேலே காவல் நிலையத்தில்’ புகார் கொடுத்துள்ளார் .இதன் பேரில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் . இந்த செய்தி அந்த பகுதியில் மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் வாட்சப் குரூப்பில் ஆபாச படம்: அதிர்ந்த பெற்றோர்கள் !! ஷேர் செய்த நபர் கைது !!

Quick Share

கன்னியாகுமரியில் டியூசன் மாணவர்களின் பெற்றோர்களுக்கான வாட்சப் குரூப்பில் ஆபாச படம் அனுப்பிய நபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர் .

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியை அடுத்த கொட்டாரம் நகரில் பள்ளி மாணவர்களுக்காக செல்வ குமார் என்பவர் டியூஷன் நடத்தி வருகிறார். இதில் படிக்கும் மாணவர்களின் அன்றாட செயல்கள், முக்கிய தகவல்கள் குறித்து அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த அவர் வாட்ஸப் குரூப் ஒன்றை ஆரம்பித்து அதில் தினமும் தகவல்களை தெரிவித்து வருகிறார். திடீரென ஒரு நாள் அந்த வாட்ஸப் குரூப்பில் மாணவன் ஒருவனின் தந்தை எண்ணில் இருந்து ஆபாசப்படம் அனுப்பப்பட்டுள்ளது. இதனை பார்த்த மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதனால் டியூஷன் ஆசிரியர் செல்வகுமாரிடம் பெற்றோர்கள் முறையிட்டனர். எனவே அவர் இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகாரளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் ஆபாச விடியோவை அனுப்பிய நபரை கைது செய்து அவரிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

“தந்தை கண் முன்னே பலியான 3 வயது சிறுவன்”, அரசு பேருந்தின் வேகத்தால் நேர்ந்த...

Quick Share

கர்நாடகாவில் அரசு பேருந்தின் அதிவேகத்தால் தந்தை கண் முன்னே பறிபோன 3 வயது குழந்தையின்
உயிர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு எனும் மாவட்டத்தில் குஷால் நகரில் வசித்துவரும் பரமேஷ் என்பவர் தனது மூன்று வயது மகனாக பிரித்விக்குடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிர்பார்க்காத விதமாக அதிவேகத்தில் வந்த கர்நாடக அரசு பேருந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பரமேஷ் மற்றும் அவரது குழந்தையின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பரமேஷின் 3 வயது மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். தந்தை கண்முன்னே மகன் இழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர விபத்தது அந்த பகுதியில் பொருத்திவைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த விபத்துதொடர்பாக, குஷால் நகர் பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆண் வேட பெண்ணுடன் காதல் கணவனை கழட்டிவிட்டு ஓட்டம் !!மக்களை சீரழித்துவரும் டிக்டாக் !!

Quick Share

கிராபிக்ஸ் மூலம் ஆண் வேடமிட்டு டிக்டாக்கில் வீடியோ போட்ட பெண்ணுடன் பழகிய திருமணமான பெண் கணவனை விட்டுவிட்டு பெண் காதலியுடன் தனது குழந்தைகளோடு ஓட்டம் பிடித்துள்ளார்.

டிக்டாக்-கால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது, பலமுறை அதன் விளைவை பற்றி சொன்னாலும் அதில் கிடைக்கும் லைக்குக்காக தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகிறார்கள் பலர். அந்த வரிசையில் இது புது கதையாக உள்ளது. ஆந்திர மாநிலம் கர்னுல் மாவட்டத்தில் ரவிக்குமார் – அர்ச்சனா தம்பதியினர் 13 ஆண்டுகளாக சந்தோசமாக இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், டிக்டாக் எனும் பூதம் இவர்கள் வாழ்க்கையில் வந்துள்ளது. அர்ச்சனா தனது சகோதரியின் தோழியான அஞ்சலி என்பவருடன் டிக்டாக்கில் அறிமுகமானார். டிக்டாக்கில் ஒரு ஆண் போல வேடமிட்டு பேசி தனது காதல் வலையில் சிக்கவைத்துள்ளார் அஞ்சலி. அறிமுகம் நட்பாக மாறி அர்ச்சனாவின் வீடுதேடி வந்துள்ளார் அஞ்சலி. பின் நெருக்கமான இவர்கள் ஒரே வீட்டில் ஒரு வாரமாக இருந்துள்ளனர்.

இதனை அவர்களது குடுபத்தினர் கண்டித்து இது எல்லைமீறி போவதால் செல்போனையும் அர்ச்சனாவிடம் இருந்து பறித்துள்ளனர். ஆனால் அஞ்சலி யாருக்கும் தெரியாமல் போன் வாங்கித்தந்து அதன்மூலம் பேசிவந்துள்ளனர். இதனை கண்டுபிடித்த கணவர் அர்ச்சனாவை திட்டியதால் அவர் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று தனது டிக்டாக் காதலியுடன் டிக்டாக் செய்துள்ளார். அங்கும் எதிர்ப்பு கிளம்பியதால், கடத்த 4 நாட்களுக்கு முன் தனது இரு குழந்தையையும் அழைத்து கொண்டு அஞ்சலியிடம் சென்று விட்டார். இவர்கள் எங்கு போனார்கள் என தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

காதலுக்காக “பேய்” யாக மாறிய பெண் பேய்யை ஓட்ட பிரம்படி, வெளுத்து வாங்கிய திர...

Quick Share

காதலுக்காக பேய் நாடகமாடிய இளம்பெண்ணை அருள் வாக்கு கூறுவதாக சொல்லி பிரம்பால் பின்னி எடுத்த திருநங்கை, அடித்தாங்க முடியாமல் காதலை கைவிட்ட பெண், வைரலாகும் பிரம்படி வீடியோ.

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியில் மதுரா எனும் திருநங்கை தன்னை காளியம்மன் அவதாரம் என கூறி அந்த பகுதியில் அருள்வாக்கு கூறி வருகிறார். இந்நிலையில் தனது காதலனை மறக்க முடியாமலும் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தை தடுப்பதற்காகவும், இளம்பெண் பேய் நாடகம் ஒன்றை போட்டுள்ளார். இதனால் அந்த பெண்ணை பெற்றோர்கள் மதுரா என்ற திருநங்கையிடம் பேய் ஓடுவதற்காக கூட்டிவந்துள்ளனர். அந்த பெண்ணின் முடியை கொத்தாக பிடித்து கொண்டு பேய் ஓட்ட தொடங்கிய மதுரா அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்து அடிக்க தொடங்கியுள்ளார். ஒருகட்டத்தில் அந்த பெண்ணிற்கு பேய் பிடிக்கவில்லை ,அவள் காதலில் விழுந்துள்ளதை கண்டறிந்த மதுரா கையில் பிரம்பை எடுத்து இளம் பெண்ணை அடிக்க தொடங்கியுள்ளார். பேய் பிடிக்கவில்லை என்பதை கேட்டும் நாடகம் ஆடுவதை கேட்டும் பிரம்பால் அடித்துள்ளார். அடியை தாங்கமுடியாத பெண் தான் நாடகமாடியதாகவும், தான் காதலிப்பதாகவும் ஒப்புக்கொண்டார். பின்னர் அந்த காதலை கைவிடுமாறு மீண்டும் பிரம்பால் அடிக்க தொடங்கினார் மதுரா .பின்னர் கற்பூரம் ஏற்றி காதலை கைவிடுமாறு சத்தியம் செய்ய சொல்லி அடித்தார். வேறுவழியில்லாமல் வேண்டாவெறுப்பாய் இடதுகையால் சத்தியம் செய்தார் அந்த பெண்.

இந்த சம்பவத்தை தனது அருள்வாக்கின் மகிமை என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் மதுரா. என்னதான் இருந்தாலும் ஒரு இளம் பெண்ணை அருள்வாக்கு என்ற பெயரில் பிரம்பால் தாக்கியது காண்போரை கொதிப்படைய செய்கிறது. இதன்பின் சனிக்கிழமை மீண்டும் அந்த பெண் மதுராவிடம் வந்து தன் காதலை கைவிட்டதாக உறுதி அளித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அருள்வாக்கு என்ற பெயரில் பிரம்பால் தன்னிடம் வருவோரை தாக்கும் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா தெரியவில்லை. இந்த வீடியோகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மசாஜ்க்கு ஆசைப்பட்டு 5 லட்சம் ரூபாயை பறிகொடுத்த தொழிலதிபர் !!

Quick Share

புதுச்சேரியில் தொழிலதிபரை மிரட்டி 5 லட்சத்தை அபேஸ் செய்த வழக்கில் 3பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்செரி திருமுடி பகுதியை சேர்ந்த தொழிலதிபரான மஞ்சுநாத் என்பவரை, மசாஜ் செய்வதாக கூறி பியூட்டி பார்லர் நடத்திவரும் ராஜேஷ் என்பவர் கடந்த 10ம் தேதி அழைத்துள்ளார். இதனை நம்பி மஞ்சுநாத் அவர் சொன்ன இடமான முதலியார் பேட்டையில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மசாஜ் செய்ய வரச்சொன்ன ராஜேஷ் தனது கூட்டாளியான கார்த்திகேயன் என்பவருடன் சேர்ந்து அவரை தாக்கி மிரட்டியுள்ளனர். மஞ்சுநாத் வைத்திருந்த செல்போன், கைக்கடிகாரம் போன்றவற்றை பறித்துக்கொண்டது மட்டுமல்லாமல், அவரது வங்கிக்கணக்கில் இருந்து அவரது செல்போன் மூலமாக 2 வாங்கி கணக்கிற்கு தலா 2.5 லட்சம் ரூபாயை பணப்பரிமாற்றம் செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பியோடியள்ளனர். இதுகுறித்து தொழிலதிபர் மஞ்சுநாத் போலீசாரிடம் புகார் அளித்தார்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், சேலத்தில் தலைமறைவாக இருந்த பியூட்டி பார்லர் உரிமையாளரான ராஜேஷ் மற்றும் வழக்கில் தொடர்புடைய அவரது மனைவி பிரேமா மற்றும் கூட்டாளி கார்த்திகேயன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 4 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.




You cannot copy content of this Website