இந்தியா

தலையில் கிரிக்கெட் பந்து தாக்கி 15 வயது மாணவி உயிரிழப்பு! பயிற்சியின்போது விபரீதம்

Quick Share

இந்திய மாநிலம் கேரளாவில் 15 வயது மாணவி கிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கிரிக்கெட் பந்து

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவி தபஸ்யா. இவர் கேரளாவின் மலப்புரத்தில் உள்ள கோட்டக்கலில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டார். 

அப்போது எதிர்பாராத விதமாக கிரிக்கெட் பந்து தபஸ்யாவின் தலையில் தாக்கியுள்ளது. இதில் மயங்கி விழுந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

பின்னர் அவர் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனாலும் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. 

பரிதாபமாக உயிரிழப்பு

அதன் பின்னர் தபஸ்யாவின் குடும்பத்தினர் அச்சிறுமியை மகாராஷ்டிராவுக்கு கொண்டு சென்றுள்ளனர். 

இந்நிலையில் தபஸ்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

கிரிக்கெட் பந்து பட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    

 

நீதா அம்பானியின் தங்க, பிளாட்டினம் டீ கோப்பை – அதன் விலை எவ்வளவு தெரியுமா?

Quick Share

கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மனைவியும் பிரபல சமூக ஆர்வலருமான நீதா அம்பானி ஆடம்பரமான வாழ்க்கையின் மூலம் அனைவரது பேச்சுப்பொருளாகி வருகிறார்.அந்தவகையில் தற்போது முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி காலையில் அருந்து டீ கோப்பையின் மதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதா அம்பானி அரியவகை டீ கோப்பை

நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரையும் போலவே தனது நாளை ஒரு கோப்பியுடன் நீதா அம்பானி ஆரம்பிக்கிறார். இவருக்கு ஆடம்பரமான தேநீர் கோப்பையில் தான் டீ வழங்கப்படுகிறது. 

பணக்கார மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வழிநடத்தும் நீதா அம்பானி, தான் பயன்படுத்தும் பாத்திரங்களையும் தனது நிகர மதிப்பிற்கு இணையாக வைத்திருக்கிறார்.

குறித்த டீ ஆனது அவருக்கு ரூ. 3 லட்சம் டீ கோப்பையில் பரிமாறப்படுகிறது.

ஜப்பானின் பழமையான கிராக்கரி நிறுவனமான நோரிடெக் தயாரித்த கோப்பையில் நீதா அம்பானி தேநீர் அருந்துகிறார்.

இந்த பழங்கால டீ செட் ஒவ்வொரு கோப்பையும் ரூ.3 லட்சத்திற்கும் மேல் விலை கொண்டது.

பழங்கால ஜப்பானிய கிராக்கரி பிராண்டின் மொத்த தேநீரின் விலை ரூ.1.5 கோடிக்கு மேல் இருக்கும்.

தேயிலை பெட்டியின் மொத்த விலை ரூ. 1.5 கோடிக்கு மேல் இருக்கும் நிலையில், நீதா அம்பானியின் வீட்டின் ஒவ்வொரு டீக்கப்பின் விலையும் சுமார் ரூ.3 லட்சம் ஆகும்.

ஒவ்வொரு தேநீர் கோப்பையும் சீனாவில் தயாரிக்கப்படுகிறது, மேலும் தங்கம் மற்றும் பிளாட்டினம் பூசப்பட்டிருக்கும்.

நீதா அம்பானி தனது விலையுயர்ந்த மற்றும் தனித்துவமான ஆடைகள் மற்றும் டிசைனர் பாகங்கள் காரணமாக அடிக்கடி செய்திகளில் இருப்பார்.

40 லட்சம் விலை கொண்ட உலகின் மிக விலையுயர்ந்த சேலையின் உரிமையாளரும் ஆவார்.

அவரது மகள் இஷா அம்பானி தனது திருமணத்தில் உலகின் விலையுயர்ந்த லெஹெங்காவை அணிந்திருந்தார், அதன் விலை 90 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 

2025 உலகின் சிறந்த சுற்றுலா பயண இடங்கள்: பட்டியலில் 2ம் இடம் பிடித்த புதுச்சேரி!

Quick Share

2025ம் ஆண்டின் சிறந்த பயண இடங்களுக்கான லோன்லி பிளானெட்டின் (Lonely Planet) பட்டியலில் உலக அளவில் புதுச்சேரி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அமைதியான கடற்கரை நகரமான புதுச்சேரி, லோன்லி பிளானெட்டின்Lonely Planet) பிரபலமான 2025 சிறந்த பயண இடங்களின் பட்டியலில் இடம்பிடித்து இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியலில், உலகின் சிறந்த இடங்களை கொண்டாடும் வழக்கம் உள்ளது.

அந்த வகையில் இதில் டாப் இடங்களில் புதுச்சேரி 2ம் இடம் பிடித்துள்ளது. மேலும் புதுச்சேரி இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய இடமாகும்.

2025 சிறந்த பயண இடங்கள் பட்டியலில் 30 அற்புதமான இடங்களை நகரங்கள், நாடுகள் மற்றும் பகுதிகள் என வகைப்படுத்தி விரிவாக விளக்குகிறது.

பிரான்ஸின் துலூஸ்(Toulouse) நகரம் நகரங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், புதுச்சேரி இந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகத் திகழ்கிறது.

லோன்லி பிளானெட்டின் கூற்றுப்படி, பிப்ரவரி மாதம் புதுச்சேரியைப் பார்வையிட சிறந்த நேரமாகும். குளிர்ந்த, வறண்ட காலநிலை சுற்றுலா, கடற்கரை ஓய்வு மற்றும் கலாச்சார மூழ்கலுக்கு ஏற்றதாக உள்ளது.

எனவே, நீங்கள் 2025-ம் ஆண்டுக்கான உங்கள் பயணத் திட்டத்தை திட்டமிட்டு வருமானால், புதுச்சேரிக்கு செல்லுங்கள்.

முன்னாள் பிரெஞ்சு காலனி நகரமான புதுச்சேரி தனது தனித்துவமான கவர்ச்சியையும் ஐரோப்பிய செல்வாக்கையும் இன்றும் தக்க வைத்துள்ளது.

வைர வியாபாரியின் செயல்…11,000 வைரங்கள் பதித்து உருவாக்கிய டாடா புகைப்படம்!!

Quick Share

பல ஆயிரம் வைரங்களை பதித்து உருவாக்கப்பட்ட ரத்தன் டாடா புகைப்படம் இன்ஸ்டாகிரா மில் வைரலாகி அது பல லட்சம் இணையவாசிகளின் இதயங்களை வென்று சாதனை படைத்து உள்ளது. 

குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேரந்த வைர வியாபாரி ஒருவர் ரத்தன் டாடா மீது பேரன்பு கொண்டவர். ரத்தன் டாடா மறைவுக்கு தனித்துவமான முறையில் அஞ்சலி செலுத்த நினைத்த அவர், 11,000 அமெரிக்க வைரங்களை பதித்து ரத்தன் டாடா உருவத்தை உருவாக்கி அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இதற்கு, இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வீடியோவை இதுவரை 5.5 லட்சம் பேர் லைக் செய்ததுடன், ஆயிரக்கணக்கானோர் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர். ரத்தன் டாடா என்ற தன்னிகரில்லா தலைவரை பெருமைப்படுத்த இந்த 11,000 வைரங்கள் போதுமானதாக இருக்காது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வேறு சிலர் ரத்தன் டாடாதான் உண்மையான வைரம் என்று கூறி அவரை பெருமைப் படுத்தியுள்ளனர்.

இன்னும் சிலர், அந்த 11,000 வைரம் ரத்தன் டாடா என்ற ஒரு வைரத்துக்கு ஈடாகாது என பதி விட்டு ரத்தன் டாடா மீது தங்க ளுக்குள்ள அன்பை வெளிப்படுத் தியுள்ளனர். தன்னலம் கருதாது பிறர் நலத்துக்காக கோடி கோடியாய் அள்ளிக்கொடுத்து வாழ்ந்து மறைந்த ரத்தன் டாடாவுக்கு இதுவரை இல்லாத வகையில் நெட்டிசன்கள் தங்களது அன்பை, அஞ்சலியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நூறு நாட்களில் 100 மாரத்தான் போட்டிகளில் ஓடிய கனடியர்!

Quick Share

கனடாவின் ஹிப் ஹாப் இசை கலைஞர் ஒருவர் 100 நாட்களில் 100 மாரத்தான் ஓட்ட போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். குறித்த நபர் சுமார் 4200 கிலோ மீட்டர் தூரத்தை ஓடியுள்ளார். மக்கள் மத்தியில் ஆண்களின் உளச்சுகாதாரம் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த போட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார்.

பிரபல ஹிப்போப் கலைஞர் டிலான் கிங் என்ற 32 வயதான கலைஞரே இவ்வாறு 100 மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அவர் இவ்வாறு நூறு மாரத்தான் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

ஆண்கள் தங்களுடைய பிரச்சனைகளை வெட்கமின்றி வெளியே சொல்வதற்கான ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருளுக்கு அடிமையாக நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்த கிங் அதிலிருந்து விடுபட்டு மக்களை தெளிவூட்டும் வகையில் தற்பொழுது மாரத்தான் ஓட்ட போட்டிகளில் பங்கேற்ற வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக பசி குறியீட்டில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இடம்!

Quick Share

உலக பசி குறியீட்டில் (GHI) இந்தியா 105-வது இடத்தை பிடித்துள்ளது. 2024ம் ஆண்டுக்கான உலக பசி குறியீடு வெளியாகியுள்ள நிலையில், அதில் இந்தியா 105வது இடத்தை பிடித்துள்ளது. இது தீவிரமாக கவனிக்கபட வேண்டிய பிரிவுக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது. கான்சர்ன் வேர்ல்டுவைடு(Concern Worldwide) மற்றும் வெல்டங்கர்ஹில்ஃப(Welthungerhilfe) ஆகிய இரண்டு அமைப்புகளால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, பல நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான பசி பிரச்சனையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த உலக பசி குறியீடு மதிப்பீடானது, பசியின்மை, குழந்தை இறப்பு மற்றும் குழந்தை வளர்ச்சி குறைபாடு ஆகியவற்றை அளவிடும் GHI, நாடுகளை 0 முதல் 100 வரையிலான அளவில் வரிசைப்படுத்துகிறது.

இதில், இந்தியா 27.3 மதிப்பெண்களுடன் 105வது இடத்தை பிடித்து இருப்பதுடன், இந்தியாவில் நிலவும் கடுமையான பசி நிலையை வெளிப்படுத்தியுள்ளது.

பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற அண்டை நாடுகள் தங்களது தரவரிசையை மேம்படுத்தியுள்ள நிலையில், இந்தியா தொடர்ந்து “பயங்கரமான” பிரிவில் நீடித்து வருகிறது.

பசியின்மை, குழந்தை வளர்ச்சி குறைபாடு மற்றும் அதிக குழந்தை இறப்பு விகிதங்கள் போன்ற காரணிகளே இதற்கு காரணம் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

உலகளவில், 700 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தினமும் பசியால் அவதிப்படுகின்றனர், மேலும் கிட்டத்தட்ட 3 பில்லியன் மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை.

காசா, சூடான் மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு போன்ற பகுதிகளில் ஏற்பட்ட போர்கள் உணவு நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளன.

இறந்த மகனின் விந்தணுவுக்கு உரிமை கோரும் பெற்றோர்: நீதிமன்றம் வழங்கிய புதிய தீர்ப்பு!

Quick Share

இறந்த மகனின் விந்தணுவுக்கு உரிமை கோரும் பெற்றோரின் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் புதிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இந்திய தலைநகரான டெல்லியைச் சேர்ந்தவர் ப்ரீத் இந்தர் சிங் (30). இவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இவர், புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு முன்பாக தனது விந்தணு மாதிரியை உறையவைத்து அதற்கான நிறுவனத்தில் கொடுத்து சேமித்து வைத்துள்ளார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி ப்ரீத் இந்தர் சிங் உயிரிழந்துள்ளார். இதனால், அவர் சேமித்து வைத்திருந்த விந்தணு மாதிரியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவருடைய பெற்றோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கினை நீதிபதி பிரதீபா சிங் விசாரித்தார். அப்போது அவர், “இறந்த நபரின் விந்தணுவை சொத்தாக பாவிக்க முடியும் என்றும், இந்துமத சொத்துரிமை சட்டத்தின்படி பெற்றோருக்கு மகனின் சொத்தில் முதல் உரிமை உள்ளது என்றும் கூறி இறந்த மகனுடைய விந்தணுவை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இந்த விந்தணுவை பெறும் ப்ரீத் இந்தர் சிங்கின் பெற்றோர், வாடகை தாய் மூலம் குழந்தை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ரத்தன் டாடாவை தத்தெடுத்து வளர்த்தது யார் தெரியுமா?சிலிர்க்க வைக்கும் கதை!

Quick Share

ரத்தன் டாடா உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி புதன்கிழமை அன்று மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவருடைய இறப்பு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகின்றது.

ரத்தன் டாடா1937 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் மும்பையில் பார்சி குடும்பத்தில் பிறந்தார் இவருடைய பெற்றோர் நேவல் டாடா மற்றும் சூனி கமிசாரியட். ரத்தன் டாடாவிற்கு 10 வயது ஆன பொழுது அவர்களுடைய பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு அவருடைய பாட்டி நவாஸ் பாய் டாடா ஜே என் பெட்டிஸ் பாரிஸ் அனாதை இல்லம் மூலம் அவரை முறையாக தத்தெடுத்துக்கொண்டார்.

அதன் பிறகு நேவல் டாடா மற்றும் சிமோன் டாடாவின் மகனாகவே வளர்ந்தார். தனது பள்ளி படிப்பு மற்றும் கல்லூரி படிப்பை முடித்த நிலையில் 1962 ஆம் ஆண்டு ரத்தன் டாடா டெல்கோவில் பணிபுரிந்தார். அதன் பிறகு சுண்ணாம்புக்கல்லில் பணிபுரிந்த டாடா ஸ்டீலில் பணிபுரிந்து தனது பயணத்தை தொடங்கினார்.

ரத்தன் டாடாவின் பணி

குவாரிகள் மற்றும் குண்டுவெடிப்பு உலை குழுவின் உறுப்பினராக 1989 ஆம் ஆண்டு சேர்ந்தார், அதன் பிறகு டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஜே ஆர் டி டாடாவின் வாரிசாக மாறிய ரத்தன் டாடா 1991 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார்.

அதன் பிறகு ஓய்வு பெற்ற நிலையில் டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் தலைவராக பணியாற்றினார். இவர் பணியாற்ற தொடங்கிய நாள் முதல் டாட்டா குழுமத்தின் வருவாய் உயர்ந்தது கடந்த 2011 மற்றும் 12 ஆம் நிதியாண்டில் 100 பில்லியனை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

ரத்தன் டாடா மறைவு

ரத்தன் டாடா ஆடம்பரமான வாழ்க்கை சூழலில் வளர்ந்தாலும் இவர் அடக்கமாகவே இருந்தார் ஆறு கண்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டாடா குழுமம் இயங்கி வந்த நிலையில் அதனை வழிநடத்தி வந்தார். இவருடைய பணிவு அவருக்கு வெற்றியை தேடி தந்தது மேலும் வாகனம், பொறியியல் மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் வணிகங்களை கொண்ட டாடா நிறுவனங்கள் உலக அளவில் 8000,000 பேருக்கு மேல் வேலை செய்து வருகின்றனர். மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபரின் மனித நேயம்…அள்ளி அள்ளி கொடுத்த ரத்தன் டாடா: கதறும் ஊழியர்கள்…

Quick Share

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரின் மறைவு செய்தியை அறிந்து தொழில் துறையில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கலங்கியுள்ளனர். எந்தவொரு தொழிலதிபதிருக்கும் இல்லாத அளவு ரத்தன் டாடாவை பொதுமக்கள் அனைவரும் நேசித்தனர். அந்தளவிற்கு இவர் இதயங்களை வென்றுள்ளார்.

நேற்றைய தினம் (அக்டோபர் 9) மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கல் வெளியானது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்த சமயத்தில் ‘வழக்கமான மருத்துவ பரிசோதனைதான்’ என தனது தெரிவித்து இருந்தார் ரத்தன் டாடா.

இந்நிலையில் தான் நேற்று இரவு காலமானார் ரத்தன் டாடா. அவருக்கு வயது 86. அவரின் மறைவை தொடர்ந்து ரத்தன் டாடாவின் உதவும் குணம், மனித நேயம் குறித்து அனைவரும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு கலங்கி வருகின்றனர். ஆண்டுதோறும் ரத்தன் டாடா நன்கொடைகளை அள்ளி கொடுத்துள்ளார். டாடா நிறுவனம் சார்பாக ஏராளமான அறக்கட்டளைகளுக்கு கோடிக்கணக்கான நன்கொடைகள் வாரி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக ஏராளமானவர்கள் பயன் அடைந்துள்ளனர். இந்தியாவில் கல்வி, மருத்துவம், குடிநீர், விவசாய துறைகளுக்கு ரத்தன் டாடா நன்கொடைகளை வழங்கியுள்ளார். தனது நிறுவனத்தின் வாயிலாக கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் கல்வி, மருத்துவம், விவசாயத்துக்கு தேவையான உதவிகளை செய்து தந்துள்ளார் ரத்தன் டாடா.

தான் படித்த கார்னெல் பல்கலைக்கழத்தில் இந்தியர்கள் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ரத்தன் டாடாவிற்கு அதிகமாகவே இருந்தது. தனது சொந்த பணத்தை கார்னெல் பல்கலைழக்கத்துக்கு வழங்கி பலரின் மேல்படிப்புக்கு உதவி செய்தார். குறிப்பாக கொரோனா சமயத்தில் ரூ.500 நன்கொடையாக வழங்கி வியக்க வைத்தார் ரத்தன் டாடா.

மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மறுவாழ்வுக்காக ‘தாஜ் பொது சேவை நல அறக்கட்டளையை துவங்கி உதவினார். இவ்வாறு பல்வேறு தருணங்களில் சமூகத்திற்கு தனது பங்களிப்பை கொடுப்பதில் ரத்தன் டாடா தவறியதே இல்லை. இதனாலே தொழிலதிபர் என்பதை மனிதநேயமிக்க மனிதராக அடையாளப் படுத்தப்படுகிறார். இவ்வுலகை விட்டு மறைந்தாலும் சமூகத்தின் மீது கொண்டிருந்த அன்பால், அக்கறையால் எப்போதும் ரத்தன் டாடா நினைவு கூறப்படுவார்.

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மொத்த சொத்து மதிப்பு… அவரின் அடுத்த வாரிசு

Quick Share

எந்த விவாதங்களிலும் சிக்காத, ஒட்டு மொத்த இந்திய மக்களும் கொண்டாடும் தொழிலதிபரான ரத்தன் டாடா தமது 86வது வயதில் மரணமடைந்துள்ளார்.

செல்வந்தர்களில் ஒருவராக

பணிவு, தொலைநோக்கு மற்றும் பரோபகாரம் ஆகியவற்றால் குறிக்கப்பட்ட டாடாவின் பாரம்பரியம், நாட்டில் அழியாத முத்திரையை பதித்துள்ளது. டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா இந்தியாவின் செல்வாக்கு மிக்க தொழிலதிபராகவும் அறியப்படும் செல்வந்தர்களில் ஒருவராகவும் இருந்தார்.

அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ 3,800 கோடி என்றே 2022ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் கூறப்படுகிறது. சுமார் 66 சதவிகித சொத்து என்பது டாடா அறக்கட்டளை மற்றும் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்தே திரட்டப்பட்டுள்ளது. 

டாடா குழுமத்தின் ஒரு பிரிவான டாடா அறக்கட்டளை என்பது நீண்ட காலமாக கல்வி, சுகாதாரம் மற்றும் பிற தொண்டு நிறுவன சேவைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. டாடா குழுமத்தின் வருவாய் என்பது அதன் அறக்கட்டளையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், ரத்தன் டாடாவின் சொத்து மதிப்பு என்பது மிகவும் குறைவாகவே மதிப்பிடப்படுகிறது.

ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளாததாலும், அவருக்கு வளர்ப்பு பிள்ளைகள் என எவரும் இல்லாததாலும், டாடா குழுமத்தின் அடுத்த வாரிசு யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சகோதரர் நோயல் டாடா

வெளிவரும் தகவல்களின் அடிப்படையில் ரத்தன் டாடா தனது ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடாவுடன் வலுவான பிணைப்பைக் கொண்டிருந்தார், அவர் பெரும்பாலும் வாரிசாகக் கருதப்படுவார் என்றே கூறபப்டுகிறது.

ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடா, டாடா குழுமத்தில் செல்வாக்கு மிக்கவர். இவரது மகள் லியா டாடா, டாடா குழுமத்தின் ஹொட்டல் வணிகத்தை முன்னெடுத்து நடத்துகிறார்.

ரத்தன் டாடா போன்றே லியாவும் தனது திருமணம், குடும்பம் உள்ளிட்ட தகவல்களை இதுவரை வெளிப்படுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மரணம்!

Quick Share

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக உடல்நிலை மோசமான நிலையில், இன்று மரணமடைந்துள்ளார். சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா தமது 86வது வயதில் மரணமடைந்துள்ளார். புத்திசாலித்தனம், தொலைநோக்கு பார்வை மற்றும் பணி நெறிமுறைகளுக்கு பெயர் பெற்ற ரத்தன் டாடா, தனது குடும்ப வணிகத்தை சர்வதேச சாம்ராஜ்யமாக மாற்றியுள்ளார்.

இவரது பதவிக் காலத்தில், டாட்டா குழுமத்தின் வருவாய் பன்மடங்கு அதிகரித்தது. 2011 முதல் 2012-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 100 பில்லியன் டொலர்கள் வருவாய் ஈட்டப்பட்டது.

புகழ்பெற்ற டாடா குடும்பத்தில் 1937ல் பிறந்த ரத்தன் டாடா, 10 வயதில் தனது பெற்றோரை பிரிந்து பாட்டியால் வளர்க்கப்பட்டார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்பு பொறியியல் பட்டம் பெற்றார்.

அத்துடன் ஹார்வர்ட் அட்வான்ஸ்டு மேனேஜ்மென்ட்-இல் பட்டம் பெற்றிருந்தாலும், ரத்தன் டாடா IBM வேலை வாய்ப்பை நிராகரித்தார். 1962 முதல் டாட்டா குழுமத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களிலும் பணிபுரிந்தார்.

இறுதியில் 1971ல் நேஷனல் ரேடியோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு இயக்குநரானார். 1991ல் ஜேஆர்டி டாட்டாவிடம் இருந்து டாடா சன்ஸ் தலைவராகவும், டாட்டா அறக்கட்டளையின் தலைவராகவும் ரத்தன் டாட்டா பொறுப்பேற்றார்.

இவருடைய நிர்வாகத்தின் கீழ் டாட்டா குழுமம் பல்வேறு நிறுவனங்களை கையகப்படுத்தியது. ரத்தன் டாடாவின் புத்திசாலித்தனமான தலைமையின் கீழ் டாடா குழுமம் அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்தத் தொடங்கியது.

சுமார் 100 நாடுகளுக்கும் மேல் விரிவடைந்தது. இதனால் இந்திய தொழில்துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கம் ஏற்பட்டது. 2008ல், இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷண் பெற்றார். அவர் 2000 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது உயர்ந்த விருதான பத்ம பூஷன் விருதைப் பெற்றார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரத்தன் டாடா!

Quick Share

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ரத்தன் டாடா தனது உடல்நிலை தொடர்பான அனைத்து வதந்திகளையும் மறுத்துள்ளார், மேலும் X பதிவில் “எனது உடல்நிலை குறித்து சமீபத்தில் பரவும் வதந்திகளை நான் அறிவேன், மேலும் இந்த கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். நான் தற்போது மருத்துவ பரிசோதனை செய்து வருகிறேன்.”

“கவலைப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. நான் நல்ல மனநிலையுடன் இருக்கிறேன், மேலும் பொதுமக்கள் மற்றும் ஊடக மரியாதை தவறான தகவல்களை பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




You cannot copy content of this Website