பொன். மாணிக்கவேல் விசாரணையை தடுத்து நிறுத்துகிறதா தமிழக அரசு? தொடர்ந்து எதிர்ப்புகளை சந...
தமிழக அரசுக்கு எதிராக பொன். மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. மேலும் சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை டிஜிபி-யிடம் ஒப்படைக்கவும் உத்தரவு .
திருச்சியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சிலைகடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன் .மாணிக்கவேல் நியமிக்கப்பட்டிருந்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு வழக்குத்தொடந்து தள்ளுபடியானது. மேலும் தமிழக அரசுக்கும் இவருக்கும் இடையில் பனிப்போர் நிலவி வந்தவண்ணமே உள்ளது. காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க தமிழக அரசுக்கு அக்கறை இல்லை,எந்த ஒரு உத்தரவையும் தமிழக அரசு அமல்படுத்தவில்லை என நேரடியாகவே நீதிமன்ற அவதூறு வழக்கை பொன்.மாணிக்கவேல் தமிழக அரசுக்கு எதிராக போட்டிருந்தார்.
கடந்த நவம்பர் 30ம் தேதி பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து சிலைகடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிலை கடத்தல் ஏடிஜிபி அபய் குமாரிடம் ஒப்படைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. சிலைகடத்தல் அதிகாரியாக என்னை உயர்நீதிமன்றம் நியமித்தது, உச்சநீதிமன்றம் உறுதியளித்தது, எனவே நீதிமன்றங்களின் அனுமதி இல்லாமல் ஆவணங்களை யாரிடமும் கொடுக்க முடியாது என பொன்.மாணிக்கவேல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, பொன்.மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு தரக்கூடாது, அவருக்கு பதில் வேறு அதிகாரியை நாங்கள் நியமிக்கிறோம் எனவும் சிலை கடத்தல் ஆவணங்களை உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க சொன்னால் எங்களுக்கு எதிராகவே நீதிமன்ற வழக்கு தொடர்கிறார், எனவும் உயர் அதிகாரிகளுக்கு கீழ் படிய மறுக்கிறார் எனவும் தமிழக அரசு சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டன. வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம், சிலைகடத்தல் ஆவணங்களை உயர் அதிகாரி ஏடிஜிபி அபய் குமாரிடம் கொடுக்குமாறு உத்தரவிட்டது. மேலும் தமிழக அரசு மீது பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை இடைக்காலத்தடை செய்து உத்தரவிட்டுள்ளது. பொன்.மாணிக்கவலின் பதவியை எதற்காக நீட்டிக்க வேண்டுமென விளக்கம் கேட்டு பொன்.மாணிக்கவேல், டிராபிக் ராமசாமி, ராஜேந்திரன் ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர என்ன அவசியம் எனவும் கேள்வியெழுப்பியுள்ளது.