மாவட்ட செய்திகள்

நடிகை ஜோதிகா தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ரூ25 லட்சம் நிதியுதவி!

Quick Share

தமிழ் சினிமாவின் நட்சத்திர குடும்பங்களில் ஒன்றான சிவகுமார் குடும்பத்தில் சூர்யா, ஜோதிகா , கார்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் உள்ளனர். இந்த குடும்பம் படத்தில் நடிப்பது மட்டுமின்றி சமூக அக்கறை கொண்டு சமூகத்திற்கு தேவையான பல உதவிகளை முன் வந்து செய்பவர்கள்.

அதன் ஒரு பகுதியாக பார்க்கப்படுவது தான் “அகரம் அறக்கட்டளை “. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ஜோதிகாவிற்கு JFW சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அப்போது பேசிய ஜோதிகா தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கெல்லாம் இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா? கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள் அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள் என்று கூறினார். இது பெரும் சர்ச்சையாகி ஆளாளுக்கு ஜோதிகாவிற்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்ப்போது நடிகை ஜோதிகா தான் பார்வையிட்ட தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு ரூ.25 லட்ச ரூபாய் நிதி உதவியை அகரம் அறக்கட்டளை முலம் வழங்கியுள்ளார். இது குறித்து
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த்ராவ், தாய்மார்கள், குழந்தைகள் நலனுக்காக 25 லட்ச ரூபாய் வழங்கிய ஜோதிகாவின் பெருமனதுக்கு நன்றி என்றார்.

மளிகை கடை உரிமையாளரை கத்தியால் குத்தி ரூ1 லட்சம் கொள்ளை – காவல் நிலையம் எதிரில் ப...

Quick Share

காவல் நிலையம் எதிரில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் மளிகை கடை உரிமையாளரை கத்தியால் குத்திவிட்டு 1 லட்சம் ரூபாய் மற்றும் மளிகை சாமான்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அடுத்த கந்திலி காவல் நிலையம் எதிரில் அஃதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (70) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். வீடும் கடையும் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சீனிவாசனுக்கு கிருஷ்ணகுமார் மற்றும் ஸ்ரீதர் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு 5 நபர்கள் கொண்ட மர்ம கும்பல் ஒன்று சீனிவாசன் வீட்டிற்க்கு சென்று,மளிகை பொருட்கள் வேண்டும் என கூறி கடைக்குள் நுழைந்து, கடையில் உள்ள சீனிவாசன், இவரது மகன் கிருஷ்ணகுமார் மற்றும் ஸ்ரீதர் ஆகியோரை கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி கல்லாப் பெட்டியில் இருந்த ஒரு லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பிக்கும் பொழுது ஸ்ரீதர் திருடன் திருடன் என கூச்சல் போடவே அந்த மர்ம கும்பல் ஸ்ரீதரின் கையை வெட்டியுள்ளனர்.

அதன்பின் தப்பிச் செல்லும்போது, அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் சசிதரன் (23) மர்ம கும்பலை பிடிக்க முயன்ற போது மர்ம கும்பலை சேர்ந்த ஒருவர் சசிதரனின் மார்பு பகுதியில் பயங்கரமாக குத்திவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்த சசிதரனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

படுகாயங்களுடன் இருந்த கடையின் உரிமையாளர் ஸ்ரீதரை, பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் குறித்து கந்திலி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. காவல் நிலையம் எதிரே உள்ள மளிகை கடையில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒரு லட்ச ரூபாய் மற்றும் மளிகை பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் கந்திலி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூரில் இரண்டு பொண்டாட்டி இல்லாத வீடே இல்லை..! வனிதாவுக்கு ஆப்பு வச்ச பாஜக கட்சியினர்!

Quick Share

நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் அணைத்து ஊரடங்களிலும் அதிகம் பேசப்படும் ஒரு ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. உலகில் ஆயிரம் விஷயம் நடந்து வருகிறது, கொரோனாவால் 100 க்கணக்கான உயிர்கள் போகிறது, அதையெல்லாம் பற்றி பேசாதவர்கள் இப்போது வனிதாவின் பிரச்னையை ஆன்லைன் மூலம் கூடி விவாதித்து வருகிறார்கள்.

மேலும் வனிதாவும், முறையாக விவாகரத்து வாங்காத ஒருவரை திருமணம் செய்தது தவறு என்று கூட உணராமல் பல்வேறு காரணம் கூறி வருகிறார்.

குறிப்பாக இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தஞ்சாவூர் மக்களை விமர்சிக்கும் விதமாக, சர்ச்சையாக பேசினார்.

தன்னுடைய சொந்த ஊர் தஞ்சாவூர் தான் என்றும், அங்கு இரண்டு மனைவிகள் இல்லாத வீடே கிடையாது. தன்னுடைய தந்தைக்கு கூட இரண்டு மனைவிகள் தான் என கூறினார்.

அதே போல், இதனை அங்கு இருப்பவர்களிடம் கூறினால் இதெல்லாம் ஒரு விஷயமா என கேட்பார்கள். இதில் என்ன தவறு உள்ளது என தன்னுடைய தவறை மறைத்து, தன்னை நியாயப்படுத்தினார்.

இவரின் இந்த கருத்துக்கு தான், பிக்பாஸ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி கூட தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம், வனிதாவுக்கே எதிராக திரும்பியுள்ளது.

வனிதா தஞ்சாவூர் மக்களை பற்றி அவதூறாக பேசியுள்ளதாக கூறி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பிஜேபி கட்சியை சேர்ந்த சிலர் வனிதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.

அதே போல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களை, அவமதிக்கும் நோக்கத்தில் பேசியுள்ள வனிதா மன்னிப்பு கூறவேண்டும் என்றும், இந்த கருத்தை அவர் திரும்பபெறவில்லை என்றால் அவரை எதிர்த்து, மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்..

Quick Share

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,86,492 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் – 710 ( இன்று 26)

செங்கல்பட்டு – 10,495 ( இன்று 223)

சென்னை – 89,561 ( இன்று 1,171)

கோவை – 2,539 ( இன்று 178)

கடலூர் – 1,991 ( இன்று 71)

தர்மபுரி – 486 ( இன்று 7)

திண்டுக்கல் – 1,826 ( இன்று 99)

ஈரோடு – 518 ( இன்று 6)

கள்ளக்குறிச்சி – 2,517 ( இன்று 86)

காஞ்சிபுரம் – 5,697 ( இன்று 325)

கன்னியாகுமரி – 2,721 ( இன்று 152)

கரூர் – 296 ( இன்று 4)

கிருஷ்ணகிரி – 520 ( இன்று 69)

மதுரை – 8,705 ( இன்று 197)

நாகப்பட்டினம் – 480 ( இன்று 14)

நாமக்கல் – 395 ( இன்று 41)

நீலகிரி – 528 ( இன்று 12)

பெரம்பலூர் – 248 ( இன்று 15)

புதுக்கோட்டை – 1,186 ( இன்று 59)

ராமநாதபுரம் – 2,692 ( இன்று 88)

ராணிப்பேட்டை – 2,784 ( இன்று 414)

சேலம் – 2,560 ( இன்று 99)

சிவகங்கை – 1,760 ( இன்று 70)

தென்காசி – 1,344 ( இன்று 85)

தஞ்சாவூர் – 1,422 ( இன்று 106)

தேனி – 2,899 ( இன்று 165)

திருப்பத்தூர் – 659 ( இன்று 60)

திருவள்ளூர் – 10,210 ( இன்று 430)

திருவண்ணாமலை – 4,444 ( இன்று 210)

திருவாரூர் – 1,059 ( இன்று 45)

தூத்துக்குடி – 4,241 ( இன்று 327)

திருநெல்வேலி – 2,972 ( இன்று 120)

திருப்பூர் – 567 ( இன்று 29)

திருச்சி – 2,686 ( இன்று 213)

வேலூர் – 4,359 ( இன்று 137)

விழுப்புரம் – 2,501 ( இன்று 105)

விருதுநகர் – 4,287 ( இன்று 363)

திருமணமான பெண்களை குறிவைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த 23 வயது இளைஞன்!

Quick Share

தொழிலதிபர் என கூறி பல லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தவர் உதயகுமார். இவர் சில மாதங்களுக்கு முன்பு சென்னை திரும்பியுள்ளார். தற்போது கொரோனா காரணமாக வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவதால், உதயக்குமார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அப்போது அங்கு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் என்ற 23 வயது நபர் அறிமுகமாகியுள்ளார்.

விக்னேஷ், உதயகுமாரிடம் தான் ஒரு தொழிலதிபர், குடிநீர் விற்பனை மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் விற்பனை செய்வதாகவும், பல கோடி ரூபாய் வருமானம் வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, சில நாட்களில் இருவரும் வீடு திரும்பியுள்ளனர். உதயகுமார் வீட்டுக்கு அடிக்கடி வந்த விக்னேஷ், தன்னுடன் இணைந்து தொழில் செய்தால், லாபத்தில் பங்கு தருவதாக உதயகுமாரிடம் கூறியுள்ளார். அதை நம்பி, 12 லட்சம் ரூபாய் வரை உதயகுமார் கொடுத்துள்ளார். அதன் பின் விக்னேஷ் தலைமறைவானார். அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால், இது குறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் உதயகுமார் புகார் கொடுக்க, தலைமறைவாக இருந்த விக்னேஷை பொலிசார் தனிப்படை அமைத்து நேற்று முன் தினம் கைது செய்தனர். கைது செய்த விக்னேஷிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பொலிசார் கூறுகையில், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள விக்னேஷ், ஆங்கிலம் சரளமாக பேசுவதால் பிபிஓ நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.

இவர், டிக்டாக் செயலியில் அதிகளவில் தனது வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதை பல பெண்கள் லைக் செய்துள்ளனர். அவ்வாறு தனது வீடியோவை லைக் செய்யும் பெண்களுடன் சாட்டிங் செய்வது இவரது வழக்கம். அதன்படி, பல பெண்களிடம் தொடர்பு எண்ணை பெற்று, பழகி வந்துள்ளார். ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதாலும், தன்னை வசதியானவர் என கூறியதாலும் பலர் இவரது வலையில் விழுந்தனர். இவர்களில் வசதியான பெண்களை தெரிவு செய்து, அவர்களிடம், வெளியில் சென்றபோது சிறிய விபத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

அவரமாக பணம் தேவை. உங்களிடம் இருந்தால் கொடுங்க. வீட்டுக்கு வந்து, திருப்பி கொடுத்து விடுகிறேன், என கூறி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளான். குறிப்பாக, வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் மனைவிகள் இங்கு தனியாக இருப்பது தெரிந்தால், அவர்களுக்கு வேண்டியதை செய்வது போல் நடித்து, பலரிடம் பணம் பறித்துள்ளான். சென்னை மட்டுமின்றி வேலூர், பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பெண்கள் இவனிடம் ஏமாந்துள்ளதாக பொலிசார் கூறினர்.

மேலும், வெளி மாநிலங்களில் உள்ள பெண்களை சந்திக்க செல்லும்போது, டிப்டாப் உடை மற்றும் கவரிங் நகைகளை அதிகளவில் அணிந்து, விமானத்தில் செல்வது இவரது வழக்கம். ஒவ்வொறு பெண்ணிடமும் ஒவ்வொறு செல்போன் எண்ணில் பேசியுள்ளார். ஒரு பெண்ணை ஏமாற்றியதும், அந்த சிம்கார்டை தூக்கி வீசுவதை வழக்கமாக கொண்டுள்ளான்.

பாதிக்கப்பட்ட சில திருமணமான பெண்கள் பொலிசாரை தொடர்பு கொண்டு, தங்கள் கணவருக்கு தெரியாமல் பணத்தை கொடுத்தோம். அவருக்கு தெரிந்தால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு, வாழ்கை பாதிக்கப்படும் என்ற பயத்தில் புகார் கொடுக்க முன்வரவில்லை. இதுபோன்ற நபர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கித்தர வேண்டும் என கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட விக்னேஷிடம் இருந்த 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ள பொலிசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டால், இன்னும் வேறு என்ன? பித்தலாட்டம் எல்லாம் செய்தான் என்பது தெரியவரும்.

ஊரடங்கு நேரத்தில் நேர்ந்த அவலம்.., 15 வயது சிறுமியின் கைகால்களை கட்டிப்போட்டு நள்ளிரவில...

Quick Share

இந்தியாவில் பல கிராமத்தில் மைனர் திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அரசாங்க விதிப்படி அரசு நிர்ணயித்த வயதைவிட குறைவானவர்களுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என விதிகள் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி 15 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சனூர் என்ற பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமியை பாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நேற்று இரவு தனது அவருடைய கை கால்களை கட்டிவிட்டு வலுக்கட்டாயமாக இரவு 11 மணி அளவில் அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த கொடூரம் முடிந்து காலை விடிந்த பிறகு யாருக்கும் தெரியாமல் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டை விட்டு வெளியே வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது அந்த சிறுமி அவருடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த சம்பவம் சமூக நலத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது காவல் துறையினர் அந்த சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சேமித்த பணத்தை பூமிக்கடியில் புதைத்து வைத்த தாய்: தோண்டியபோது காத்திருந்த அதிர்ச்சி!

Quick Share

மாற்றுத்திறனாளி மகளின் திருமணத்திற்காக பணம் மற்றும் நகையை புதைத்து வைத்த தாய்க்கு நான்கு ஆண்டுகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதிரவேலூர் ஊராட்சி பட்டியமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (58). கூலித் தொழிலாளியான இவருக்கு உஷா என்ற 52 வயது மனைவியும், விமலா என்ற 17 வயதில் மகளும் உள்ளனர். தாயும் மகளும் வாய் பேச முடியாத, காதும் கேட்காத மாற்றுத்திறனாளிகள். ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலைக்கு சென்று வந்த கூலி தொகையை கடந்த 10 ஆண்டுகளாக மகளின் திருமணத்திற்காக உஷா சேர்த்து வைத்துள்ளார்.

ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளாக ரூபாய் 35,500 வரை சேர்த்து ஒரு பிளாஸ்டிக் பையில் சுருட்டி, அதோடு அரை பவுன் தங்க தோடையும் வைத்து கணவருக்கு தெரியாமல் வீட்டின் பின்புறம் குழி ஒன்றில் நான்கு ஆண்டுகளுக்கு ம்ன்பு தோண்டி புதைத்து வைத்துள்ளார். இந்தநிலையில், ராஜதுரை தனது குடிசையை பசுமை வீடுகள் திட்டத்தில் அனுமதி பெற்று வீடாகக் கட்டும் பணியை தொடங்கி உள்ளார்.

இதற்காக தொழிலாளர்கள், வீட்டின் பின்புறம் பள்ளம் தோண்டியபோது பிளாஸ்டிக் பையில், பழைய 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை இருந்ததை உஷாவிடம் காண்பித்தனர். அப்போது,அவர் அந்த பணம் மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்தது என்று சைகை மூலம் தெரிவித்தார். ஆனால் அந்த பணம் எல்லாம் 2016-ஆம் ஆண்டிலே மத்திய அரசு தடை செய்துவிட்டதாக கூற, தாய் மற்றும் மகள் இருவருமே அந்த இடத்தில் கதறி அழுதனர்.

திடீரென உயிரிழந்த நபர்..!இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 100 பேருக்கு வந்த அதிர்ச்சி தகவல்..!

Quick Share

தமிழகத்தில் உடல்நிலை சரியில்லாமல் நகை தொழிலாளி ஒருவர் இறந்து போக, அவர் கொரோனாவுக்கு பலியானதாக சுகாதாரத் துறையினர் கூறியதால் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 100 பேர் அதிர்ச்சியடைந்தனர்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 67), நகை செய்யும் தொழிலாளி.

சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல் போகவே வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், நெகடிவ் என வந்துள்ளது, இந்நிலையில் உடல்நிலை சரியாகாததால் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் முடிவெடுத்தனர்.இதன்படி சென்னை சென்று கொண்டிருக்கும் போதே ஆற்காடு பகுதியில் ராமமூர்த்தியின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இதனைதொடர்ந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட ராமமூர்த்தியின் உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள் என 100 பேர் அஞ்சலி செலுத்தினர்.இந்நிலையில் வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தொற்று உள்ள 99 நபர்களின் பட்டியல் வெளியிட்டது, அதில் இறந்த ராமமூர்த்தியின் பெயர் இடம் பெற்றிருந்தது.

இதையடுத்து குடியாத்தம் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் வருவாய்த்துறையினர் உடனடியாக ராமமூர்த்தியின் வீட்டிற்குச் சென்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்து தெரிவித்தனர்.அப்போது ராமமூர்த்தியின் குடும்பத்தினர் தங்களுக்கு வேலூர்அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று இல்லை என்று சான்று அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.அதற்கு அதிகாரிகள் பட்டியலில் பெயர் உள்ளதால் கொரோனா தொற்று இருப்பது உறுதி என்றனர், இதனால் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

கணவனின் சொத்துக்கு ஆசைப்பட்டு மனைவி செய்த கொடூர செயல்!

Quick Share

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த இலங்கைப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சையை சேர்ந்தவர் ஜோசன் என்கிற யூசுப். இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் திருச்சியில் வசித்து வருகின்றனர். குவைத்துக்கு வேலைக்குச் சென்ற யூசுப் அங்கு தன்னுடன் வேலை பார்த்த இலங்கை பெண்ணான அசிலாவை காதலித்து மணந்து கொண்டார். பின்னர் அசிலாவை தஞ்சாவூர் அழைத்து வந்து வீட்டில் தங்க வைத்தவர், தஞ்சை, திருச்சி என இரு மனைவிகளுடனும் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகின்றது. இந்த சூழலில் அசிலாவின் நடவடிக்கை பிடிக்காமல் கருத்து வேறு பாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் யூசுப்.

கடந்த 25ஆம் திகதி யூசுப் சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற மர்ம கும்பல் ஒன்று அவரை அரிவாளால் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொன்றது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் 5 வழக்கறிஞர்களுடன் காவல் நிலையத்தில் ஆஜரான அசிலா, கணவன் கொலைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என கூறினார். ஆனால் பெண் பொலிசார் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் யூசுப் கொலைக்காண மர்மம் விலகியது

2016 ஆம் ஆண்டில் யூசுப் வெளிநாடு சென்ற பின்னர் வீட்டில் தனியாக இருந்த அசிலா, முகநூல் மூலம் ஏராளமான இளைஞர்களோடு நட்பை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களை வீட்டுக்கு வரவழைத்து தனிமையை கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதோடில்லாமல் யூசுப் வங்கி கணக்கு வைத்திருந்த வங்கியின் மேலாளரை தனது வலையில் வீழ்த்திய அசிலா, யூசுப்பின் வங்கி லாக்கரில் இருந்த 300 சவரன் நகைகள், மற்றும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டு சொகுசாக வாழ்ந்து வந்தார்.

இந்தத் தகவல் நண்பர்கள் மூலம் யூசுப்புக்குத் தெரியவரவே, கடந்த 2018ஆம் ஆண்டு அவர் குவைத்திலிருந்து தஞ்சை திரும்பியுள்ளார். அசிலாவின் தவறான உறவு தொடர்பாக இருவருக்கும் எழுந்த தகராறில் அவரை பிரிந்துள்ளார். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் யூசுப் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அசிலாவிடம் இருந்து தனது சொத்துக்களை மீட்க யூசுப் சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதாக கூறப்படுகின்றது. இதனால் தான் அபகரித்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் கணவரை தனது நண்பர்கள் மூலம் 10 லட்சம் ரூபாய் கொடுத்து திருச்சியில் இருந்து கூலிப்படையை அழைத்து வந்து யூசுப்பை தீர்த்துக்கட்டியது தெரியவந்துள்ளது.

கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் அடித்துக் கொலை…!!! அதிர்ச்சி சம...

Quick Share

பட்டுக்கோட்டை அருகே கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கார்காவயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் இவருக்கு சுந்தரி என்ற மனைவியும் சண்முகப்பிரியா, கௌசல்யா, சந்தியா, கௌசிகா என்ற நான்கு மகள்களும், ராஜா வசந்த சேகரன் (15) என்ற ஒரு மகனும் உள்ளனர். இதேபோல் சக்திவேல் வீட்டின் அருகேயே வசித்து வருபவர் குபேந்திரன் – சரோஜா தம்பதியினர். இவர்களுக்கு குருபிரவு (28) என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சக்திவேல் மகன் ராஜா வசந்த சேகரனை, குபேந்திரன் மகன் குரு பிரபுவும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டால் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு குடும்பங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் மீண்டும் இன்று சக்திவேல் குடும்பத்திற்கும் குபேந்திரன் குடும்பத்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இரண்டு குடும்பத்திற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இந்த கைகலப்பு சண்டையில் சக்திவேலின் மகள் சண்முகப்பிரியாவை, குபேந்திரன், அவரது மனைவி சரோஜா மற்றும் அவர்களுடைய மகன் குருபிரபு ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மண்வெட்டியால் தலையில் தாக்கியதில் சண்முகப்பிரியா சம்பவ இடத்திலிருந்து பரிதாபமாக உயிரிழந்தார். சண்முகப்பிரியாவை காப்பாற்ற சென்ற அவரது இரண்டு சகோதரிகளையும் குபேந்திரன் மற்றும் குரு பிரபு தாக்கியதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து பட்டுக்கொட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் பெரியசாமி மற்றும் போலீசார் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்த சண்முகப்பிரியாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த சண்முகப்பிரியாவின் சகோதரிகளையும் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் குபேந்திரன் சரோஜா மற்றும் குரு பிரபு ஆகிய மூவரையும் கைது செய்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு மூவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். கிரிக்கெட் விளையாட்டால் ஏற்பட்ட தகராறில் ஒரு இளம் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

41 ஆண்டுகளுக்கு முன் தத்து கொடுக்கப்பட்ட மகனை சந்தித்த தாய் !! மொழி புரியாமல் பரிமாறிய ...

Quick Share

40 ஆண்டுகளுக்கு முன்னர் தத்து கொடுத்த பெற்றோரை தேடி அ லைந்த டென்மார்க் மகன் தற்போது தாயைக் கண்டுபிடித்து அவர்களுடன் சேர்ந்த நிகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் கலியமூர்த்தி, தனலட்சுமி தம்பதிகளின் மகன்கள் டேனியல் ராஜன் மற்றும் டேவிட் சாந்த குமார்.

குடும்ப வருமையின் காரணமாக கடந்த 1979ம் ஆண்டு சென்னைக்கு குடியெர்ந்த தம்பதி பல்லாவரத்தில் உள்ள காப்பகத்தில் இரண்டு மகன்களையும் சேர்த்துள்ளனர்.இதனையடுத்து குறித்த இரண்டு பேரையும் டென்மார்க்கை சேர்ந்த தம்பதிகள் தத்தெடுத்து வளர்த்துள்ளனர். தனது மகனின் சிறுவயது புகைப்படத்தினை வைத்து கலியமூர்த்தி தம்பதிகள் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் டேவிட் தனது தாயும், தானும் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தினை வைத்துக்கொண்டு இந்தியாவில் பல இடங்களில் தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் தத்தெடுத்துச் சென்ற குடும்பத்தினர் டேவிட் சாந்த குமார் என்ற பெயரை டேவிட் கில்டென்டல் என்று மாற்றியதுடன் மகனை நன்றாக படிக்க வைத்து அவரை பங்கு சந்தை நிறுவனத்தில் வேலைக்கும் அமர்த்தியுள்ளனர்.

டேவிட் திருமணம் செய்து இரண்டு மகள்களுடன் டென்மார்க்கில் வசித்து வந்த நிலையில், சென்னையில் தனது நண்பர் ஒருவரை காண்பதற்கு வந்துள்ளார். வந்த இடத்தில் தனது உருவஅமைப்பு தமிழர்கள் போல் இருப்பதை உணர்ந்த டேவிட் தனது வளர்ப்பு பெற்றோரிடம் விசாரித்த பின்பு உண்மை தெரியவே, இந்தியாவிற்கு வந்துள்ளார்.

இந்தியா வந்த பின்பே தனது அண்ணனும் டென்மார்கில் தான் தத்துகொடுக்கப்பட்டுள்ளார் என்பதையும் அறிந்த டேவிட் இரண்டு பேரை தேடி அ லைந்ததுடன் கையில் இருந்த புகைப்படத்தினையும் வெளியிட்டிருந்தார்.
தனது அண்ணனைக் கண்டுபிடித்த நிலையில் தற்போது தனது தாயினைக் கண்டுபிடித்த டேவிட், பாசத்தில் க ண்ணீர் மல்க கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொண்டுள்ளது காண்பவர்களின் கண்களை குளமாக்கியுள்ளது. மொழி புரியாமல் தாயும், மகனும் பேசிய உணர்ச்சிப்பூர்வமான காட்சியினை அக்கம்பக்கத்தினர் கண்டு கண் கலங்கியுள்ளனர்.

மருத்துவமனையில் 40 வயது பெண்ணிடம் இளைஞர் செய்த சேட்டை..,செருப்பால் வெளுத்து வாங்கிய சம்...

Quick Share

சமீபகாலமாக பாலியல் சீண்டல் அதிகமாகி வருகிறது. ஊரடங்கு நேரத்தில் பொது இடங்களில் பாலியல் சீண்டல்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் சற்று குறைவானது. தற்போது மக்கள் தளர்வு கொடுக்கப்பட்ட ஊரடங்கை விட்டு வெளியே வர தொடங்கிவிட்டதால் பொது இடங்களில் பாலியல் சீண்டல் அதிகமாகிவிட்டது. வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் என மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாகக் காணப்படும்.

மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்கு அருகே உள்ள சிகிச்சை மற்றும் செக் அப் செய்வதற்காக பலர் வந்துள்ளனர். அங்கு 40 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவரிடம் வெகு நேரமாக இளைஞர் ஒருவர் சுற்றிக் கொண்டு வளைத்து சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.

ஒருகட்டத்தில் 40 வயது பெண்ணிடம் நெருங்கி அந்த இளைஞர் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. எரிச்சலடைந்த பெண் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற =இளைஞரை பிடித்துச் செருப்பால் வெளுத்து வாங்கினார். மருத்துவமனையில் இருந்த காவலரிடம் அந்த வாலிபரை ஒப்படைத்தார். பாலியல் சீண்டலில் ஈடுபட இளைஞரை காவலர்கள் அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபர் கண்ணமங்கலம் அடுத்த கம்பம் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் என்பது தெரியவந்தது. நோயாளிகள் சிகிச்சைக்காகவும், செக் அப் செய்வதற்காக வரும் நோயாளிகளிடம் இப்படி சீண்டலில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது.




You cannot copy content of this Website