மாவட்ட செய்திகள்

உல்லாசம் அனுபவித்ததை வீடியோ எடுத்து இளைஞர் செய்த சம்பவம்.,

Quick Share

நெல்லை மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணத்துக்கு முந்தைய காதலனால் தனது மணவாழ்க்கை கேள்விக் குறியாகி விட்டதாக சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி பிரதீப்பிடம் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார். முக்கூடல் அடுத்த கண்டப்பட்டியைச் சேர்ந்த கொத்தனார் சாலமோன் என்பவருடன் அந்த பெண் திருமணத்துக்கு முன்னதாக பழகி உள்ளார்.

அந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி நெருங்கி பழகிய சாலமோன், இருவரும் நெருக்கமாக இருக்கும் போது செல்போனில் படம் எடுத்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வீட்டில் வேறொருவரை திருமணம் செய்த போது மவுனமாக இருந்த சாலமோன், திருமணத்திற்கு பின்னர் அந்த பெண்ணிடம் காதலித்த போது தாங்கள் நெருக்கமாக எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க தொடங்கியுள்ளான்.

பணமில்லை என்ற நிலை வந்ததும் அந்த பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலி, கம்மல் என சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளைப் பெற்றுள்ளான். இந்த விவரத்தை அறிந்த அவனது கூட்டாளிகளான ஜான்சன், மனோ சேட் ஆகியோரும் வீடியோவைக் காட்டி அந்த பெண்ணை மிரட்டத் தொடங்கியுள்ளனர்.

மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அவளது கணவன் வீட்டில் இருந்து வெளியே அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகின்றது. இருந்தும் விடாமல் சாலமன் கும்பல் அந்த பெண்ணிடம் மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால் விரக்தி அடைந்த அந்த பெண் முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இழுத்தடித்துள்ளனர். இதையடுத்து சேரன்மாதேவி ஏ.எஸ்.பி யிடம் புகார் அளித்துள்ளார். அவரது உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்த முக்கூடல் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சாலமோனின் நாடகக் காதலில் விழுந்த அந்த பெண் , நெருக்கமாக இருந்த வீடியோக்களும், வீடியோகாலில் பேசிய வீடியோப் பதிவுகளும் அவனிடம் இருப்பது தெரியவந்தது.
கொத்தனாராக இருந்து பிளாக்மெயிலராக மாறிய சாலமோனை போலீசார் தேடிவரும் நிலையில் அவனது கூட்டாளி

ஜான்சன் என்பவன் ஏற்கனவே ஒரு பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் கைதாகி ஜெயிலில் இருப்பது தெரியவந்தது. மற்றொரு கூட்டாளியான மனோசேட்டை போலீசார் தேடிவருகின்றனர்.

ஆற்றங்கரையில் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் அழுகிய சடலம்!

Quick Share

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் ஒருவர் புதைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி, வட்டாட்சியர், விஏஓ ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அதிகாரிகள் முன்னிலையில் அந்த உடல் தோண்டி எடுக்கப்பட்டது. ஆடை இல்லாமல் அழுகிய நிலையில் இருந்த அந்த பெண்ணுக்கு 25 வயது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இளம்பெண் சடலத்தை மருத்துவர்கள் அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் , இளம்பெண் யார், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாரா ? கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மளிகை கடையில் ஒருமாத மாதமாக பல பொருட்களை திருடிய நபர் !! சிக்கிய வீடியோ

Quick Share

மதுரை கோமதி புரத்தில் உள்ள ஒரு மளிகை கடைக்கு வந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பொருட்கள் வாங்குவது போல மொபைல் போனில் பேசிக்கொண்டே பட்டப்பகலில் 2 கிலோ வெங்காயத்தை திருடி உள்ளார்.

அடுத்தது நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளில் போட்டுக் கொண்டு சென்றுள்ளார். கடையில் கூட்டம் இருந்ததால் கடை உரிமையாளர் கவனிக்கமுடியவில்லை.

கடை உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது மஞ்சள் சட்டை அணிந்த நபர் வெங்காயம் முதல் நொறுக்குத்தீனி வரை தொடும் காட்சிகள் பதிவாகி இருந்தன வெங்காயத்தை எளிதாக கிடைப்பதால் இதையே கிடைக்கவேண்டும் வந்துள்ளார்.

அந்த நபர் அவரை பிடித்து விசாரணை செய்ததில் 56 வயது அப்துல் ரகுமான் என்பது தெரியவந்தது நிறைய கடைகளில் கடந்த ஒரு மாத காலமாக காலை உணவு முதல் மதியம் சாப்பாட்டு நேரம் வரை இதை செய்துள்ளார். இவர் திருடும் காட்சிகளை CCTV-யில் பதிவாகி இருந்தது அவரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

தனது 72 வயதில் கொரோனா தொற்றால் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

Quick Share

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மூச்சு திணறல் காரணமாக கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி முண்டியபாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக 90 விழுக்காடு நுரையீரல் பாதிக்கப்பட்டதால், உடல்நிலை தொடர்ந்து கவலைகிடமாக இருப்பதாகவும், நிமோனியா பாதிப்பில் உள்ள அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11:15 மணி அளவில் துரைகண்ணு உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.இன்று காலை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனை வர உள்ளதாகவும், அவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் இறுதி சடங்கு நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் அமைச்சரின் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு தமிழ்நாட்டுக்கும், குறிப்பாக அதிமுகவுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் மறைவு குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அமைச்சர் துரைக்கண்ணு பண்பாளர் என்றும் எளிமையானவர் என்றும் புகழாரம் சூட்டினார்.அமைச்சர் துரைக்கண்ணு 1948ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் பிறந்தவர். இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர். 2006, 2011, 2016ஆம் ஆண்டு என தொடர்ந்து பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வெற்றிபெற்றவர். அ.தி.மு.க.வில் மாணவரணி, இளைஞரணி உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். பாபநாசம் ஒன்றியத்தின் அ.இ.அ.தி.மு.க செயலராகவும் துரைக்கண்ணு இருந்துள்ளார்

அவர் இல்லாம என்னால வாழ முடியாது” – 2 குழந்தைகளுடன் விஷம் குடித்த இளம் பெண்…

Quick Share

வேலூர் தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோவில் தெருவில் நரேஷ்குமார்(32) என்பவர் அவரது மனைவி கோமதி(27), மகன் நித்தில்குமார் (5), மகள் ரியாஸ்ரீ (3) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் நரேஷ்குமார் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார். நரேஷ்குமாரின் திடீர் மரணத்தால் அவரது இழப்பை தாங்க முடியாமல் குழந்தைகளுடன் தற்கொலை செய்துக் கொள்ள கோமதி முடிவு செய்துள்ளார்.

நேற்று இரவு கடிதம் எழுதி வைத்து விட்டு, வீட்டிலிருந்த கொசு மருந்தை குழந்தைகளுக்கு கொடுத்து கோமதியும் குடித்திருக்கிறார். இதனையறிந்த அவரது குடும்பத்தினர் மயங்கிக் கிடந்த மூவரையும் மீட்டு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 3 வயது மகள் ரியாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். கோமதிக்கும் அவரது மகன் நித்தில்குமாருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவறிந்து வந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார். கோமதி எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், “அப்பா, அம்மா, அத்தை, மாமா எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க. என்னால அவர் இல்லாம வாழ முடியல, சின்ன சின்ன விஷயமும் அவர மட்டும் தான் ஞாபகப்படுத்துது. அவர் இல்லாத வாழ்க்கைய என்னால சத்தியமா வாழ முடியாது. அவர்தான் எங்க உலகமே. அவர் யாருக்கும் கஷ்டம் கொடுக்காம வாழனும்னு சொல்லுவாரு. அதனால நானும் என் ரெண்டு புள்ளைங்களும் யாருக்கும் கஷ்டம் கொடுக்காம சந்தோஷமா 4 பேரும் மேலோகத்தில் வாழ போறோம்” என்று கோமதி உருக்கத்துடன் எழுதியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிக வயதுள்ள நபரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய பெற்றோர்…மனமுடைந்து இளம்பெண்...

Quick Share

வேலூரில் 33 வயது நபரை திருமணம் செய்து கொள்ளும் படி பெற்றோர் வற்புறுத்தியதால், இளம்பெண் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த புதூர் மேடு பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.அதில், மூத்த மகளின் பெயர் கல்பனா. இவர் வேலூரில் இருக்கும் டிகேஎம் பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருக்கு கடந்த ஒரு ஆண்டுகளாகவே திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். அதன் படி கடந்த வாரம் ஒரு மாப்பிள்ளை வந்து இவரை பார்த்து சென்றுள்ளார்.அவருக்கு 33 வயது .பேங்க் ஒன்றில் வேலை பார்ப்பதாகவும், பெண்ணை பிடித்துவிட்டதாகவும், திருமணத்திற்கு சம்மதம் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால் கல்பனாவோ மாப்பிள்ளைக்கு வயது அதிகமாக உள்ளது .இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று கூறியுள்ளார். இருப்பினும் கல்பனாவின் பெற்றோர் இவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதனால் கல்பனா மிகுந்த வேதனையில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்றிரவு வழக்கம் போல் கல்பனா தன்னுடைய அறைக்கு தூங்க சென்றுள்ளார்.

அதன் பின் சில மணி நேரங்களில் அவரின் அறையில் இருந்த பயங்கர அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரின் அறைக்குள் சென்று பார்த்த போது, போர்வையால் உடலை மூடிக் கொண்டு தன் கழுத்தை பிளேடால் கல்பனா வெட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து கதறி கூச்சலிட்டனர்.

இந்த சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து, கல்பனாவை அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இரத்தம் ஏற்கனவே அதிகம் வெளியேறியதால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிக வயதுள்ள நபரை திருமணம் செய்து கொள்ள பெற்றோர் வற்புறுத்தியதால் பரிதாபமாக இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலிரவின்போது கணவன் கேட்ட கேள்வி: மனமுடைந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

Quick Share

திருமணமான முதல் நாள் இரவிலேயே மனைவி பற்றி கணவன் தவறாக பேசி துன்புறுத்தியதால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தின் கோவிந்தரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சந்திரலேகா. பட்டதாரியான இவருக்கும் முனைவர் பட்டம் பெற்ற பாலாஜி என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 23 ஆம் திகதி திருமணம் நடந்தது.

திருமணமான முதலிரவில் மனைவியிடம், நீ கற்புடன் தான் இருக்கிறாயா? இவ்வளவு அழகாக இருக்கும் நீ இதற்கு முன்னர் யாரையும் காதலிக்கவில்லையா? யாருடனும் உறவு வைத்துக்கொண்டதில்லையா பாலாஜி கேட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத சந்திரலேகா அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் சந்திரலேகாவின் ஆண் நண்பர் ஒருவர் சந்திரலேகா வீட்டிற்கு சென்று அவருக்கும் அவரின் கணவர் பாலாஜிக்கும் திருமண வாழ்த்துகளை கூறி சந்திரலேகாவின் நற்குணங்கள் குறித்து சநதிரலேகாவின் கணவர் பாலாஜியிடம் எடுத்து கூறியுள்ளார்.

சந்திரலேகாவைப்பற்றி உயர்வாக பேசிவிட்டு சென்றபிறகு கணவன்-மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதோடு சந்திரலேகா மீது பாலாஜிக்கு சந்தேகம் அதிகமானது.

இதனால் மனமுடைந்த சந்திரலேகா சில தினங்களுக்கு முன்னர் தனது தாய் வீட்டிற்கு சென்று தன் மனதில் உள்ளதையெல்லாம் கடிதமாக எழுதி வைத்துவிட்டு உடலில் மண்ணெண்ணய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் சந்திரலேகாவின் கணவர் பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுமுறைக்கு வந்த இராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை..நிறைமாத கர்ப்பிணியான மனைவியின் உடலும...

Quick Share

விடுமுறைக்கு வந்த இராணுவ வீரர் தூக்கில் பிணமாகவும் நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவியின் உடல் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழ்ஆழத்தூர் பகுதியை சேர்ந்த ராணவ வீர‌ர் புருசோத்தமன் ஜம்மு-காஷ்மிரில் பணிபுரிந்து வந்தார். இவரது தந்தை ஆறுமுகம் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை பார்க்க வந்த புருஷாத்தமன் மருத்துவமனை அருகிலே தன் மனைவியுடன் அறையெடுத்து தங்கினார்.

இந்த நிலையில், காலை நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியே வராத‌தால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி புருஷோத்தமனும், கட்டிலில் மனைவி அமுலும் சடமாக கிடந்தனர். இதில் அமுல் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த‌து குறிப்பிடத்தக்கது.

சம்பவம் அறிந்து வந்த போலீசார் அவர்கள் உடலை மீட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தந்தையை பார்க்கவந்த இராணுவ வீரர் தூக்கில் பிணமாகவும் நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவியின் உடல் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நண்பனின் மனைவியுடன் முறையற்ற உறவு! அதுமட்டுமா? வாலிபர் கொலை வழக்கு 6 பேர் திடுக்கிடும் ...

Quick Share

தமிழகத்தில் வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக நண்பனின் மனைவியுடன் நெருக்கமாக இருந்ததால், கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட 6 பேர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள சேர்மாநல்லூர் நேதாஜி காலனியில் வசிப்பவர் ராஜா(28). நேற்று முன்தினம் மாலை, தனது நண்பர் சதீசுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த சிலர், மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்து அவர்களை வெட்ட முயற்சித்துள்ளனர்.

இதனால் ராஜாவும், சதிஷும் அங்கிருந்த ஓட, சித்தமல்லை பகுதியில் இருக்கும் வயலில் வைத்து ராஜாவை அந்த கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றது. இதை தடுக்க வந்த சதிஷுற்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், கம்பந்தங்குடி மேட்டுத்தெருவை சேர்ந்த முருகேசன்(42), அம்மாப்பேட்டை மேட்டுத்தெருவை சேர்ந்த ஆனந்தபாபு(29), கம்பந்தங்குடி ரோட்டுத்தெருவை சேர்ந்த நந்தகுமார்(20), கம்பந்தங்குடி நடுத்தெருவை சேர்ந்த சுதாகர்(22), அன்னப்பன்பேட்டை விண்ணுக்குடி பகுதியை சேர்ந்த கோபி(27), வலங்கைமான் தாலுகா பாடகச்சேரி சூரக்குடி தெருவை சேர்ந்த அருண்பாண்டி என்ற பிரகாஷ்(30) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

அப்போது அவர்களிடம் ராஜாவை கொலை செய்தது ஏன் என்று பொலிசார் விசாரித்த போது, ராஜாவுக்கும், அம்மாப்பேட்டை அருகே உள்ள சம்மந்தங்குடி கிராமத்தில் உள்ள திருமணம் ஆன பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை தெரிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் பலமுறை ராஜாவை எச்சரித்துள்ளனர். ஆனால் அதைக் கேட்காமல் ராஜா தொடர்ந்து அந்த பெண்ணிடம் தொடர்பில் இருந்துள்ளார்.

அதுமட்டுமின்றி, மகிமாலை என்ற இடத்தில் கைதான 6 பேரும், மணலை திருடி அதிகவிலைக்கு விற்று வந்துள்ளனர். இதற்கும் ராஜா இடையூறாக இருந்துள்ளார்.

நண்பனின் மனைவியுடன் முறையற்ற உறவு, மணம் திருட்டுக்கு இடையூறு போன்ற காரணங்களால் ராஜாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.

அதன் படி, சம்பவ தினத்தன்று, நண்பர் சதீஷ் உடன் பைக்கில் சென்று மது அருந்திவிட்டு, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தான் ராஜாவை வெட்டி கொலை செய்துவிட்டதாகவும், தடுக்க வந்த சதீஷையும் வெட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

120 கி.மீ சைக்கிளில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற கணவன் – பின்னர் நடந்த சம்பவம்!

Quick Share

கணவருடன் 120 கி.மீற்றர் சைக்கிளில் சென்று சிகிச்சை பெற்ற பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த மகாராஜபுரம் மணல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்(60). கூலித் தொழிலாளியான இவர் மஞ்சுளா(44) என்பவரை இரண்டாம் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிக்கு விஷ்ணு என்ற 12 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், மஞ்சுளாவுக்கு ஒன்பது மாதங்களுக்கு முன், இடது தாடை அருகே, கன்னத்தில் புற்றுநோய் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த மார்ச் மாதம் 25-ஆம் திகதி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால், மஞ்சுளா வலியால் துடித்து வந்துள்ளார். மனைவியின் வேதனையை தாங்க முடியாமல், அறிவழகன் அதே மாதம் 29-ஆம் திகதி தன்னுடைய பழைய சைக்கிளில்,மனைவியை அமர வைத்து 120 கி.மீற்றர் தூரமுள்ள புதுச்சேரிக்கு அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தார்.

சிகிச்சை முடிந்து, ஆம்புலன்சில் ஊர் திரும்பிய, அறிவழகனின் செயலை பலரும் பாராட்டினர். மேலும், அவருக்கு பலரும் பணம், பொருள் உதவி செய்தனர். இந்நிலையில், வீட்டிலிருந்து மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்த மஞ்சுளா, நேற்று காலை திடீரென உயிரிழந்தார்.

ஊரடங்கால், வேலை இல்லாமல் போன நிலையிலும், போக்குவரத்து தடை செய்யப்பட்ட போதும், வலியால் துடித்த மனைவியை சைக்கிளிலேயே அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும், காப்பாற்ற முடியாமல் பறி கொடுத்து விட்டேன் என்று அறிவழகன் கதறி அழுதுள்ளார்.

எங்க குடும்பத்தோட எதிர்காலமே அவன் தான்’ – ஆடு மேய்க்க சென்ற இளைஞனுக்கு நேர்...

Quick Share

தஞ்சாவூர் மாவட்டம் பொட்டுவாச்சாவடி கிராமத்தில் வசிப்பவர் 22 வயதான வீரமணி. தனியார் கல்லூரியில் பி.இ இறுதியாண்டு படிக்கும் இவர் ஒரு நாள் தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆடு மேய்க்கச் சென்றுள்ளார். அப்போது ஆட்டுமந்தையில் இருந்த சில ஆடுகள் தடம் மாறி கால்வாய் அருகே சென்றுள்ளது. அப்போது ஒரு ஆடு தவறி கல்லணைக் கால்வாய் ஆற்றுக்குள் விழுந்துள்ளது.

நீச்சல் தெரியாத நிலையிலும் வீரமணி ஆட்டை மீட்க ஆற்றுக்குள் குதித்து ஆட்டைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ஆற்றில் ஏற்பட்ட சுழலில் சிக்கிய வீரமணியும் ஆடும் ஒரு சேர நீருக்குள் மூழ்கினர். இதுகுறித்து கூறிய வீரமணியின் அக்கா, ‘எங்க குடும்பத்தோட எதிர்காலமே அவன் தான். எங்கள இப்படி தவிக்கவிட்டு போய்ட்டான், எங்க குடும்பத்தோட நம்பிக்கையே அவன்தான். அவன் படிச்சி நல்ல நிலைமைக்கு குடும்பத்தை கொண்டு வரணும்னு சொல்லிட்டே இருப்பான்’ என கண்ணீர் மல்கி கூறியுள்ளார்.

மேலும் வீரமணியின் தந்தை மாரியப்பன் கூறும்போது, ‘எனக்கு மூணு பொண்ணு, பேர் சொல்ல ஒரு பையன் இருந்தான், ஆனா இப்ப அவனும் இல்ல. என் மனைவி என்னவிட்டு பிரியும் போதே எனக்கு பாதி உசுரு போயிருச்சு. இப்ப இவனும் போய்ட்டான். என் பையன் வீரமணி சின்ன வயசிலிருந்தே நல்லா படிப்பான். நான் கஷ்டப்படுறத பாத்துட்டு, `அப்பா நான் படிச்சு முடிக்கிற வரைதான் உனக்கு கஷ்டம்.

அதன் பிறகு நீ ராஜா மாதிரி இருப்பன்னு’ என அடிக்கடி சொல்லிட்டு இருப்பான். எங்களுக்கு சொந்தமான 200 குழி விவசாய நிலத்தை அடமானம் வைத்து படிக்க வைத்தேன். ஆனா இப்ப எங்க வாழ்க்கையே கேள்விக்குறியா ஆகிருச்சு’ என கனத்த மனதோடு கூறியுள்ளார். வீரமணி இறந்த சம்பவம் அவரின் குடும்பத்தை மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மனைவியின் தங்கை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கா கணவர்…ஆப்பு வைத்த காதலன்!

Quick Share

மனைவியின் தங்கை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கா கணவரை கத்தியால் குத்திய காதலன் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி வீ. டி. பாளையம் கிராமத்தை சேர்ந்த குமாரசாமியின் மகள் சாமுண்டீஸ்வரி என்பவருக்கும் திருப்பதியைச் சேர்ந்த துரைபாபுவிற்கும் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தைகள் இல்லை.

கொரோனா ஊரடங்கால் துரைபாபு தனது மனைவியோடு வீ.டி. பாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் மூன்று மாதங்களாக தங்கியுள்ளார். துரைபாபுவிற்கு மனைவியின் தங்கை பார்வதியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மனைவி சாமுண்டீஸ்வரியின் தங்கை பார்வதி (வயது 19) அருகே உள்ள பரதராமி கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்பவருடன் காதல் வயப்பட்டு இருவரும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர் காதலித்து வந்த பூவரசன் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் வீட்டில் உள்ள பெரியோர்களும்,மாமாவும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இது சம்பந்தமாக துரைபாபு பூவரசனை பலமுறை எச்சரித்துள்ளார். இந்நிலையில் சாமுண்டீஸ்வரியின் கணவர் துரைபாபு, பார்வதியிடம் உங்கள் இருவரையும் ஒன்றாக சேர விட மாட்டேன் உங்களைக் கொலை செய்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.

பார்வதி பயந்து தான் காதலித்து வந்த பூவரசனியிடம் இதனை தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பூவரசன் நண்பர்களுடன் சென்று துரைபாபுவை வீ.டி. பாளையத்தில் இருந்து பரதராமி வரும் வழியில் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பூவரசன் வைத்திருந்த கத்தியால் துரைபாபுவை வயிற்றை நோக்கி சரமாரியாக குத்தியுள்ளார்.

மயங்கி விழுந்த துரைபாபுவை ஆபத்தான நிலையில் உறவினர்கள் சொந்த ஊரான ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது சம்பந்தமாக பரதராமி போலீசார் துரைபாபு கொடுத்த புகாரின் அடிப்படையில் பூவரசன் மற்றும் அலெக்ஸ் இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சூர்யா என்பவரை தேடி வருகின்றனர்.




You cannot copy content of this Website