“பரம் பிரம்மா சூப்பர் கம்ப்யூட்டர்” பார்வையிட்டார் பிரதமர்…
மஹாராஷ்டிராவில் உள்ள புனேவில் டிஜிபி மாநாட்டில் பங்கேற்ற மோடி பின் புனேவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தை பார்வையிட பிரதமர் மோடி சென்றுள்ளார் . அங்கு விஞ்ஞானிகள் அவரை வரவேற்றனர் அவர்களுடன் மோடி கலந்துரையாடினார் . அப்போது ஆராய்ச்சி கூடத்தில் உள்ள அனைத்தையும் பார்வையிட தொடங்கினார் அவருக்கு விஞ்ஞானிகள் அதைப்பற்றி விளக்கி வழிகாட்டி வந்தனர் .அங்கு விவசாய உயிரிதொழிநுட்பம் முதல் ,பசுமை எரிசக்தி வரை பல்வேறு பொருட்களை அவர் பார்வையிட்டார் . பரம் பிரம்மா என பெயர்சூட்டப் பட்ட சூப்பர் கப்யூட்டரை அப்போது பிரதமர் மோடி பார்வையிட்டார் . மேலும் அதை பற்றி விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினார் .